சனி, 27 ஜனவரி, 2024

பெண்ணே நீதான்




                        

                      


                       பெண்ணே  நீதான் 

                       ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

                       பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

                       என்னை  வயிற்றிலும், தோளிலும் , மடியிலும்  சுமந்தவள்  நீதான் 

                       என் தகப்பனை அடையாளம் காட்டியவள் நீதான் 

                       என் தாய் மொழியை  கற்று கொடுத்தவள் நீதான் 

                       அன்பு, பாசம்,  நேசம் என்னவென்று கற்றுக்கொடுத்தாய  நீதான் 

                       என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

                       திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

                       நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

                       நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

                       மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

                       குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

                       குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

                       பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .

முகவுரை - 2

                                                    

                                     முகவுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

          என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  தினமலர் கவிதை உறவு  
          வல்லமை போன்றவற்றில்  பல கவிதைகள் எழுதியுள்ளார் 
          திரு.ரா. பார்த்தசாரதி (புனைப் பெயர், பாலா, இனியவன் என்ற 
          பெயரில்  சிறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார் . இந்நூலில்
          ஏதேனும்  தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.  இருந்தால் திருத்தி
         அமைத்துக்கொள்கிறேன் . ஆசிரியர் முடிவே தீர்மானிக்கப்படும்.
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார்.  என் 
          கவிதைப் பூக்கள், இந்நூலை என்தாயின் ஆசியுடன் அவர் 
          பாதத்தில் வீழ்ந்து வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 

                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 


வெள்ளி, 26 ஜனவரி, 2024

காதல் நாடகம்

  




                                 


                       


                                            காதல் நாடகம் 


           உன் அன்பும் நேசமும் என்னை உன் வசமாக்குமே  
           எல்லை மீறும் அன்பே என் செல்வம் ஆகுமே !

 நான் உன்னை பார்க்கும் போது விண்ணை பார்கின்றாயே 
 நான்  மண்ணை பார்க்கும் போது நீ என்னை நோக்குகின்றாயே !

           ஒரு முழம் பூவிற்குள் உன்னை களிப்புற செய்தேன் 
           என்னருகில் நீ இருந்தால் உலகமே சுழல்வதேன் !

           உன் கள்ளவிழி பார்வையில் மயங்கினேனே 
           என் இதயத்தை உன்னிடம் பறிகொடுத்தேனே !

           உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
           கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,
      
          திருமணம் எனும் பந்தலில் அன்புக்கைகள் சேருமே 
           மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு உள்ளங்கள் துள்ளுமே !

           இரவில் சிந்தும் தேனும் வாய்ச் சொல்லில்  ஊறுமே 
           தென்றல் வீசியே நம் வாழ்வில் இன்பம்  காணுமே 

           ரா.பார்த்தசாரதி 



           


வியாழன், 25 ஜனவரி, 2024

 



                   அயோத்தி ராமன் 

    ராமன் பிறந்ததும்  நவமியிலே 
   கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
   இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
   இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
   பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   குணத்திற்கும் நட்புக்கும்  இலக்கணமாய்  இருந்தவர் ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
   ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

  புனர்பூசம்  நக்ஷத்திரத்தில் பிறந்தவனே  
  அகலிகைக்கு சாபவிமோசனம்  அளித்தவனே
   சபரிக்கு அருள் செய்தவனே,பொறுமை மிக்கவனே 
   அனுமனை ஏற்றுக்கொண்டவனே. வாலியை அழித்தவனே !

   விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்டவனே !
   ராவணனை அழித்து, சீதையை மீட்டவனே !
   அயோத்தியில் சிறந்த  அரசனாய்  ஆட்சிப் புரிந்தவனே  !
    தசரதனின் மூத்த மகனே, குணத்தில் சிகரம் போன்றவனே !

    அயோத்தியின் சக்கரவர்த்தியாய் நீதி தவறாதவனே  !
    சீதாராமனாகவும் .சக்கரவர்த்தி திருமகனாய் முடிசூடியவனே!
    லவன், குசன் என இரு மகன்களைப் பெற்றவனே 
    இறுதியில் பலருடன் வைகுண்டம் சென்றவனே !

அயோத்தி ராமன்

  



    



   அயோத்தி ராமன் 

    ராமன் பிறந்ததும்  நவமியிலே 
   கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
   இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
   இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
   பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   குணத்திற்கும் நட்புக்கும்  இலக்கணமாய்  இருந்தவர் ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
   ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

  புனர்பூசம்  நக்ஷத்திரத்தில் பிறந்தவனே  
  அகலிகைக்கு சாபவிமோசனம்  அளித்தவனே
   சபரிக்கு அருள் செய்தவனே,பொறுமை மிக்கவனே 
   அனுமனை ஏற்றுக்கொண்டவனே. வாலியை அழித்தவனே !

   விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்டவனே !
   ராவணனை அழித்து, சீதையை மீட்டவனே !
   அயோத்தியில் சிறந்த  அரசனாய்  ஆட்சிப் புரிந்தவனே  !
    தசரதனின் மூத்த மகனே, குணத்தில் சிகரம் போன்றவனே !

    அயோத்தியின் சக்கரவர்த்தியாய் நீதி தவறாதவனே  !
    சீதாராமனாகவும் .சக்கரவர்த்தி திருமகனாய் முடிசூடியவனே!
    லவன், குசன் என இரு மகன்களைப் பெற்றவனே 
    இறுதியில் பலருடன் வைகுண்டம் சென்றவனே !

புதன், 24 ஜனவரி, 2024

முகவுரை

            

                                                      முகவுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

           என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  தினமலர் கவிதை உறவு  
           வல்லமை போன்றவற்றில்  பல கவிதைகள் எழுதியுள்ளார் 
          திரு.ரா. பார்த்தசாரதி (புனைப் பெயர், பாலா, இனியவன் என்ற 
           பெயரில்  சிறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார் . இந்நூலில்
          ஏதேனும்  தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.  இருந்தால் திருத்தி
         அமைத்துக்கொள்கிறேன் . ஆசிரியர் முடிவே தீர்மானிக்கப்படும்.
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார்.  என் 
          கவிதைப் பூக்கள், இந்நூலை என்தாயின் ஆசியுடன் அவர் 
          பாதத்தில் வீழ்ந்து வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 
                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 

என் தாய்

 

                                                             சரோஜா - என் தாய் 

வாழ்வின் ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன்,
வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன் ,
எழுதுகோலை  துணிவுகொண்டு கைய்யில் எடுத்தேன்,
அன்னை சரோஜாவின் அருமையினை எழுத துணிந்தேன்.!

மக்களைப் பெற்ற மகராசியே   தாய்தான் ,
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்,
ஞானியும், துறவியும்  போற்றும் தெய்வம்,
ஞாலம்   புகழ்ந்திடும் சிறந்த தெய்வம் !

ஏழு பிறவி எடுத்து  ஏழு பிள்ளைகள் பெற்றாய்,
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஒர்  தொடர்பு வைத்தாய்,
ஏழுலே  ஒன்றே  ஒன்று  பெண் ஆனாலும் ,
எல்லோரிடத்திலும் மாறா அன்பும், பாசமும் வைத்தாய் !.

ஓய்வின்றி, உறக்கம்மின்றி,  உன் உயிரைக் கூட,
 ஒவ்வொர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்.,
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே,
உன் அருமை அறியா பிள்ளைகளை  தூற்றுமே.!

பாசமுள்ள   வேளையிலே, காசு பணம்  கூடலியே,
காசு வந்த   வேளையிலே.  பாசம் வந்து சேரலியே ,
பருவத்திலே நாங்கள் பட்ட  வலி தாங்கலியே ,
வார்த்தையிலே  வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே.!

பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே,
பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே.
எனக்கென்று  துன்பம் வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு ,
உனக்கென்று துன்பன் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ ?

தாயைவிடச்  சிறந்த தெய்வம்  இல்லை ,
திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை,
தாயின் பெருமையினை சொல்ல வார்த்தையில்லை,
தியாகச்சுடரே  தாயுருவம், மனதினின்றும் மறைவதில்லை !

இளமையில் ஸ்பரிசம்,  முதுமையில் பாசம்,
என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்,
இளமையில்  நான் உனக்கொரு குழந்தை,
முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை !

வாழ்க்கை  படகினிலே  நீயொரு  துடுப்பு 
எங்கள்         பிறப்பே  உன் படைப்பு 
எங்கள்         வளமே உன் சிறப்பு ,
எங்கள்   நினைவே  பாசத்தின் பிணைப்பு !

பூமியைவிடச்   சிறந்தவள்   தாய் ,
ஆகாயத்தை  விடச்  சிறந்தவர்  தந்தை.,
பூவிலே  சிறந்தது  மல்லிகை     ரோஜா,
எங்கள்   தாயின்   பெயரோ         சரோஜா !

முன்னுரை

 



                                                             முன்னுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை'
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

           என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  இந்நூலில் தவறுகள் 
          இருப்பின் தெரிவிக்கவும்.  திருத்தி அமைத்துக்கொள்கிறேன் .
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார். 
          கவிதைப் பூக்கள், இந்நூலை என்தாய் காலடியில் சமர்ப்பிக்கிறேன் !

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 
                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 


முன்னுரை

 


                                                            

                                                      முன்னுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை'
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

           என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  இந்நூலில் தவறுகள் 
          இருப்பின் தெரிவிக்கவும்.  திருத்தி அமைத்துக்கொள்கிறேன் .
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார். 

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 
                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

 


                                         


                                 தமிழும், தமிழ் மக்களும் 

      தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
      வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
      சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
      நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?

      கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
      எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
      மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
      சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
      
      கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
     ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம் 
     முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
     மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை  

      பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே 
      அப்துல்கலாம், சர்  சி.வி  ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே 
      ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை 
     அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
   
     எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
     தங்கள்  ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
    நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
    நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !

    சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
    இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
    அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே  !
    இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !

    தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள் 
    மக்களே,  குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
    ஜன நாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள் 
    மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
    தன்னலமற்ற தலைவனையே  பதவி ஏற்க உதவிடுங்கள் !
    வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !

             ரா.பார்த்தசாரதி.

 

               


சனி, 13 ஜனவரி, 2024

                                                     



                                                வாழ்க்கை  ரகசியம் 


                          புரியாது, புரியாது, வாழ்க்கை ரகசியம் புரியாது 
                               வளரும் ஆசைக்கு அளவேது !  முடிவு ஏது !
                                முடிந்த பின்,  உலகம் நமக்கேது
                                முடிந்ததை நினைத்தால் பயனேது !

                                ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும் 
                                உரிமை, அன்பும் மறுபடி சேரும் 
                                திருமணம்  இரு மனமாகும் 
                                பெண் மனம் தாய்மையை தினம் தேடும் !

                               பெருமைகள் பேசுபவர் பூமியில் பிறந்தார் 
                               பிறந்தவர்  தாயின் மடிதனில் வளர்ந்தார் 
                               வளர்ந்தவன் வாழ்வில் கொடுப்பதை மறந்தான் 
                                ஒருபிடி சாம்பலே முடிவெனஉணர்ந்தான் !

                                ஒரு சிலரே புகழோடு தோன்றுவர் 
                                ஒரு சிலரே புகழோடு  இறப்பர் 
                                வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒன்றே 
                                மானிடம் அறியாமல் திரிவதும் இன்றே !

                              

செவ்வாய், 2 ஜனவரி, 2024

Puththaandil Sabatham Edupomaa !

 



                            புத்தாண்டு சபதம் எடுப்போமா !

                           புதிதாய் ஆண்டு பிறக்கும் போதெல்லாம் 
                                 புதிதாய் சபதம் எடுப்பதே ஓர் சம்பிரதாயம் 
                                 ஏனோ மனிதர்களுக்குள் ஒரு பிரகடனம் !
                                 சரியோ தவறோ நமக்குள் ஓர் ஒழுக்கம் !

                                 எத்தனை ஆண்டுகள் ! எத்தனை சபதங்கள் 
                                 சாதித்தது என்ன !  சாதிக்காமல் விட்டது என்ன !
                                 புதிய  கனவுகள், ஆசைக்கள் , நித்தம் புதுப்பித்து 
                                 உயரிய  இலக்குகளை அடைய வழி என்ன !  

                                சுயநலமும், சுரண்டல்களுமே கொள்களையாக்கி 
                               கொள்ளையடிக்கும் அரசியல்வாதியின் வாய்ஜாலங்கள் 
                               சிக்கி  திசை மாறி, இனியும் நூலறிந்த பட்டம் போல் 
                               மக்கள் வாழ்க்கை நலிந்து போக விடலாமா !

                               இலவசம் பெறாமல் ஓட்டுப்போட  வேண்டும் 
                               தவறு இழைத்தால் தட்டி கேட்கவேண்டும் 
                               கனல் என கொதித்து புறப்பட  வேண்டும் 
                              இனியாவது  உறுதியெடு  தோழா !

                              நாள்காட்டி தாள்களை  நீங்கள் கிழிக்கும்போது 
                             நேற்று  என்ன  சாதித்து  கிழித்தேன் என 
                             மனசாட்சியை  கேட்டு யோசி நண்பா !
                             தைரியத்துடன்  முன்வந்து கேள் நண்பா !
  
                             உதாசீனத்தால் நிராகரிக்கத்தாலும் நிமிர்ந்து நில் !
                            மேலே எறிந்த பந்து கீழே பூமிக்கு வந்தே தீரும் 
                            செய்யப்பட்ட முயற்சிகள் பலனை அடைந்தே தீரும் !
                            முயற்சி தன்  மெய்வருத்த பலன் அளிக்கும் !

                             நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிப்போம் 
                            அதன் மேம்பாட்டில் சந்திரயான்யங்களாக வான் ஆளுவோம் 
                            நாம் வாழப் பிறந்தவர்கள். சரியான பாதையில்  செல்வோம் 
                            எத்தனை பயணமானாலும் முதல் அடியில் கால் வைப்போம் !

                           புகுந்தது நம் வாழ்வில், புதியதோர் ஆண்டில் சபதம் எடுப்போம் 
                           நாடும், வீடும் மேன்மையடைய என்றும் உறுதி எடுப்போம் 
                           வேற்றுமையில் ஒற்றுமையை நம்மிடையே நிலைநாட்டுவோம் 
                           புத்தாண்டு மலரட்டும் ! நமது வளம் பெருகட்டும் ! 

                           வாழ்க தமிழ் நாடு !! வாழ்க பாரதம் !!!

                           ரா.பார்த்தசாரதி  -   D-103  Metro zone. - 8148111951