சனி, 21 செப்டம்பர், 2019

Thirumalai Deivam





                                 திருமலை தெய்வம்

திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனை  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசினம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

திருமலை வாசனின் பாத கமலினை போற்றிடும் வேளை
 சுப்ரபாதம்  எனும் சேவையுடன் விழித்தெழுகின்ற  காலை

புனித  புஷ்காரணியில்  காட்சி தரும் தோற்றம் 
சங்கு, சக்ரம் ஏந்தி காட்சி தருவதே  நமக்கு ஏற்றம் ! 

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

ரா.பார்த்தசாரதி