புதன், 7 ஆகஸ்ட், 2013

காதலுக்கு மருந்து

                                                காதலுக்கு  மருந்து

காதலே  உனக்கு மருந்து போடுகிறேன் ,
உன் காதல் வியாதி  நீக்கத்தான் !

மொழிகள் பிறக்கும் முன்  பிறந்தாய் ,
வர்ணிக்க  முடியாதபடி  என்னை திணறச் செய்தாய்!

வார்த்தைகளை சிலையாக்கி  உன்னை நான் செதுக்குவேன்,
கடவுளும், காதலும் வேறில்லை என நினைதிடுவேன் !

உன் கைப்பட்டால்  இதயம்  படபடக்கும் !
உன் கைப்பட்டால்  தொட்டாசிணுங்கிக்கும்  வலிக்கும்!

உனது விழிகள்  எனது  பார்வைதானே ,
எனது  மனதில் உன்  உருவம்தானே !

வலியால் துடிக்கின்றது என் மனம்,
உன் விழிக்கு  மருந்திடும்   போதேல்லாம் !

வள்ளுவன்  காதலுக்குள்  காமம் வைத்தான்,
காதலன்  காமதிற்குள் காதலை வைத்தான் !

ஆதாமும்,   ஏவாளும், ஆக்கி வைத்த கூட்டான்சோறுதானே,
அரை வடிவ ஆப்பிள் வடிவமாய் காட்சி தரும் சின்னம்தானே!

காதல் என்பது தெளிந்த நீரோடை  அக்காலத்தில் ,
கலங்கிச் செல்லும் கழிவு நீரோடையானதே இக்காலத்தில்!

அடுத்த தலைமுறையிலும்  உன்னை  தீண்டுவேன்,
அதற்கான மருந்து ஒன்றினை கொடுத்திடுவேன்!

ரா.பார்த்தசாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக