வியாழன், 24 செப்டம்பர், 2015

ராகுல் சீமந்தம்

                                                               ராகுல் சீமந்தம் 

கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு பாரினிலே 
 பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே 
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே 

இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு 
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே 

பெண் முழுமை அடைவதும்  தாய்மையாலே ,
தாயாக  மாறுவதும்  அந்த  தாய்மையாலே 

இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு  பூச்சூட்டல் 
ராகுலின் அன்பு மனைவியாம், 
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும் 
குடும்பத்தின் குல விளக்காய் திகழ, 
பூச்சூட்ட வாருங்கள் !   பூச்சூட்ட வாருங்கள் ! 

மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி 
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து 
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள் 

திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம் 
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய் 
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம் 
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள் 

பூமிக்கு முகவரி தந்ததும்  பெண்ணாலே 
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே 
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே 
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

பெண்ணே நீதான்




                                        பெண்ணே  நீதான்


  ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

  பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

   என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

  திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

 நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .


ரா.பார்த்தசாரதி