வியாழன், 12 செப்டம்பர், 2013

தேவதாஸ்

                                                                தேவதாஸ்

செய்யும் தொழிலே  தெய்வம் எனக்  கருதிடுவார் !
தன்னலமின்றி  பிறர்க்கென என்றும் உழைத்துடுவார் !

லகுவாக  என்றும்  எந்திரங்களை  இயக்கிடுவார் !
லாரன்ஸ்  என்ற பெயரையும்  வைத்திடுவார் 1

கடன் என்றாலே காத தூரம்  நின்றிடுவார் !
கடன்  இல்லாமலே  நிர்வாகம் செய்துடுவார் !

தேவனுக்கு  தாசன்  என நினைத்திடுவார் !
தேவதாஸ் எனும்  பெயரைப் பெற்றிடுவார் !

நவமணியின்  ஒளி  என்றும்  காண்போர்க்கு சிறப்பாகும் !
தவமணியின் தவப்புதல்வனின் செய்தொழில் போற்றப்படுவதாகும் !

புதுமையை  எண்ணி  புன்னகைப்  பூத்திடுவார்!
இருப்பதைக்  கொண்டே  வளம்பெற நினைத்திடுவார் !

நல்லதையும், நியாத்தையும் என்றும் உரைத்திடுவார் !
வேற்றுமையில்  ஒற்றுமையுடன் சிட்கோவில் வாழ்ந்திடுவார்.! 


ரா.பார்த்தசாரதி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக