திங்கள், 30 டிசம்பர், 2013

puthaandu

                                         புத்தாண்டில்  ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!
                                 

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே
...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

* மண்ணில் விழும்
மழைத்துளியும்

விண்ணில் வீசும்

காற்றும்

யாவருக்கும்

பொதுதானே

புத்தாண்டே
!

* நதியால்
இணைந்த

மாநில மக்கள்

அணையால் பிரியும்

அவலமும்

அமிழ்ந்து போகாதோ

புத்தாண்டே
!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்

சுவடு தெரியாமல்

மறையாதோ

புத்தாண்டே
!










* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்

தானமாய் கிடைக்காதோ

புத்தாண்டே
!

* தேசங்களுக்கிடையே
பிரிவினை

முட்கள் சிதைந்து

ஒற்றுமை பூக்கள்

மலராதோ

புத்தாண்டே
!

* ஆட்சியும்
அதிகாரமும்

ஏழைகள்

ஏக்கம் தீர்க்காதோ

புத்தாண்டே
!

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!



R.Parthasarathy

வியாழன், 26 டிசம்பர், 2013

Mr.Mohan

                                     ஆர். மோகனின் 64 காம்  ஆண்டு விழா
                
இன்று  சவேரா ஹோட்டலில்  ஓர்  பிறந்தநாள்  மேடை
திரு. மோகனின்  64 காம் ஆண்டு விழா மேடை !

அகவை அறுபத்து நான்கும்,  ஆய கலைகள் அறுபத்து நான்கும்
                                                                                                       சிறப்புடையதன்றோ  !
இவ்விழாவை தலைமையேற்றி நடத்தும் மகன்களும், மருமகள்களும்
                                                                                      பெருமைக் குரியவர்களன்றோ ! 

இந்திய பிஸ்டனில்  வைஸ் ப்ரெசிடெண்டடாக  இருந்து ஒய்வு பெற்றவரே
 நிறுவனமே அவர் திறமை கண்டு பகுதி நேர  கன்சல்டண்டாக வேலை
                                                                                                                      அளித்தனரே !

மூர்த்தி சிறிதெனினும் ,  கீர்த்திப்  பெற்றார் 1
திறமையுடன் கடினமாக உழைத்து புகழ் பெற்றார் !

வாழை  தன்  கன்றுகளை  விட்டுப்  பிரிவதில்லை 1
இருமகன்களும்  தந்தை  தாயை  விட்டு பிரிவதில்லை !

குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்கும் பரந்த மோகன் உள்ளம் !

காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !

மூன்று எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு ,
முத்தமிழ்  எனும்  பெயருண்டு !

மோகனை கைப்பிடித்த சாந்தாவிற்கு  மூன்று எழுத்து ,
சாந்தவை கைப்பிடித்த  மோகனுக்கும்  மூன்று எழுத்து !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1

உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
திரு மோகன், திருமதி சாந்தாவின்  ஆசி பெறுவோம் !



                                                                   
.
                                                                                       .

புதன், 9 அக்டோபர், 2013

அன்புள்ள காதலியே

                                                            அன்புள்ள  காதலியே


சொல்லவரும்  வார்த்தைகள் காணமல் போகிறது ,
பெண்ணே உன் கண்ணைக்   காணும்போதெல்லாம்!


காதலித்து  கணவனை  கைபிடித்த  நீ வாழ்க பல்லாண்டு,
உன் மனம்  அறியுமோ  நான்  பட்ட  பாடு!

என்னிடமே  தேவையெற்ற   ஊடல் ஏனோ?
உன்னிடம்  மயங்கினாலும் உள்ளத்தால் தடுமாறு கின்றேனோ! 

உன் முல்லை சிரிப்பை உதிர்பாயா
என் நெஞ்சில் ஆசையினை  தூண்டுவாயா?

உன் விழியின்  ஈரம்   சொல்கிறது ,
என் மேல் உள்ள  காதலை !

நெஞ்சில்  காதல் அழகாய்  பூத்ததே , சுகமாய் தாக்குதே
சொல்லாமல் , கொள்ளாமல் மனதில் பந்தாடுதே!

என்னைத்  தேடி  அலையும் உனது ஈரவிழியில்,
வாழ்கிறது நம் காதல், அதிலும் சுகமான காதல்.

ரா.பார்த்தசாரதி

anbulla kanavaney


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்பத்துள் இன்பம்

                                                       இன்பத்துள்   இன்பம்

1.    நோய் இன்றி வாழ்வதில்  ஏற்படும்    இன்பம் !

2.    நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால் ஏற்படும் இன்பம் !

3.    மழலைச்  செல்வங்களால் ஏற்படும் இன்பம் !

4.    நல்ல பக்தி பாடல்களை கேட்கும்போது ஏற்படும் இன்பம் !

5.    பழைய நண்பர்களை சந்திக்கும் போது   ஏற்படும் இன்பம்.!

6.    தானம், தர்மம் செய்வதினால் ஏற்படும் இன்பம் !

7.    ஏழைகளுக்குக்  கொடுப்பதில் ஏற்படும் ஏற்படும் !

8.     பணத்தில் சேமிக்கும் போது ஏற்படும் இன்பம் !

9.     படித்தவுடன்  வேலை கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் !

10.முதன்முதலில் பிறந்த குழ்ந்தையை தாய் பார்க்கும் போது ஏற்படும் இன்பம்!

11.  நற்செயல்களை  செய்யும் போது ஏற்படும் இன்பம்.!

12.  நல்ல நூல்களை படிக்கும் போது ஏற்படும் இன்பம் !

காத்திருந்து  கிடைக்கும்  இன்பம்  நிலையானதே !
காத்திராமல் கிடைக்கும் இன்பம்  நிலையற்றதே !   


சனி, 21 செப்டம்பர், 2013

திருமலை தெய்வம்

                                                      திருமலை தெய்வம்

திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனை  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசினம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

ரா.பார்த்தசாரதி

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

கலி படுத்தும் பாடு

                                                       கலி படுத்தும் பாடு

1.    மனிதனின்  குணம்  பணத்தினால்  மாறுமே !

2.    மனிதனின் பலமும், ஆயீசும்  குறையுமே !

3.    நியாமாகப் பேசினாலும், உரக்க பேசுபவன் சொல்லே எடுபடுமே  !

4    திருமணம் என்றாலே  ஆண், பெண் என்ற நிலை மட்டுமே !

5.   அழகு  என்பது  சிகை  அலங்காரம்  மட்டுமே !

6.     கடவுளிடம்  பக்தி  குறையுமே !

7.    தேனாகப்  பேசி,  பிறரை  ஏமாற்றுபவனே !

8.    பிராமணன்  என்றாலே ஒரு நூல் அணிபவனே !

9.    அரைகுறை வேதம் கற்று, தன்னை பண்டிதன் என சொல்பவனே !

10.   தூய்மைக்கு  ஒரு முறை குளித்தாலே போதும் என நினைப்பவனே !

11.   தன்  பெயர் நிலைக்க ,  தர்மம்  செய்பவனே !

12.   பல  இடங்களில்,   மழை பெய்யாமல்   காயும் !

13.   சில இடங்களில்  வெள்ளம்  புகுந்து  அழியும் !

       இறைவனே  அநிதிகளை  அழிக்க கல்கி அவதாரம் எடுத்து வருவாரே ! 

ரா.பார்த்தசாரதி

சனி, 14 செப்டம்பர், 2013

சிட்கோ தாசில்தார்

                                                   .

உதிர்க்க முடியாத இதழ்கள்!

உதிர்க்க முடியாத இதழ்கள்!

* அன்பே...
அடிக்கோடிட்டு நீ
சொன்ன வார்த்தைகள்
மாக்கோலம் அல்ல
அழிந்து போவதற்கு!

* காட்சி அளிக்கும்படி
கரும்பலகையில்
எழுதி வைச்ச காதல் அல்ல
துடைப்பான் கொண்டு
துடைப்பதற்கு!

* ஒப்பந்தம் போட்டு
உண்டானது இல்லை
உன் நினைவுகள்
உடைந்து போவதற்கு!

* "என்னை நீ மறந்து விடு'
என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது
உன் நினைவுகள்!

* அந்தி மழையின்
மண் வாசனை
அதனின் பங்கிற்கு
உருட்டிச் செல்கிறது
உன் நினைவுகளை!

* என் எழுத்தாணிக்கும்
இயலுவதில்லை
உன் நினைவில்லாமல்
எழுதத் தொடங்குவதற்கு!

* மதுரம் இல்லாத
தேனீர் பருகும் போதெல்லாம்
உன் நினைவுகளை
சேர்த்துக் கொள்கிறேன்!

* உறக்கம் கொள்ளும் போதெல்லாம்
உன் நினைவுகள் என்னை
தின்று தீர்க்கின்றன!

* உன்னுடனான
நினைவுகள்
ஒரு போதும்
உலர்ந்து போவதுமில்லை
உதிர்ந்து போவதுமில்லை!

* ஓடும் உதிரத்திலும்
உன் நினைவுகள்
ஊற்றை விட வேகமானவை!

* அவைகள்
நுழைந்தது
ஒரு வழிப்பாதையில்!

* மறந்து விடுவதற்கோ
 மறைப்பதற்கோ...
மரணம் ஒன்றே
மார்க்கம்!

* அதுவே உனக்கு
சொர்க்கம் எனில்
நாளை மரணம்
என்றாலும்
மகிழ்ச்சியாகவே மரிப்பேன்
உன் நினைவு பிம்பங்களோடு!

மீண்டும் பிறப்பெடுப்பேன்!

மீண்டும் பிறப்பெடுப்பேன்!

* தாயின் ஸ்பரிசத்தை
உன்
அரவணைப்பில் கண்டேன்!

* தந்தையின் நேசத்தை
உன்
கரம் பற்றி
நடக்கையில் கண்டேன்!

* காதலனின் மோகத்தை
உன் காதல் மொழிபேசும்
கண்களில் கண்டேன்!

* கணவனின் கரிசனத்தை
உன்,
"அடியேய்' எனும் ஒற்றை
வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!

* கண்ணீருடன்...
கண்ணியத்துடன்...
ஏற்கிறேன் உன்னை...
என்
உயிர் தோழனாய்!

* மீண்டும் பிறப்பெடுப்பேன்!
தாயாய்...
தந்தையாய்...
காதலனாய்...
கணவனாய்...
நீ காட்டும் அன்பினை
தனிமையிலே  நினைக்க !

ஓற்றுமைப் பூக்கள் மலராதோ !



ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!


* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!

* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல்
மறையாதோ
புத்தாண்டே!


* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்
தானமாய் கிடைக்காதோ
புத்தாண்டே!


* தேசங்களுக்கிடையே
பிரிவினை
முட்கள் சிதைந்து
ஒற்றுமை பூக்கள்
மலராதோ

புத்தாண்டே!

* ஆட்சியும்
அதிகாரமும்
ஏழைகள்
ஏக்கம் தீர்க்காதோ
புத்தாண்டே!


* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஒரு தாயின் தவிப்பு

                                                  ஒரு தாயின் தவிப்பு

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !
நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !
இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !
இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !
உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்தது !
பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !
மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றேன் !

என்று உன்னை ஸ்கைப்பில்  காண்பேனோ 1
உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,
ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !
நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,
என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,
உனது  ஈமெயில், ஸ்கைப்பும் எனது உடலைக் காட்டும்மா !
நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,
பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

ரா.பார்த்தசாரதி



இவள் சுமங்கலிதான்

                                                        இவள் சுமங்கலிதான்

கணவன் இறந்துவிட்டான்
இவள் சுமங்கலி தான்


பொட்டும் இல்லை பூவும் இல்லை
இவள் சுமங்கலி தான்

உடுத்தும் உடை வெண்மை
இவள் சுமங்கலி தான்


கழுத்தில் தாலியும் இல்லை
காலில் மெட்டியும் இல்லை
இவள் சுமங்கலி தான்


சமுதாயம் இவளை விதவை என்றாலும
இவள் சுமங்கலி தான்

ஏனென்றால் இவள் பெயர் சுமங்கலி

கடவுள் இவளை சுமங்கலி என்று
நினைத்துவிட்டான் அதனால்தான்
எல்லோரும் அழைக்கும் வண்ணம்
இவள் பெயரை சுமங்கலி என மாற்றிவிட்டான்

இவள் என்றும் இவள் சுமங்கலி தான்!!!.....
இவள் சுமங்கலி தான்!!....


ரா.பார்த்தசாரதி

வியாழன், 12 செப்டம்பர், 2013

தேவதாஸ்

                                                                தேவதாஸ்

செய்யும் தொழிலே  தெய்வம் எனக்  கருதிடுவார் !
தன்னலமின்றி  பிறர்க்கென என்றும் உழைத்துடுவார் !

லகுவாக  என்றும்  எந்திரங்களை  இயக்கிடுவார் !
லாரன்ஸ்  என்ற பெயரையும்  வைத்திடுவார் 1

கடன் என்றாலே காத தூரம்  நின்றிடுவார் !
கடன்  இல்லாமலே  நிர்வாகம் செய்துடுவார் !

தேவனுக்கு  தாசன்  என நினைத்திடுவார் !
தேவதாஸ் எனும்  பெயரைப் பெற்றிடுவார் !

நவமணியின்  ஒளி  என்றும்  காண்போர்க்கு சிறப்பாகும் !
தவமணியின் தவப்புதல்வனின் செய்தொழில் போற்றப்படுவதாகும் !

புதுமையை  எண்ணி  புன்னகைப்  பூத்திடுவார்!
இருப்பதைக்  கொண்டே  வளம்பெற நினைத்திடுவார் !

நல்லதையும், நியாத்தையும் என்றும் உரைத்திடுவார் !
வேற்றுமையில்  ஒற்றுமையுடன் சிட்கோவில் வாழ்ந்திடுவார்.! 


ரா.பார்த்தசாரதி
 

புதன், 4 செப்டம்பர், 2013

vijay thirumana vazhthu madal

                                       



                                     விஜெய் திருமண வாழ்த்து மடல்          

   இடம்: அண்ணாநகர்                                                            தேதி:02 -12-2019

1. இன்று அண்ணாநகர் விஜயஸ்ரீமஹாலில்  ஓர் கல்யாண மேடை 
   இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை,

2.இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. புனேயில் பணிபுரிந்து கொண்டு  வாழ்க்கைத் துணை நாடும் விஜய்                                                                                                                     எனும்             ஆடவனே
    என்றும் நீயும் ரேஷ்மியும்   வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

4. திருமணம் என்பது  இருமனம்   அல்ல !
     அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம்.!

5.  திருமணம்  என்றாலே உற்றார் உறவினர்  வாழ்த்துக்களே 
     அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  வாழ்துக்களே   !

6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8. மகள் இல்லாத வீட்டில், மருமகளே  என்றும்  மகளாவாள்,
    மணமகன்,  புகழிற்கும்,குலத்திற்கும் அவளே துணையாவாள்!

9. கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
 
10. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
     கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

13.  இருவீட்டாரும்  ஒன்றுகூடி மகிழ்ந்து விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற மனமாற  வாழ்த்தினோம் !

14. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.

     ரா.பார்த்தசாரதி .


       

மஹா சம்ரோக்ஷனம் - களியப்பேட்டை

களியப்பேட்டையில் இன்று, செண்பகவல்லி சமேத கார்வனதுள்ளன்

                                                                                                          மஹா  சம்ரோக்ஷனம்,
சம்ரோக்ஷனம்  செய்வதே தாயாரும், பெருமாளும் சக்தியும், மேன்மையும்
                                                                                                             அடையும்  தருணம் !

களியப்பேட்டையிலும், காஞ்சியிலும், காட்சிதரும் திருகார்வானனே,
வேண்டியதை, வேண்டியர்வர்களுக்கு  அளித்திடும்  இறைவனே !

தெய்வங்கள்  பலவாயினும், பலவுருவமானாலும் குணங்கள் ஒன்றே,
களியப்பேட்டையிலும், திருவெள்ளறையில் காட்சிதரும் செண்பக தாயாரும்
                                                                                                                                  ஒன்றே !

கார்வானத்தினாய், முகில்வண்ணனாய், விளங்கும் வேணுகோபலனே ,
இனிய  கானம்  வேய்ந்குழலில்  இசைத்திடும்   வேணுகோபலனே !

ருக்மணி, சத்யபாமா  சமேத   வேணுகோபாலன் சந்நிதி ,
இது  பக்தர்களுக்கு  தந்திடுமே  மனநிம்மதி !

மனிதனை  புனிதம்  ஆக்குவது  தெய்வதரிசனம் ,
மனதில்  சலனம்  போக்குவது   தெய்வதரிசனம் !

வேற்றுமையில்  என்றும்  நாம் ஒற்றுமை  காண்போம்,
வேற்றுமையில்லா  இறைவனை  என்றும் நாம் துதிப்போம்!

ரா. பார்த்தசாரதி
  

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கவனமாய் இருப்போம்

கவனமாய் இருப்போம் 

வெள்ளிச்சம்  வந்தால், இருள் விலகும் ,
தர்மம் செய்வதால், வந்திடும் இன்பம் !

இதயத்தில், அன்பு நிறைந்தால் , வன்மம் வெளியேறும்,
இரக்கம் நிரம்பினால் கோபம் வெளியேறும் !

பொறுமை நிரம்பினால், பொல்லாங்கு வெளியேறும் ,
பிறர்நலம், பேணினால், தன்னலம்  வெளியேறும்  !

இன்மொழி நிரம்பினால், வசைமொழி வெளியேறும்,
துணிவு ஏற்பட்டால்  அச்சம் வெளியேறும்! ,

நேர்மை நிரம்பினால், கயமை வெளியேறும்,
திருப்தி அடைந்தால், பொறாமை வெளியேறும்!

முயற்ச்சி  செய்தால், தடைகள் வெளியேறும்,
தோழமை கொண்டால், பகைமை வெளியேறும் 1

 வெளியேற்றபட   வேண்டியதை கணக்கில் எடுத்து,
நிரப்புவதிலே    என்றும்    கவனமாய்   இருப்போம்!

ரா. பார்த்தசாரதி
 



திங்கள், 26 ஆகஸ்ட், 2013

வாலி

                                                                         வாலி

புவியில்  புனைபெயர்  கொண்ட  வாலியே ,
நின் புகழ்  திரைஉலகில்  ஓங்கியே !

உனது பாட்டெல்லாம் பாரினில் பரவியே,
உன்னால் பின்னணி பாடகர்களுக்கும் பெருமையே !

பதினைந்தாயிரதிற்குமேல்   பாடல் எழுதிய பாடலாசிரியனே,
திரையுலகில்  நீ  ஒரு  சகாப்தம்தானே !

 இன்று   நீ   இல்லா   தமிழ்  நாடு
 இன்று     நிழல்    இல்லாத வீடு !

நந்தா விளக்கே  கவிஉலகின்  ஒளிவிளக்கே! 
உயர்ந்த சிந்தனை, அஞ்சாமை இவ்வுருவமே  வாலி !

உன் திரைபட    பாடல்கள்  தலைமுறைக்கும் அவணி  ஆளுமே!
உன் பாட்டென்றால் பாமரனின் நெஞ்சத்தையும் அள்ளுமே !

உன்னோடு முடிந்ததோ  காதல் காவியம்
இனி  எவர் படைப்பார்  கவிதை ஓவியம் !

நீ  கல்லறையில் தூங்கினாலும், உன் பாடல்கள் தூங்காது,
உன் பாடலின் இன்னிசையே  என்றும் ஓயாது !

   வாழ்க! வாலியீன் புகழ்!

ரா.பார்த்தசாரதி

 

 

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுதந்திர சிறகுகள்

     
                                                சுதந்திர சிறகுகள்


மனிதனே,  நம்  சுதந்திரம்  பிறர்  பறப்பதற்கா 
நம் சுதந்திரம்,     நம்மை  பிறர்  ஆள்வதற்கா ?

இளைஞ்ர்களே   சிந்தனைச்  சிறகுகள் பறக்கவா 
காதல் சிறையினில் உன்னை  பூட் டிடவா

சிறுவர்களே, வசந்த சிறகுகள்  பறக்கவா, 
திரை அரங்கிலே  என்றும் தொலைத்திடவா?

வாக்களர்களே,   உங்கள் வாக்குசீட்டு எனும் அட்சயபபாத்திரத்தை ,
அரசியில்வாதியிடம்    இலவசமாக கொடுத்துவிட்டிர்களா ?

பாட்டாளி, தோழனே  உன் உழைப்புச் சிறகுகளை,
பண முதலைகளிடம்  சேர்ந்தே அடகு வைத்துவிட்டிர்களா ?

இன்னும், இன்னும், உதிர்ந்திடாத சிறகுகளோ,
நம்  நாட்டில்,  ஏராளம் , ஏராளம்!

இனியாவது, பெற்ற சுதந்திரந்திற்கான  இனிப்போடு ,
பெறவேண்டிய சுதந்திரத்திற்கான  கண்ணீரை பிரசிவிப்போம்!


ரா.பார்த்தசாரதி


.

புதன், 21 ஆகஸ்ட், 2013

காதல் உள்ளங்கள்

                                                             காதல் உள்ளங்கள்

உன்னாலே  உயிர்  வாழ்கின்றேன் ,
உன்  நினைவாலே துடிக்கின்றேன் ,
உன்னை  சந்திக்க  விரும்புகிறேன் ,
முடியாவிடில், கனவில் சந்திக்கின்றேன் !

வானமெனும்  வீதியிலே  வரவேற்றேன்  கனவிலே,
நிலவை, மறைத்தேன்  உன்னை நினைத்தேன் நெஞ்சினிலே ,
தென்றலாய் வந்து என்னை அணைப்பாயா?
என் மனதினிலே வந்து கலந்துவிடுவாயா?

உன் விழிகளின் படபடப்பில் என் இதயம் சிறகடிகும்,
உன் பார்வையால் என்  உயிர் துடிதுடிக்கும் ,
என் மனம் கடல் அலைப் போல் மோதுதே,
காதலால் நம் பார்வை ஒன்றோடுஒன்று உறவாடுதே!

காதல் அழகாய் பூக்குதே , சுகமாய் தாக்குதே,
நம்  உள்ளங்கள் , சொல்லாமல்,கொள்ளாமல் பந்தாடுதே !

ரா.பார்த்தசாரதி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இதுதான் சுதந்திர தினமா ?

                                  

                                             இதுதான்   சுதந்திர  தினமா  ?

கைபேசி மூலம் ஏற்படும் காதல்  சுதந்திரம்,

ஊழலையும், கொடுமைகளையும் கண்டு கொள்ளாத  சுதந்திரம்,

பெண்மையை  மதியாமல், கற்பை சூறையாடும்  சுதந்திரம்,

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைப்பதில் சுதந்திரம்,

ஆடை மாற்றுவதுபோல், திருமண முறிவில்  சுதந்திரம்,

தேசியகீதம்  கேட்டும் அரை மனதுடன் நிற்கும் சுதந்திரம்,

மாநிலத்திற்கு, மாநிலம்  சுய ஆட்சி  சுதந்திரம்

கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தொலைத்த சுதந்திரம்,

நாட்டின்  எதிர்காலத்தைப் பற்றி கவலைபடாத சுதந்திரம்,

சுதந்திரத்திற்காக  பாடுபட்ட தியாகிகளை மறந்த சுதந்திரம்.

அறுபத்தெட்டு   ஆண்டுகள் ஆனாலும், பொருள் காணமுடியாத சுதந்திரம்.

ஜனநாயகமே,  இதுதான்   சுதந்திர  தினமா  ?

ரா.பார்த்தசாரதி


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் எங்கே

                                            சுதந்திரம் எங்கே

நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்,
வெள்ளையனே வெள்ளியேறு  என சொன்னோம்!

சுதந்திரம் எதில்? பெண்ணிடமா , பெண்ண்மையிலா ?
கற்பை   சூறை யாடுபவர்களுக்கு   சுதந்திரமா!

அரசியல்வாதிகள்  ஊழலை மறைபதற்கு சுதந்திரம்
ஏன்  என்று கேட்பவர்களுக்கு சிறையே  அடைக்கலம்!

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம் ,
இன்று கெடுதல் நடக்கா மலிருக்க ஓர் யாகம்!

ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிக்கும் சுதந்திரம்,
நல்லதை செய்பவர்களை   தடைசெய்யுதே  சுதந்திரம்!

பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம் !

அறுபத்தெட்டு   ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு,
இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே ?

இளைஞ்சர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் 
தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாய் உழைத்திதிடுங்கள் !

ஊழலையும், கொடுமைகளையும்  எதிர்த்து போராடுங்கள்,
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள்,
அதுவே  பல தியாகிகளின்,  தியாகம் என நினைந்திடுங்கள் !

இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உன்னை தூண்டட்டும்,
இன்றைய பாரத இளைஞ்சர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.

ரா.பார்த்தசாரதி 

 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பெண்ணே பொங்கி எழு


                                             பெண்ணே பொங்கி  எழு!

வயது  வந்த  பெண் அவள்,
வரதட்சிணை  இன்றி அழுகிறாள் !
வரதட்சிணை  தந்து  மணப்பவனோ,
வரட்டி  போலங்கு  எரிகிறாள் !

நங்கை எனும் பெண்  அழுகிறாள்,
கண்ணீரை ஏனோ கங்கையாக கொட்டுகிறாள்,
ஏனோ இவ்வூலகில் ஆயிரம் பொன் தந்தாலும்,
 இவ்வூலகில் மங்கை மண்னெண்ணைக்குள்   மறைகிறாள்!

மண்ணாய் என்றும் இருந்துவிடாதே  கண்ணே!
புதுமைப்  பெண்ணாய் மாறிட வேண்டும்,
பொன், பொருள், ஊதியம் தந்து வாழ்கின்றாய்,
என்றுதான் உன் சுதந்திரத்தை  நிலைப்படுத்துவாய் !

ஆணுக்கு நிகராய் படித்து பட்டம் பெற்றாய்,
உன் பெற்றோரை திருமணத்தோடு  மறந்தாய்,
உனக்கு உயிரும் , உருவமும்  தந்தவளை,
உதாசீனம்  செய்ய  எண்ணி விடாதே!

மதிப்பும், மரியாதையும், மனதிலே மட்டும்தானா ! 
பிறந்த வீட்டையும் சற்றே  நினைக்க வேண்டாமா,
பல்லாயிரம்  தொலைவில் இருந்தாலும்  தாய்ப்பாசம் மாறுமா,
அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா!    

ஆணுக்கு  நிகராய் என்றும் இருந்திடுவாய்,
தர்மத்தையும், நியாத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்,
பெண்ணடிமை   என்பதை  வேரோடு அறுத்திடுவாய்,
ஞாலத்தில்  புதுமைப் பெண் என்பதை பறைசாற்றிடுவாய்!

ரா.பார்த்தசாரதி
 

புதன், 7 ஆகஸ்ட், 2013

காதலுக்கு மருந்து

                                                காதலுக்கு  மருந்து

காதலே  உனக்கு மருந்து போடுகிறேன் ,
உன் காதல் வியாதி  நீக்கத்தான் !

மொழிகள் பிறக்கும் முன்  பிறந்தாய் ,
வர்ணிக்க  முடியாதபடி  என்னை திணறச் செய்தாய்!

வார்த்தைகளை சிலையாக்கி  உன்னை நான் செதுக்குவேன்,
கடவுளும், காதலும் வேறில்லை என நினைதிடுவேன் !

உன் கைப்பட்டால்  இதயம்  படபடக்கும் !
உன் கைப்பட்டால்  தொட்டாசிணுங்கிக்கும்  வலிக்கும்!

உனது விழிகள்  எனது  பார்வைதானே ,
எனது  மனதில் உன்  உருவம்தானே !

வலியால் துடிக்கின்றது என் மனம்,
உன் விழிக்கு  மருந்திடும்   போதேல்லாம் !

வள்ளுவன்  காதலுக்குள்  காமம் வைத்தான்,
காதலன்  காமதிற்குள் காதலை வைத்தான் !

ஆதாமும்,   ஏவாளும், ஆக்கி வைத்த கூட்டான்சோறுதானே,
அரை வடிவ ஆப்பிள் வடிவமாய் காட்சி தரும் சின்னம்தானே!

காதல் என்பது தெளிந்த நீரோடை  அக்காலத்தில் ,
கலங்கிச் செல்லும் கழிவு நீரோடையானதே இக்காலத்தில்!

அடுத்த தலைமுறையிலும்  உன்னை  தீண்டுவேன்,
அதற்கான மருந்து ஒன்றினை கொடுத்திடுவேன்!

ரா.பார்த்தசாரதி


புதன், 31 ஜூலை, 2013

காலம் மாறிப் போச்சு







   காலம்   மாறிப் போச்சு

வேராக மறைந்து, தான் தனித்துவமின்றி
வேறாகிப் போகும் காலம், மாறிவிட்டது!

மழலையைக் காப்பகங்களில் விட்டுத் தம்,
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை!

இருவர், பொருளீட்டச் செல்லும் காலமிது!
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமிது!

தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்காத
சேய்கள் பெருகினால், நாடு நலமாகுமே!

ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளையே எண்ணினே
காலத்தின் கொடுமையினை கண்டு  வருந்தம்மடைந்தேனே !

ரா.பார்த்தசாரதி

திங்கள், 29 ஜூலை, 2013

உறவும் உலகமும்

                                       உறவும் உலகமும்

உறவாலே உலகம்  என்றும்  தொடர்கிறது ,
பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது!

ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,
சுயநலங்கள்  எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே!

நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,
மன்னிப்பு  கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை!

நல்லதையும், நன்மையே  செய்தாலும் பலர் நினைப்பதில்லை,
விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும்  கெடுவதில்லை !

உறவு என்னும்  சொல்லிருந்தால்  பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.
இரவு  என்னும்     சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.!

உலகில் பிரிகமுடியாதது   பந்தமும் பாசமும்,
உலகில் ஒதுக்க முடியாதது  நட்பும்,  உறவும் !

உறவாலே தொடர்வதும்  மனித இனமே ,
பிரிவாலே  பாழ்படுவதும்  மனித இனமே!

ஆலம் விழுதினைப் போல் மனைவி  தாங்கி நிற்பாள்,
கண்ணின்  இமையென கணவனை  காத்து  நிற்ப்பாள் !

ஆயிரம் உறவுகள்  உலகில்  இருந்திடுமே,
அன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே !

குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்போர்  தாய்   தந் தைதானே, 
அன்பு,  பாசம்   இவையெல்லாம்   உறவின் எல்லைதானே !

.ரா.பார்த்தசாரதி

   

ஞாயிறு, 28 ஜூலை, 2013

காதலே உன்னோடு வாழ்வேன்



காதலே உன்னோடு வாழ்வேன்


பட்டாம் பூச்சியாக  மனம்  இருந்தாலும், 
 மலர்விட்டு மலர்,  தாவ மாட்டேன் !


  தேனிருக்கும் மலராய் நீ இருந்தாலும்,
  காகித பூவினை நான் விரும்பமாட்டேன்!


   கங்கையாய்  நீ இருக்க  என்றும்
    நான் கானலை  தேடமாட்டேன்!


    உனக்காக  பாடலை எழுதிவிட்டு,
    ஊருக்காக அதனை  படிக்கமாட்டேன்!

    உன்னோடு வாழ முடியாமல் போனாலும்,
    உன் நினைவோடு வாழ்ந்திடுவேனே!

    துணையாக நீ  வராமல் போனால்
    என் மனதை விட்டுச்  செல்வேனே!
 
    காதலுக்கா கடல்கடந்து  வேலைக்கு சென்றாலும்,
    என் இதயத்தை உன்னை, நினைக்கச் செய்வேனே !

    காதலால் சிலரது  இதயம் பாதிக்கலாம் ,
    காலம் ஒன்று சேர்ந்தால்  எதையும் சாதிக்கலாம் !

    காதலுக்கு கண் இல்லை என்பான் கவிஞ்சன்
    காதலுக்காக என்றும் கவிதையும் பாடுவான்  காதலன் !

    ரா. பார்த்தசாரதி

உண்மையும், பேருண் மையும்

 உண்மையும், பேருண் மையும் 

அடுபங்கரையே  பள்ளியறை என்று 
அகிலமாய்  இருந்த பாட்டிமார்  காலத்தில் !

சமையல்வேளை , வீட்டுவேலையோடு 
அருகிலிருந்த பள்ளிக்கு  செல்ல 
முடிந்தது  அம்மா காலத்தில்!

கல்லூரியில் படித்து  அறிவைப் பெருக்கி 
அலுவகப்பணியும்  சாத்தியமானது  அக்காமார் காலத்தில் !

நாகரிகத்தின் மாற்றங்கள், நவீன உடைகள், அலைபேசி  காதல் 
என சுந்தந்திரம் கிடைத்தது தங்கைமார் காலத்தில்,

அலைபேசியால் அளவான பேச்சு, முகம் அறியாதவரோடு " சாட்டிங் "
என்பது சுதந்திரத்தின்  அம்சம்.!

 தானியங்கி வாகனங்களை தாமே இயக்குகின்ற பேத்தி  ககாலத்தில்,
தலைமுறைக்கு, தலைமுறை பெண் இனம் முன்னேறியதே,!

படிப்பு, பணம், என வளம் பெருகியதே ,
இது  உண்மையென  எல்லார்க்கும்  தெரிந்ததே!

பாட்டி, அம்மாக்கள்  இருந்த காலத்தே,
இருந்த அன்பும், பண்பும் சுருங்கி போனதே,
இதுவும் ஓர்  பேருண்மையாதே.!

இன்று பணம் எட்டிப் பார்க்கிறது  பாசம் விலகியே போகிறது.

 ரா. பார்த்தசாரதி

வேர்களை வெட்டிவிடா திர்கள்

 வேர்களை  வெட்டிவிடா திர்கள்

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை தான்.

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதை நிலம்தான் !

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

குடும்பத்தின் ஆணிவேராய்
இருப்பதும்  தாய்தானே !!
சற்றே  சிந்தியுங்கள்
பெருமையினை  எடுத்துரையுங்கள் !

ரா. பார்த்தசாரதி

ஊட்டி வரை உறவு

ஊட்டி வரை   உறவு

இயற்கையின்  எழில்  கண்டேன் ,
மலை அரசியின் அழகினைக் கண்டேன்,
எண்ணத்தில் எழுச்சி கொண்டேன்
வார்த்தைகளால் வர்ணிக்க முடிவுகொண்டேன்!

இயற்கையின் வனப்பு,  மனிதனின் செழிப்பு ,
மலர்களின் சிரிப்பு,  மனதினிலே பூரிப்பு,
மானிட மனதில் ஏழும் மகிழ்ச்சியாலே,
மனம் கண்டு மகிழ்ந்ததே  இயற்கையாலே!

பூத்து குலுங்கும் புது மலர்கள் அசைய ,
பூங்காற்று மெல்ல  மலர்களை தழுவ,
பரிதியும் பனிமூட்டத்துடன் காட்சியளித்ததே ,
மலையும் அதனுடன் கைகோர்த்து நின்றதே !

உதகையே  நீ ஒரு  அழுகு நங்கை ,
குன்னுரே  நீ ஒரு  அழகு  குமரி ,
மலர்களும், மலைகளும்  மனிதனுக்கு  இயற்கை காட்சி ,
இரண்டுமே மனிதனுக்கு இன்பகாட்சி!

அவனியில் இயற்கை அன்னை தந்ததெல்லாம்
உலகில்  எல்லார்க்கும்  என்றும் சொந்தமடா ,
எனது, உனது  என்று சொல்வதெல்லாம் ,
இடையில்  மாறும்  ஓர் பந்தமடா!

தமிழகத்தின்  மலைக்கெல்லாம்  ஓர்  மலை ராணியே ,
என்றும் இயற்கையோடு நடத்திடுவாய் உன் அரசாட்சியே
தமிழுனுக்கு  என்றும் உதகை  உறவானதே
உலகிற்கு  என்றும்  அதுவே நிலையானதே! 


ரா. பார்த்தசாரதி






siru kavithaigal

நல்வாழ்வுக்காக   ஏழு

1.   மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும்

2.    பரிசுத்தமாக சிரிக்க கற்றுக்  கொள்ளுங்கள்

3.     பிறருக்கு  உதவுங்கள்

4.     யாரையும் வெறுக்காதிர்கள்

5.   சுறு, சுறுப்பாக  இருங்கள்

6.  தினமும்  உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்

7.   மகிழ்ச்சியாக  இருக்க முயற்சி செய்யுங்கள்

---------------------------------------------------------------------------------------------------
"விடியும் வரை "

விடுயும் வரை தெரிவதில்லை
கண்டது  கனவு   என்று.

வாழ்க்கையும்  அப்படிதான்
முடியும்வரை தெரிவதில்லை,
வாழ்க்கை எப்படி என்று/?

நிலவை  நேசி,  மறையும்வரை
கனவை நேசி கலையும் வரை
இரவை  நேசி விடியும் வரை.
காதலை நேசி, கல்யாணம் முடியும் வரை !
 ----------------------------------------------------------------------------------------------------------

வழி காட்டும் ஏழு

சிந்தித்து பேசுதல் வேண்டும்
உண்மையே பேச வேண்டும்.
அன்பாக பேச வேண்டும்.
மெதுவாக பேச வேண்டும்
சமயம் அறிந்து பேச வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
பேசாதிருக்க பழக வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 8 ஜூலை, 2013

penn viduthalai





பெண்  விடுதலை 



எங்கே போயிற்று பெண் விடுதலை?
அது...
தொலைந்து போன அந்த பெண்ணிடமே
கேட்டேன்

* நாகரிக மோகத்தில்
நம்முடைய
கலாசாரத்தை அழித்த
நங்கைகளிடமே கேட்டேன் !

* நெற்றி திலகமிட்டு
கருங்கூந்தல் சீவி
மலர் சூட்டி
அழகு பார்த்த தாயின் எதிரில்,
கருங்கூந்தல் கத்தரித்து
நாகரிக உடையில்
நளினமாய் திரியும்...
நங்கைகளிடம் கேட்டேன்,
அறிவைதானே  வளர்க்கச் சொன்னேன்,
ஆடையை   நானா குறைக்கச் சொன்னேன்,  


* அதிகாலையில்
புதுப்புனலாடி
நளினமாய் மாக்கோலமிட்டு
வீட்டில் குத்து விளக்கேற்றும்
நிலைமாறி...
அதிகாலையிலிருந்து
இரவு வரை
அலைபேசியும், கையுமாகத்
திரியும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* வேறு ஆடவர் முகம் பார்க்க
நாணி கோணி
கால்களால் கோலம் வரையும்
நிலைமாறி...
நட்பு எனும் பெயரில்
ஆடவர்களுடன் ஊர் சுற்றும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* "இவர் தானடி
உன் மணாளன்'
என்று கூறிய நிலைமாறி...
கல்விச் சாலை
செல்லும் போது திருமணம்
முடிவதற்குள் விவாகரத்து
என்று திரியும்
நங்கைகளிடம் கேட்டேன்  !

* ஐயகோ...
பாரதியே இதை பார்த்தால்
கொதித்தெழுவார்...
உனக்கேனடி விடுதலை;
உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...
என்று பித்தானக மாறி பிதற்றுவான்!

* பெண்ணே...
வாங்கித் தந்த விடுதலை
தன்னம்பிக்கையை உயர்த்தி
வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே
ஒழிய...
வீட்டை கொளுத்தும்
கொள்ளியாக்க அல்ல!

* வாங்கிய விடுதலையை
வீணாக்காதே...
மீண்டும்
மூலையில் முடங்காதே!

சனி, 6 ஜூலை, 2013

srikanth kadaisee Aasai.

              கடைசி  ஆசை

நானோ  ஆயுள்  கைதி,
நாளை  காலை  முடியபோகுது  என் விதி,
நான் பார்க்கவேண்டும் என் திருமதி,
நான் அடைவேன்  மனநிம்மதி

  எழுதிய  தேதி - 06-11-2006


வெள்ளி, 21 ஜூன், 2013

kankanda deivam

                                                    கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே 
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.

பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் .

உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?

உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே

என்   வளமே உன்  சிறப்பு,
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 

அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.


   ரா. பார்த்தசாரதி.

பின்குறிப்பு::  அவந்திகா, அக்சத் , ருஷில் வியாஸ், ரியன், கேசவ்,  இவர்கள் இருபது வருடம் 
கழித்து  கவிஞன்  ஆனால் மேலே எழுதப்பட்ட  கவிதையை  அவர்களே எழுதிருப்பார்கள் .
தாய் தந்தையர்களே   சற்றே நினைத்துப்பாருங்கள்.

சனி, 2 பிப்ரவரி, 2013



நினைக்கத்தெரிந்த  மனமே!

வாழ்கையின்  உண்மையான  சந்தோஷம், தாயிடம்  பார்த்த  பாசமா,

மகளிடமும், மகனிடமும்  உணர்ந்த  அன்பா,

சகோதரர்களின்   பிரியாத  உறவா,

இது  எந்த ரகம்  என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில்,

நம்மை  மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பேரன் ,பேத்தியின் கள்ளம் கபடமற்ற சிரிப்பா?

அவந்திகாவின்  வா, வாவென்று கூப்பிடும் அழகும், கள்ளமில்லா சிரிப்பும்   தாத்தாவும் , பாட்டியும்  நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்

இதுதான்  நேசமும் , பாசமும் கலந்த  உறவு.



 ரா..பார்த்தசாரதி 

சனி, 12 ஜனவரி, 2013

Nee Eppadi Iruppai ! Aethai ezauppai




      நீ  எப்படி  இருப்பாய்  !!   எதை  இழைப்பாய்  !!

       1.  நயம்பட பேசினால்,  நல்லவனாக  கருதபடுவாய் !

         2.   சிந்தித்து  பேசினால்,  சிறப்புடன்   இருப்பாய் !

       3.  அறிவு ஆற்றலுடன்  பேசினால்,  அறிவாளியாக  
புகழப்படுவாய் !
                                                                                         
       4.  பொறுமையாக பேசினால்,  போற்றப்படுவனாக இருப்பாய் !  

      5.   பொருத்தமாக பேசினால்,   மதிக்கபடுவாய்

      6.    பண்புடன் பேசினால் பயன் அடைபவனாக இருப்பாய் 

        7.    கோபமாக பேசினால் குணத்தை   இழப்பாய்  !

        8.   ஆணவமாய்  பேசினால் , அன்பை   இழப்பாய் !

        9.   கடுமையாக .பேசினால்  நட்பை
இழப்பாய்    !

      10.   வேகமாக பேசினால்  அர்த்தத்தை 
இழப்பாய் !

      11.   அதிகமாக பேசினால்  உன் மதிப்பை  
இழப்பாய்   !

      12.   பொய்  பேசினால் உன் பெயரையே
இழப்பாய்  !

 நல்லதே  பேசுங்கள் ,  நல்லதே செய்யுங்கள ! நன்மை  அடைவீர்கள் !!

செவ்வாய், 8 ஜனவரி, 2013

Cherry Blossom

CHEERY BLOSSOM
The spring open its gate of Castle!
Flowers blossomed with distinct colors of Dazzle !
Wears on his smiling face and a dream of Spring !
All nature’s gift but the mankind makes the rift !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever!


The Cheery Blossom display for our wish !
It cherish in mind and our thoughts are flourish !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


From the Air and Peak, if we look down the pathway !
It seems to be the line of planted Nosegay !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


R.Parthasarathy.