வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஒரு தாயின் தவிப்பு

                                                  ஒரு தாயின் தவிப்பு

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !
நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !
இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !
இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !
உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்தது !
பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !
மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றேன் !

என்று உன்னை ஸ்கைப்பில்  காண்பேனோ 1
உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,
ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !
நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,
என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,
உனது  ஈமெயில், ஸ்கைப்பும் எனது உடலைக் காட்டும்மா !
நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,
பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

ரா.பார்த்தசாரதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக