சனி, 14 செப்டம்பர், 2013

ஓற்றுமைப் பூக்கள் மலராதோ !



ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!


* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!

* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல்
மறையாதோ
புத்தாண்டே!


* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்
தானமாய் கிடைக்காதோ
புத்தாண்டே!


* தேசங்களுக்கிடையே
பிரிவினை
முட்கள் சிதைந்து
ஒற்றுமை பூக்கள்
மலராதோ

புத்தாண்டே!

* ஆட்சியும்
அதிகாரமும்
ஏழைகள்
ஏக்கம் தீர்க்காதோ
புத்தாண்டே!


* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக