வெள்ளி, 21 ஜூன், 2013

kankanda deivam

                                                    கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே 
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.

பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் .

உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?

உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே

என்   வளமே உன்  சிறப்பு,
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 

அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.


   ரா. பார்த்தசாரதி.

பின்குறிப்பு::  அவந்திகா, அக்சத் , ருஷில் வியாஸ், ரியன், கேசவ்,  இவர்கள் இருபது வருடம் 
கழித்து  கவிஞன்  ஆனால் மேலே எழுதப்பட்ட  கவிதையை  அவர்களே எழுதிருப்பார்கள் .
தாய் தந்தையர்களே   சற்றே நினைத்துப்பாருங்கள்.