செவ்வாய், 29 மார்ச், 2022

k ann kanda deivam

 

    கண்கண்ட  தெய்வம் 


தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே 
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.

பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் .

உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?

உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே

என்   வளமே உன்  சிறப்பு,
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 

அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.

வெள்ளி, 11 மார்ச், 2022

 


                                                                   எங்கே   அவள் 

       1,  அன்பால்  அரவணைக்கும்   அன்னை     அவள் !
     2   பொறுமையின் புகலிடமாய்  இருப்பதும்  அவள் !
     3.  இலவாழ்க்கையில்  இனிமை சேர்ப்பதும்    அவள் !
      4/  தன்னுயிரை  பணயம் வைத்து உயிர் கொடுப்பதும்  அவள்  
     5.  தமையனுக்காக    தாங்கும்  தங்கை   அவள்  !
    6   சுமைகளை  சுகமாய்    தாங்குவதும்     அவள்  !
   7   மனத்தால்  மயக்கும்  மனைவி  அவள் !
  8.   கண்களால்  கவரும்  காதலி   அவள்  !
  9   பிள்ளைக்கும், கணவனுக்கும் பாலமாய் இருப்பதும்  அவள் !
 10   குடும்பத்தில்  பல பதவிகளை  வகிப்பதும்    அவள் !
11  எதிர்நீச்சல் போட்டு சாதிப்பதும்  அவள் !
12. தியாகத்தின் திருவுருவாய்  திகழ்பவள்   அவள் !

    மங்கையராய்  பிறப்பதற்கு  மாதவம் செய்திடவேண்டும் 
    மாநிலத்தில்  மாட்சிமை  பெற்று  விளங்கிட வேண்டும் 
   மகளிர் தினத்தை ஆண்டுக்கு, ஆண்டு போற்றிட வேண்டும் 

   எழுதியவர் :  பாலா