புதன், 4 செப்டம்பர், 2013

vijay thirumana vazhthu madal

                                       



                                     விஜெய் திருமண வாழ்த்து மடல்          

   இடம்: அண்ணாநகர்                                                            தேதி:02 -12-2019

1. இன்று அண்ணாநகர் விஜயஸ்ரீமஹாலில்  ஓர் கல்யாண மேடை 
   இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை,

2.இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. புனேயில் பணிபுரிந்து கொண்டு  வாழ்க்கைத் துணை நாடும் விஜய்                                                                                                                     எனும்             ஆடவனே
    என்றும் நீயும் ரேஷ்மியும்   வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

4. திருமணம் என்பது  இருமனம்   அல்ல !
     அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம்.!

5.  திருமணம்  என்றாலே உற்றார் உறவினர்  வாழ்த்துக்களே 
     அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  வாழ்துக்களே   !

6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8. மகள் இல்லாத வீட்டில், மருமகளே  என்றும்  மகளாவாள்,
    மணமகன்,  புகழிற்கும்,குலத்திற்கும் அவளே துணையாவாள்!

9. கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
 
10. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
     கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

13.  இருவீட்டாரும்  ஒன்றுகூடி மகிழ்ந்து விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற மனமாற  வாழ்த்தினோம் !

14. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.

     ரா.பார்த்தசாரதி .


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக