புதன், 31 ஜூலை, 2013

காலம் மாறிப் போச்சு







   காலம்   மாறிப் போச்சு

வேராக மறைந்து, தான் தனித்துவமின்றி
வேறாகிப் போகும் காலம், மாறிவிட்டது!

மழலையைக் காப்பகங்களில் விட்டுத் தம்,
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை!

இருவர், பொருளீட்டச் செல்லும் காலமிது!
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமிது!

தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்காத
சேய்கள் பெருகினால், நாடு நலமாகுமே!

ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளையே எண்ணினே
காலத்தின் கொடுமையினை கண்டு  வருந்தம்மடைந்தேனே !

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக