சனி, 19 மார்ச், 2016




                                 சற்றே  நினைத்துப்பாருங்கள்  !
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
            அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
            அது   உணர்சிகளை  நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  !
  1.          உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும்   தினமும் கடைபிடியுங்கள்
  அது இளமையென்னும் ரகசியத்தை  ரசிக்கும் இடமாகும்  !
  1.              பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  !
  1.            நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
          அது  உன் நேர்மைக்கு இடமாகும்  !
  1.             வாழ்வில்  சேமிப்பை  கற்றுக்கொள்ளுங்கள் 
அது  எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும்   !
  1.              சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
      அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!

Jayasree




 இன்று ஜெயஸ்ரீ ரெங்கராஜனின்  இருபத்தைந்து திருமண ஆண்டு விழா
 தாயும், மூத்தவர்களும் முன் நின்று  வாழ்த்திடும் விழா !

திருமதி ஒரு வெகுமதி என்று கூறுவது  பழக்கம்
திருமதியின் பெயரோ ஜெயஸ்ரீ என்றழைப்பது வழக்கம் !

கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்
 அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலங்களும் , கோலங்களும்  என்றும்  மாறும்
கணவன் மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும்!

ஆரெழுதில்  என்றும் மூன்று அடங்கும்
ஜெயஸ்ரீ எனும் பெயர்  விளங்கும்.