வெள்ளி, 30 நவம்பர், 2012

நயகரா நதியே !

                                 நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
3.
மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                       

   


 
.         

seshasai

                                                                சேஷசாய்- மகன்

மகன் என்றும்,  மகள் என்றும், உரிமை  என்றும்,
மண்ணுலகத்தில் இல்லறத்தின் பயனாய் நின்றும்,
தகவுடைய குடிப்பெருமை தாங்க வந்த,
தகுதியின்   வடிவம்தான்,  மகனே ஆகும். 

பந்தங்கள், சொந்தங்கள் பெறுவதற்கே 
பாதையிட்ட  பெருமையெல்லாம் மகனால் அன்றோ,
நிறைவான பண்புகளால்  வாழ்க்கைத்  தேரை,
நேரியதோர் வழி  செல்லுதுவதும் மகன்   அன்றோ?

வளர்ந்த பின்னர்,  தந்தைக்கு  கால்களாக,
விளங்குகின்ற மகனேதான் சிறந்து நிற்பான்,
தளர்ந்து நிற்கும், பெற்றோர்க்கு  மருந்தாகி,
தன்னகத்தே உணவிட்டு நாளும் காப்பான் அன்றோ?

ஈன்றெடுத்த தாயானவளும்  கடமை செய்தாள்,
ஏற்றதோர்  கல்வி தந்து தந்தை நின்றான்,
சான்றோனாய் நிற்பதுதான் மகனின் ஆற்றல்,
சுமந்து நின்றே தாய்தந்தை வாழ்தல் வேண்டும்.

இருபத்து நான்கு வயதிற்குள் கல்வி முடித்தும்,
இருபத்து   ஐயிந்தில்   தொழில் கண்டும்,
குடும்பத்தில் கண்ணாகிய  கன்னியர்க்கு திருமணம் 
முடித்து வைத்து உதவுபவனும்  மகனே!!

அயல்நாட்டில் பெருமையுடன்  பணிபுரியும் நேசம்,
பணத்தையும், பாசத்தையும் ,பிரிக்கும் தேசம்,
மனம்சோர்ந்து  ஏங்கி தவித்திடும் தாய்தந்தையின் பாசம்,
என்றைக்காவது  குடிபுகுவாய் உன் தாய்நாட்டின் வாசம்.

விருப்பமுடனே பெற்றோர்  பார்த்த திருமகளை,
நன்றே  என நவின்றிடும் நற்புதல்வனே,
குலப்பெருமை காத்திடும், எங்கள் புத்திரனே,
சேஷசாய்  என்ற பெயருடன் இந்தியானபோலீசில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !!


kumar




இடம் :கடல்மங்கலம்   -2013                                                        தேதி : 21-07-2013

வியாழன், 29 நவம்பர், 2012

obama

                                                  
                                       ஒபாமா



மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நம்மை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் நம் தலைவர்கள்
காண்பதோ வெற்றி
நம் வாழ்க்கையினை வளம்பெற செய்திடும் இந்நாடு,
நம் நாட்டிற்கும் உதவிக்கரம் நீட்டிடும் இந்நாடு,
அதுவே மூன்றெழுத்து கொண்ட U S Aஎனும் பொன் நாடு



இந்நாட்டில் வெற்றியுடன் உலா வரும் தானை தலைவரின்
 பெயரும்   மூன்றெழுத்து     கொண்ட  ஒபாமா       



ரா . பார்த்தசாரதி



தாயே தெய்வம்

                                              தாயே  தெய்வம்

கண்கண்ட தெய்வமென  நூலோர் சொன்னார் 
கண்மூடிச் சொல்லாம் தாயைக்  காட்டி,,
மண்ணுலகில் இறைவன்னில்லை , தாயின் அன்பை 
மதித்து  இங்கே உவமைச் சொல்ல சொற்க்கள்  இல்லை.

பத்து மாதம்  கருப்பையில்  சுமந்து பெற்று,
பக்குவமாய் வளர்த்தவளும்  தாயே ஆவாள் 
சொத்து என்றால் தாயேதான் ,  தாயின் மேலாம் 
சொத்துக்கள், சொந்தங்கள் ஏதும் இல்லை.

குடும்பத்தின் முழுநேர வேல்லைக்காரி,
குழந்தைகளின்  துப்புரவு பணியாள்,  என்றும்,
அடுப்படியில் சமைப்பதர்கே , கொஞ்சம்கூட 
அல்லுக்கதா  சலிக்காமல் சுழலும் பூமி !

மடிதன்னில்  குழந்தைகளே இல்லா நேரம் ,
மற்றவர்கள் தருகின்ற தீனி இட்டு ( சோறுண்டு}
விடியலுக்கு காத்திருப்பேன்  என்று சொல்லி,
விளக்கேற்றி மகிழ்கின்ற  " தாயே தெய்வம் "

ரா.பார்த்தசாரதி


புதன், 28 நவம்பர், 2012

pattukottail kavithaikal

செய்யும் தொழிலே  தெய்வம்,
அதில் காணும் திறமைதான் நமது செல்வம்
கையும், காலும்  உதவி
அதுவே நமக்கு தருமே பெரும் பதவி.

சனி, 24 நவம்பர், 2012

naan virumbia kavithaigal




sudanthira siragukal

                                                               



obama



செய்யும் தொழிலே  தெய்வம்
அதில் காணும் திறமைதான் நமது செல்வம்
கையும்,  காலும்  உதவி
அதுவே  நமக்கு தருமே பெரும் பதவி 

வியாழன், 22 நவம்பர், 2012

காதல் நாடகம்

                                            காதல் நாடகம் 

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,

எல்லை மீறும் அன்பே, செல்வம் ஆகுமே ,
இளமை நேசமே, மண் மேல் சுகமே !

சிந்தும்  செந்தேனும் , சொல்லில் ஊறுமே,
தென்றல் வீசியே,  நன்றியும் கூறுமே!

காலம்  எனும் பந்தலில், அன்புக்கைகள் ஒன்று சேருமே 
மகிழ்ச்சி  வெள்ளத்தில்,   இரு உள்ளங்கள் துள்ளுமே!


ரா.பார்த்தசாரதி

புதன், 21 நவம்பர், 2012

unmaiyum, perunmiyum

உண்மையும், பேருன்மியும்

எம்மொழியே செம்மொழி

                                                  எம்மொழியே  செம்மொழி

இனிய  தமிழ் மொழியே   நமக்கு அமுதம்,
நமக்கு இன்பம் தந்தாலே நல்லமுதம் !
எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி
அருளாளர்களும், ஆழ்வார்களும், வளர்த்த மொழி !

தமிழுக்கும் அமுதென்றுபேர், என்பார்  பாரதிதாசன்,
தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தோள் என்பார்,
தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்,
தமிழையும், தாயையும் புகழாமல்   இருப்பவருண்டோ தரணியிலே !

செந்தமிழ் நாடெனும்  போதிலே  இன்பத்
தேன்வந்து  பாயுது  காதினிலே என்றார், பாரதியார்,
செம்மொழி மாநாடு நடந்ததும்  கோவையிலே,
தமிழர்கள்   கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே !

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் !
தமிழ் படித்தவர்களுக்கே தமிழ் நாட்டில் வேலை,
தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
எம் தமிழ்மொழியும், பெருமைவுறுமே பாரினிலே !

தமிழ் பரவும் வகை செய்திடுவோமே !
கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே !
எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

தமிழ், தமிழென  முரசு கொட்டவேண்டாம் !
ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம் !
தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு !
பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

 எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே !
இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே !
வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு !
அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்கு தனிச்சிறப்புண்டு !

ஆங்கிலப் பெயர் பலகையினை தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே  ஒரு சிறப்பன்றோ !
தனியார்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
அறிவியலிலும்,உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்
                                                                                                                                 வேண்டுமே!

எம்மொழி, செம்மொழி  எனச்  சொன்னால் போதாது!
ஏற்றமிகு  மாற்றங்கள்  செய்திடல் வேண்டும் !
மாற்றங்கள் செய்ய பள்ளியும்,கல்லூரியும் ஒருமைபடவேண்டுமே !
பாமரனும் படித்து  உவகை  கொள்ளவேண்டுமே !

இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிலவவேண்டும் !
எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும் !
தலைமுறைகள் பல கழிந்து குறைகளைய வேண்டும்.!
எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர் !   வாரீர் !

ரா,பார்த்தசாரதி





செவ்வாய், 20 நவம்பர், 2012

நரசிம்ம ப்ரபத்தி

                                                              நரசிம்ம  ப்ரபத்தி 

மாதா  நரசிம்ம:  பிதா நரசிம்ம:
ப்ரதா  நரசிம்ம: சகா நரசிம்ம:
வித்யா நரசிம்ம: த்ரவினம் நரசிம்ம:
ஸ்வாமி நரசிம்ம: சகலம் நரசிம்ம:
இதோ  நரசிம்ம: பரதோ நரசிம்ம:
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ம:
நரசிம்ம தேவாத், பரோ நகஸ்ஸித்:
தஸ்மான்  நரசிம்ம: சரணம் ப்ரபத்யே !  

manithanum erumbum

மனிதனும் !  எறும்பும்!

சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .

யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு  எறும்பிற்கு ?

மனிதனே!

சுறுசுறுப்பாய்  இரு !
கடினமாய்  உழைத்துடு !
சேமித்துடு !

எதையும்  ஐயிந்தறிவு எறும்பிடம்தான்  கற்றுகொள்ளவேண்டுமா ?

ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 18 நவம்பர், 2012

veda vakku

                                                     வேத வாக்கு

1,     பல புண்ணிய தலங்களையும்  பல நாடுகளையும் சுற்றிவருதல்,
2.     ஏழை, எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும்  உதவுதல்
3.    ஏழைகளுக்கு    கல்வி  அளித்தல்.
4.    பெண்களுக்கு  மாங்கல்யம், தானமளிதல்
5.    வாயில்லாத  ஜீவன்களை பராமரித்தல்
6.    பொன், பொருள்களை  தானமாக  அளித்தல் 
7.   ஆலய பணிகளுக்கு உதவி அளித்தல்   
8.   கூட்டுப் பிராத்தனைகளில் கலந்து கொள்ளுதல்
9.   முதியவர்களுக்கும்  ஆதரவுவற்ற    குழந்தைகளுக்கும்  உதவிசெய்தல்
10. அனுதினம்  கடவுளை  துதித்தல்

மேற்குரிய நற்செய்கையால்  உண்டாகும் புண்ணியங்கள்  யாவும்
உன்  தாய்,  தந்தை இருவரையும்   ஒரு முறை பக்தியுடன்
 வணங்கினாலே  உங்களுக்கு கிடைத்து விடும்  என்பது வேதவாக்கு

                                                                                        ரா . பார்த்தசாரதி