சனி, 28 ஜூன், 2014

தந்தையர் தின விழா

                                                       

                                                             தந்தையர்  தின விழா

                            எந்தையும்,  தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு ,
                            அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு ,
                            தாயை  விட  சிறந்த  கோவில்  இல்லை,
                            தந்தை  சொல்மிக்க  மந்திரம்  இல்லை !

                            தாயிடம்  அன்பும்,  தந்தையிடம்  அறிவும்,
                            அவர்களால்  கல்விமானாய் உலகில் திகழவும்,
                            பணம் ஒன்றினால்  பாகுபடுத்த  தெரிந்தவனாய்,
                            ஏன்  பாசத்தை மட்டும் காட்ட   தயங்குகின்றாய் !

                            அன்று அவர்கள்  கொடுத்த   முகவரிதான்,
                            இன்று  உன்னை  அடையாளம் காட்டுகின்றதே,
                            பழையதை  மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
                            வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

                            தந்தையே  உன்  பிறப்பிற்கு   காரணம் ,
                            தந்தையே  உன்  அறிவிற்க்கு  ஆதாரம்,
                            பணம்  என்றும்   எட்டிப்  பார்க்கும்,
                            பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும் !

                            வாழ்கை முழதும்  குடும்பத்தின்  தூணாய் , 
                            உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
                            உலாவி   வரும்  தந்தையே   இடிதாங்கி,
                            ஏன் எனில்  நல்லது  கெட்டதெல்லாம் அவர்மேலே!

                            தந்தைக்கும், தாய்க்கும்  ஊன்று கோலாய்  இருந்திடு ,
                            அவர்களே  கண்கண்ட  தெய்வமென  நினைத்திடு,
                            தரணியில்  என்றும்    சிறந்து  விளங்கிடு,
                            எல்லோர்க்கும்   நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு !  

                           ரா.பார்த்தசாரதி
                        
                          



Vivek kavithai Ezuthinaal




                                     விவேக் கவிதை எழுதினால் 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்   ஏனோ !
கண்ணும்,கண்ணும் பேசி ஒன்றாய் கூடும் விநோதம்தானோ !
என் இதயத்தில்  என்றும்  இதய  ராணியாய்  இருப்பதும் ஏனோ !
எண்ணாத  எண்ணங்கள்  எண்ணுவதும்   ஏனோ !

மெல்ல தொலைபேசியில்  அன்பாய் அழைத்ததும்  ஏனோ!
மெல்போர்னில்  நீ அருகில் இருந்ததை மறந்திருப்பேனோ !
இரு உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றாய் தேடுவதும்   ஏனோ 1
நீ அருகில் இருந்தால் குளிர்வதேனோ ? விலகினால் சுடவதேனோ !

உன் பார்வை ஒன்றே  போதுமே !  
பல்லாயிரம்  கதைகள் கூறுமே !
என் கவிதை உன்னை மாற்றிடுமே !
என் உள்ளம் உன்னை என்றும் நேசித்துடுமே !!

செல்லும்முன் பல பரிசுகள்  கேட்டதுமே,
என்னுள்   ( என் உள்ளத்தில் )   இருக்கும்  உன்னை  தவிர,
இந்த விவேக் குமாருக்கு கொடுக்க தெரியலையே,
இது காதலா ! கவிதையா ! என்று நீ யோசிக்காமல் இல்லையே !


புதன், 25 ஜூன், 2014

வாரணமாயிரம்







                                                            






                                                               வாரணமாயிரம் 

                                         மத்தளம் கொட்ட  வரிசங்கம் நின்றூத


                                         முத்துடைத் தாமம், திசை தாழ்ந்தியப்பந்தற்கீழ் 

                                         மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் 

                                         கைத்தலம்  பற்றக்  கனா கண்டேன் தோழி!  நான்   

செவ்வாய், 24 ஜூன், 2014

பார் மகளே பார்





  

                                             
                                                பார் மகளே பார்.

பெண்ணின் வாழ்வே நாற்றங்கால்  நாற்று போலே
வேறு இடத்தில்  நடவு  செய்வது போலே
பிறந்த இடத்தை விட்டு புகுந்த வீட்டில் வாழ்வது போலே ,
தானே ஒளி தந்து  ஒளிரும்   மெழுகுவர்த்திப் போலே ,

வேராக மறைந்து, தான் தனித்துவம் பெற்றதாலே
வேறாகிப் போகும் காலம், மாறியதாலே
மழலையைக் காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிடுவதாலே, 
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை பேர் இக்காலத்திலே !


 இருவர், பொருளீட்டச் செல்லும் காலமாய் இருப்பதாலே
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமாய்  இருப்பதாலே
தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்கியிருப்பதாலே
சேய்கள் பெருகினால், நலமாகுமோ இத்தரணியிலே !


பிறந்த முதல், உன் திருமணம் வரை கூட நின்றவர்களை மறந்து,
என் வீடு, என் குழந்தை , என் கணவன் என்ற நினைப்பா
பிறரை நினைக்க செய்யாத மனதின் இயல்பா 
ஏனோ  சில சமயம் பேசிடும் தொலைபேசியின் தொடர்பா 

உடன் பிறந்தவர்களையும், வாழ்க்கைக்குஆணிவேறெனஇருந்தவர்களை 
உனக்கு  நினைவு வந்தால்தான் தொடர்பு கொள்கிறாய்
ஏனோ எந்திரமான  வாழ்கையில் சிக்கித் தவிக்கின்றாய் 
நிம்மதியும், இன்பமான வாழ்க்கையை    இழக்கின்றாய்

ஏனோ அயல் நாட்டு மோகம், தாய் நாட்டை மறுக்கும் வேகம்,
பணத்திற்காக, பந்த பாசங்களை   துறக்கும் சோகம்,
உன் குடும்ப வளர்சிக்காக  நடத்தும்  யாகம் ,
என்று  முடியுமோ  இந்த அயல்நாட்டு மோகம் !

பெண் ஆனவள்  தாய், மனைவி, பாட்டி  என பல பதவியின் உருவிலே, 
தாய் நாட்டுப்பற்றும்,  தாய்,தந்தையரின் பாச  நினைவிலே 
என்றாவது  தாய் நாடு திரும்புவாய்  என்ற விருப்பத்தினாலே 
உன்னை எதிர்நோக்கும் உற்றார், உறவினர்களின்எதிர்பார்ப்பிலே 

பார்  புகழும்  பெருமை பெற்று, தாய் நாட்டின் வளம் காக்க
வந்து அடைவாய் தாய் நாட்டின் வளமை பெற  உழைக்க
சுற்றமும்  நட்பும் உன்னை எதிர்பார்க்க   சற்றே
நீ பிறந்த தாய்நாட்டின் நிலைமையை பார்  மகளே, பார். 


ரா.பார்த்தசாரதி


                     
                               


திங்கள், 23 ஜூன், 2014

திருமணத்தின் முக்கியமான ஆபரணங்கள்



                              திருமணத்தின்  முக்கியமான  ஆபரணங்கள்


           தாலி :   தாயாகி  தாலாட்டு பாட  கணவன் தரும் பரிசு .

          கோடி/ கூரப்புடவை :   லக்ஷ்மிகடாக்ஷமாய் இருப்பதற்கும் ,
                                                           மானத்தை காப்பதற்கும் உடுத்துவதாகும்.

          தோடு :     எதையும்  காதோடு போட்டுக்கொள், வெளியே   
                                சொல்லாதே .

          மூக்குத்தி :    எதையும் முன்யோசனையுடன் செய்வதற்கும்
                                       சமையலின் வாசனை  அறியவும் போடப்படுகிறது !

          வளையல் :   கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும்
                                          என்பதற்காக  அணியபடுகிறது .

          ஒட்டியாணம்:   கணவன், மனைவி  ஈருயிர், ஒருயிராய் இருபதற்காக
                                          ஒட்டியாணம்  அணிவிக்கப்படுகிறது .

           மோதிரம்:         எதிலும் உன் கைத்திறனை காட்டுவதற்காக
                                          மோதிரம்  போடப்படுகிறது .

           மெட்டி:            மணப்பெண்  என்பதற்காகவும் , தீயசக்திகளில் இருந்து
                                        விடுபடவும்  அணிவிக்கப்படுகிறது . 


              ரா. பார்த்தசாரதி

வாரணமாயிரம்



                                                        வாரணமாயிரம் 

                                         மத்தளம் கொட்ட  வரிசங்கம் நின்றூத

                                         முத்துடைத் தாமம், திசை தாழ்ந்தியப்பந்தற்கீழ் 

                                         மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் 

                                         கைத்தலம்  பற்றக்  கனா கண்டேன் தோழி!  நான்     

வெள்ளி, 20 ஜூன், 2014



                                             மனசாட்சியை கேட்டுப்பாருங்கள் 


                                      வாழ்கையின்  உண்மையான  சந்தோஷம்

                                      தாயிடத்தில்   பார்த்த  பாசமா,

                                      மகனிடமும், மகளிடமும், உணர்ந்த  அன்பா.

                         அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்தபாசமா,

                                      இது, எந்த  ரகம்  என்று  புரிந்து கொள்ளமுடியாத 

                                      நம்மை  மகிழ்சிக்  கடலில் மூழ்கடிக்கும் நம் 

                                      பேரன், பேத்திகளின்  கள்ளமற்ற  சிரிப்பா !

                                      இவர்களின்  நினைவு கொண்டு,
                                       
                                        மற்றவர்கள்  செய்யும் தவறுகளை மன்னித்து 

                                    ஏற்றுக்கொள்ளும்  மனித நேயமா எல்லோரையும்     அரவணைத்து  செல்லும்  பண்பா  என்பதை  உங்கள்  மனசாட்சியைக்

                                      செல்லும்  பண்பா  என்பதை  உங்கள்  மனசாட்சியைக் 

                                      கேட்டுக் கொள்ளுங்கள் .

                                      இன்று  உள்ள  தாதா  பாட்டிகளின்  நிலைமை இதுதான் !


                                        ரா. பார்த்தசாரதி

புதன், 18 ஜூன், 2014

என் பார்வையில் கண்ணதாசன்

                    என்  பார்வையில்  கண்ணதாசன்
 
கவியரசு  கண்ணதாசன், 1974ஆம்  ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் 
பேரவைக்கு தலைமை தாங்க வந்தார்.  வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று  ஓர்  தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை  நினைத்துப்பார்த்தேன்.

அன்று, கண்ணதாசன்,  நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர்  ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள்.
எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று !  அரங்கமே களை கட்டியது.
இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது.  தேனிர் இடைவேளை வந்தது.  இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு ,  ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான்   தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.! 

ஐயா,  ஒரு சந்தேகம் ! தாங்கள்  அத்திக்காய் , ஆலங்காய்  வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே  பாண்டியா திரைபடத்தில் ) பல  காய்களை கொண்டு காய்ப்பது  ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?
அதற்கு புன்சிரிப்புடன்,  காதலன்  வெண்ணிலவை பார்த்து என்னை   வேண்டுமானாலும்  காய் , என் காதலையும், காதலியையும்  காயாதே என 
சுருங்கச் சொல்லி தெளிவித்தார்.  என்னே  அவரது கவி நயம்.

அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி 
மாணவனுக்கு  அன்று வயது இருபத்தொன்று.  ஆம், அன்று பரிசுபெற்ற 

மாணவன்தான்  இன்று  அகவை அருபத்தொன்று அடைந்த   ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன் .

தந்தையர் தின விழா

                                            தந்தையர்  தின விழா

                            எந்தையும்,  தாயும் மகிழ்ந்து குலாவிய  நம் நாடு ,
                            அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்று  கூறிய நாடு ,
                            தாயை  விட  சிறந்த  கோவில்  இல்லை,
                            தந்தை  சொல்மிக்க  மந்திரம்  இல்லை !

                            தாயிடம்  அன்பும்,  தந்தையிடம்  அறிவும்,
                            தந்தையால்   கல்விமானாய் உலகில் திகழவும்,
                            பணம் ஒன்றினால்  பாகுபடுத்த  தெரிந்தவனாய்,
                            ஏன்  பாசத்தை மட்டும் காட்ட   தயங்குகின்றாய் !

                            அன்று அவர்கள்  கொடுத்த   முகவரிதான்,
                            இன்று  உன்னை  அடையாளம் காட்டுகின்றதே,
                            பழையதை  மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
                            வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

                            தந்தையே  உன்  பிறப்பிற்கு   காரணம் ,
                            தந்தையே  உன்  அறிவிற்க்கு  ஆதாரம்,
                            பணம்  என்றும்   எட்டிப்  பார்க்கும்,
                            பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும் !

                            வாழ்கை முழதும்  குடும்பத்தின்  தூணாய் , 
                            உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
                            உலாவி   வரும்  தந்தையே   இடிதாங்கி,
                            ஏன் எனில்  நல்லது  கெட்டதெல்லாம் அவர்மேலே!

                            தந்தைக்கும், தாய்க்கும்  ஊன்று கோலாய்  இருந்திடு ,
                            அவர்களே  கண்கண்ட  தெய்வமென  நினைத்திடு,
                            தரணியில்  என்றும்    சிறந்து  விளங்கிடு,
                            எல்லோர்க்கும்   நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு !  

                           ரா.பார்த்தசாரதி
                       

செவ்வாய், 17 ஜூன், 2014

அன்புள்ள கணவா !


                                                  அன்புள்ள  கணவா !

                          அன்புள்ள  கணவா!  ,உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்
                         என் பெண்ணுள்ளம்  எதிரொலியாய்  இருந்தாலும்
                          நான் என்றும், நீ என்றும் இருவராக  இருந்தாலும் ,
                         நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும் 

                         உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும் ,
                         சுகமும், துன்பமும், சரிபாதியாய்  இருந்தாலும் ,
                         பூவாகி, காயாகி , கனியாய்  இருந்தாலும் ,
                         நீயாகி,  நானாகி, நாமாய்     இருந்தாலும்,

                         சுகம், சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
                         மனம்,  பேதை மனம், மாறாத  சொந்தம் இருந்தாலும், 
                         இனமாகிய, பெண்,  உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
                         அது  பூப்போல  மென்மையாய் பூத்திருந்தாலும் ,

                        உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள்  வந்தாலும்,
                       தேன்   உண்ணும் வண்டாய்  நீ இருந்தாலும்,
                        தெம்மாங்கு  பாட நீ நினைத்திருந்தாலும்,
                        தொலைவில் இருந்தும்,  என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

                       கல்யாணம் முடிந்து , காதல்  மறைந்தாலும்,
                       பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
                       நமது  வாழ்கை எனும்  ஓடம்  ஓடிக்கொண்டிருந்தாலும்
                        பொங்கும் நமது உள்ளமே, வாழ்வின் புது வெள்ளமே!

                                         
                        


                          

ராஜகோபாலன்

                                                           
                 திரு. ராஜகோபாலன் - அவர்களின் எழுபதாம் ஆண்டு விழா
                                      (பீமரத சாந்தி திருமண வாழ்த்து  மடல் )

 இறைவன் ராஜகோபாலன் வீற்றிருப்பதோ  மன்னார்குடியில்  
திரு. ராஜகோபாலன்  அவர்களுக்கு பீமரத சாந்தி நடந்ததோ பூனேயில்

அகவை அறுபதும், எழுபதும்  என்றும்  பெருமை  உடையதன்றோ !
இவ்விழாவை நடத்தும் மகனும்,மகளும் பாராட்டுக் குரிவர்களன்றோ !

அவனியில் ஆயிரம் பௌர்ணமி  கண்ட  இல்லறதம்பதிகளே,
திருவாசகம்  பாடி  என்றும் வாழ்த்துவோமே !

திருமணமே  இல்வாழ்க்கையின்  தொடக்கமாகும் 
இதற்குள்ளே  எல்லாமே   அடக்கமாகும் !

கணவன்  என்றாலே  (கண்+ அவன் ), கண்ணைப் போன்றவனாகும்,
அவர் வழியே  உலகை  காண்பவள்  மனைவியாகும் !

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவனை மறைக்கமுடியுமா ?
ஆயிரம் உறவுகள், இருந்தாலும் மனைவி, கணவனை மறக்கமுடியுமா?

கண்ணின் அருகே இமைஇருந்தும், கண்கள் இமையை பார்ப்பதில்லை 
 மனைவி கண்ணின் இமையென இருந்து, கணவனைப்  பிரிவதில்லை !

காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் !
கணவன்,மனைவி உறவே என்றும் நிலைத்துவாழும் !

உலகில்  பிரிக்கமுடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில்  ஒதுக்கமுடியாதது   நட்பும்,  உறவும் !

அன்பும், அறனும் உடைத்தாயின் , இல்வாழ்க்கை 
பண்பும்   பயனும்  அது.              ( வள்ளுவன் வாக்கு)

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு, பீமரத சாந்தி செய்துகொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு,  கமலா, பார்த்தசாரதி தம்பதிகளின்
 அனந்த கோடி  நமஸ்காரங்கள் .
   
21-08-2014  ஆங்கில பிறந்தநாள் வாழ்த்தாகவும் ,   பீமரத சாந்தி திருமண 
வாழ்த்தாகவும்  எடுத்துக்கொள்ளவும் .

ரா. பார்த்தசாரதி

     

வியாழன், 12 ஜூன், 2014

praveen thiruman vazthu madal

                பிரவீன் நாட், ஐஸ்வரிய   திருமண வாழ்த்து மடல்

மணமகன்:பிரவீன் நாட்                           இடம்: திருச்சி கலைவாணர் அரங்கம் 
மணமகள்:  ஐஸ்வரியா                             தேதி :07 - 07-2014

1. இன்று திருச்சி கலைவாணர்  அரங்கில் ஓர் கல்யாண  மேடை ,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. காதலை முடித்து, திருமணம் புரியும் பிரவீன் நாட் எனும் ஆடவனே !    
                                                                                                                                           
   என்றும் நீ  அமெரிக்காவில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே
 
4.  காதல் அழகாய் பூத்துதே,  சுகமாய்  தாக்குதே,
     இரு உள்ளங்கள் சொல்லாமல், கொள்ளாமல் பந்தாதுடுதே !

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? கழுத்தினில்  தாலி விழும் வரை !   

6. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
  * வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

7  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !                                                                                                      
8. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம்
     திருமதியின்  பெயரோ  ஐ ஸ்வரியா என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
 
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  பிரவீன் நாட், ஐஸ்வரியா திருமணம்.

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு)

       ரா.பார்த்தசாரதி .

திங்கள், 9 ஜூன், 2014






                             
அளவுக்கு மிஞ்சினால்...
- வசந்தா சுந்தரராஜன்|மார்ச் 2007||(3 Comments)
Share: 
Click Here Enlargeஉணவு அளவோடு உண்டால் ஆரோக்கியம்
அளவு மீறினால் அஜீரணம்
அளவுக்கு அதிகமானால் விஷம்தான்!

உடை அளவாய் உடுத்தினால் அழகு
அளவு குறைந்தால் அசிங்கம்
அரைகுறையானால் ஆபாசம்!

காற்று அளவாய் வீசினால் தென்றல்
அளவு அதிகமானால் புயல்
அளவை மீறினால் சூறாவளி!

கடல் அலைகள் அளவாய் இருந்தால் மியாமி
அதிகரித்தால் பெளர்ணமி
அளவைமீறி ஆர்ப்பரித்தால் சுனாமி!

நெருப்பு அளவாய் எரிந்தால் தீப ஒளி
அதிகம் எரிந்தால் தீப்பந்தம்
அளவை மீறினால் காட்டுத் தீ!

தானம் கொடுக்க மறுத்தால் கருமி
அதிகம் கொடுப்பவன் தருமி
பிறர் சொத்தைத் தன் பேரில் எடுத்தால் பினாமி!

எதையும் சுருக்கமாய்ச் சொன்னால் ஜோர்
சிரிப்பாகச் சொன்னால் ஒன்ஸ் மோர்
அடிக்கடி சொன்னால் போர்!

மனிதனே ! உறவையும், நடப்பையும் உதறிவிடாதே





                          மனிதனே !   உறவையும், நட்பையும்  உதறிவிடாதே                     


         பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும்  நட்பாகும்                           
        மண்   எனப்  பிரித்தால்,  மனிதம்  என்றும்  சாகும்

         
இனம்  எனப்  பிரித்தால் இனிமை  
இல்லாமல் போகும

          சொந்தம் என  வாழ்ந்தால்  என்றும் சுகமாகும் ! 
        மனிதநேயத்துடன்  வாழ்ந்தால்  என்றும் நலமாகும் !

          பாசத்தையும், நேசத்தையும்  பாலமாக அமைத்திடு
        சாதி மத  பேதத்தை  வேரோடு  அழித்திடு 

          வயதிற்க்கும்,படிப்பிற்க்கும் என்றும் மரியாதை கொடுத்திடு  

          நட்பும், உறவும்  உன்  உடன்பிறப்பு  என நினைத்திடு  
       
        மன்னிக்கத்  தெரிந்த  மனிதனை  நல்லவன் என கருதிடு !

          கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு !
  
          மனிதனே, உறவையும்,நட்ப்பையும்  உன் உடன் பிறப்பு  என !நினைத்துடு 

       மனிதனே, உறவும், நட்பும்  ஓர்  இருசக்கர   வண்டிதானோ ! 
       நட்பையும், உறவையும் நீ  பணத்தினால் மதிகாததும் ஏனோ !  

      இதை  படித்தபின்பும், உறவையும், நட்பையும் உதறிவிடாதே !  


     ரா.பார்த்தசாரதி 







Manithanay !!      Enrum    Natpaiyum,  Uravaiyum      Utharevedathey  !   
                               
Pazhakum  Vethathil  Pazhkinal    Pakaiyum  Natpakhum !!

Sontham Yena Vazhenthal Enrum Sukamaghum 
Mann Ena Perithaal Manitham Sakuhum !
Yenam Ena Perithaal Enemai Sakuhum !
Manitha Neyathudan Vazhenthal Enrum Nalamaghum !


Pasathaiyum, Nesathaiyum Palamagha Amaithedu !
Saathimatha Pethathai Vayrodu Azhithuvidu !
Vayathirkum, Padippirkum, Enrum Mariyathai Koduthidu !
Natpum, Oravum, Unn Udanpirapu Yena Nenaiithedu !


Mannika Therintha Manithan Nallavan Yena Karuthidu !
Kobhathaiyum, Aanavathaiyum, Adakki, Uravinai Kathidu !
Manithanay, Ooravum, Natpum, Oor Iru Chakkra Vandithano !
Natpaiyum, Uravaiyum, Nee Panathinaal Mathikathathum Yeyno !


ETHAI PADEETHAPINUM , NATPAIYUM, URAVIYM UTHAREEVIDATHAY !
R.Parthasarathy.



ஞாயிறு, 8 ஜூன், 2014

கடல் அன்னை



                                                   கடல்  அன்னை 

                          கடலும் ,  சமுத்திரமும்  ஒன்றே,
                          உலகமும்  கடலால்  சூழ்ந்திருபதும் தெரிந்த ஒன்றே        

                          கடலில்  என்றும் அலைகள் ஓய்வதில்லை 
                          மனித வாழ்க்கையிலும் இன்ப,துன்பங்கள் ஓய்வதில்லை!
                       
                          உலகிற்கே  மழை தந்து  தாகம்  தீர்க்கிறோமே
                          உப்புத் தண்ணீரையும்  குடிநீராய் மாற்றுகிறோமே

                          என்றும் பல உயிரகள் என்னுள் வாழ்கின்றதே
                          தேவை அற்ற கழிவுகளை செலுத்தி உயிர்கள் இறக்கின்றதே! 

                          நதிகள் பிறந்தாலும் எங்களிடம்  சேருகின்றதே 
                          நீ  இறந்தாலும் உன் சாம்பல் என்னுள் கரையுதே 

                          நான் கோபம் அடைந்தால்  சுனாமியாய் சீறுவேன் 
                          கடலோர  மக்களையும்  பழி  வாங்குவேன் !

                          சாக துணிந்தவனுக்கு  நான் முழங்கால்  அளவு 
                          என்னை  பற்றி உனக்கே  தெரியும்   என்  அளவு !

                          மனிதனே !  என்னால்  என்றும்  உலகிற்கு  நன்மையே !
                           மனிதனே! உன்னால்  என்றும்  எனக்கு  தீமையே!

                           என்  அழிவு  பிரளயத்தில்தான்   முடியும்
                           உன்  அழிவு  பொறாமை,பேராசையாலும் அழியும்

                          உப்பு நீரையும்,  குடிநீராய் உனக்கு அளிகின்றேன் 
                          காலம்  தவறாமல் மழை  பெய்விக்கின்றேன் 

                          உன் வளர்ச்சிக்கும், வளமைக்கும் நான் உற்றதுணை 
                          என்னிடம் கருணைகொண்டு  தாயென  அணை !

                          கடலும், கடலைச் சார்ந்த  இடமே  நெய்தல் என கூறுவோம் 
                          கடல் அன்னை பிறந்தநாளாக  வாழ்த்துவோம் ! 

                           ரா.பார்த்தசாரதி 


                           

                           



வெள்ளி, 6 ஜூன், 2014

பெயரிடாத ஆண், பெண் உறவு




                                     பெயரிடாத  ஆண், பெண் உறவு

        தர்ம சிந்தனை,  நல்லெண்ணம்  கொண்டு  உதவுபவன் ,
        செய்யும்  உதவிக்கு,  எந்த கைம்மாறு  எதிர்பாரான்,

        வேலைக்காரியின்,  மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
        கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
        மாதம்  ஒரு முறை அநாதை  குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
        இவர்கள்  எனது   பெயரிடப்படாத  உறவுகள் என சொல்லவேண்டும் 

        உறவுகளின்  பெயர் இருந்தும்,  உறவு  மறந்துபோகும் !
        பெயரே  இல்லாத  ஆண், பெண்  உறவுகள் வந்து போகும் !            

        பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
        நாம்  செய்யும்  நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

        ஒழுக்கம்  மாறாத  அன்பும்,  பழகும்  விதமே  உறவின் எல்லை !
        இதனை  அறிந்த  மனித இனத்திற்கு  என்றும்  கவலை இல்லை !

        நான்  நோய்வாய்பட்டு  இருந்தேன்   சில  நாட்கள் !
        என்னை  காண வந்ததே அந்த பெயரிடப்படாத  உறவுகள் !

        ரா. பார்த்தசாரதி

         
 


வியாழன், 5 ஜூன், 2014

உலக சுற்றுசூழல் தினம்

   



                                                      உலக  சுற்றுசூழல் தினம் 
                  

                 சுற்றங்கள்  சூழ  வாழும்   மனிதனே !
                 சற்றே சுற்றுப்புற  சூழலை  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?
                 பிற நாட்டினை மேற்கோள் காட்டும் உன் வார்த்தைகள் 
                 ஏன்  உனது  நாட்டிற்கு  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்!

                 மனிதனே !   உன் சுற்றுப்புற  சூழலையினை  பார் !
                 இதற்க்கெல்லாம்  நாமேதான்  காரணம்,
                 வீட்டின்  சுத்தம் ,   நோயின்  ஓட்டம்,
                 நாட்டின்  சுத்தம், சுகாதாரத்தின்  ஏற்றம் !

                 வீட்டிற்கு  ஓர் மரம், தெருவிற்கு பல மரம்',
                 வீட்டினை சுத்தமாக்கு , நாட்டினை பசுமையுடன் வளமாக்கு,
                 மனித வாழ்க்யினை . பொன்மயமாக்கு 
                 நமது  நாட்டினை பலவகையில் ஏற்றமுடியதாக்கு !

                 நமக்கு நாமே  சூளுரை  எடுத்துகொள்வோமே !
                 நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துகொள்வோமே,
                 நாட்டிலும்  பசுமை புரட்சி  ஓங்க   பாடுபடுவோமே!
                 உலக  சுற்றுசூழல் தினத்தை  பயனுற செய்வோமே !

               ரா. பார்த்தசாரதி




        
 

உலக சூற்று சூழல் தினம்



     

                உலக  சூற்று  சூழல்  தினம் - 05-06-2014


                   வானத்தைப்போல்   பரந்த  மனம்  கொள்,

                   மலையின்  உயரம்போல்  லட்சியம் கொள்,

                  கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

                 கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

                 உலகின்  சுற்றுசுழலையும்     பாதுகாக்க   எண்ணம்கொள் !

புதன், 4 ஜூன், 2014


                                       நீ  இருந்தால்  என்னோடு

                நினைப்பது   நிறைவேறும்   நீ  இருந்தால்  என்னோடு,
                நடப்பது  நலமாகும் நான் இருந்தால்  உன்னோடு ,
                இருவரும்  சேர்ந்திருப்போமே  என்றும் அன்போடு,
                இன்றுபோல்  என்றும்  வாழ்ந்திடுவோம்   பண்போடு!

                ஒருவரின்  இதயத்தில்  ஒருவர்  குடியிருந்தால் 
                ஒருவரில் இருவரையும், ஓருடலாய் கண்டிடலாம் 
                கண்களின்  பார்வையாலே  உன்னை கண்டிடலாம் ,
                இருவிழி  நேசத்தாலே  உன்னை  அறிந்திடலாம் !

               தனிமை  உனக்கேது,  தாங்கும் இதயம்  எனக்கேது,
               தனிமையில்  என்றும்  நாம் இனிமை காண முடியாது,
               உலகத்தை மறந்து,  உறவு சொல்லி  விளையாடு,
               உள்ளத்தை  அறிந்து  எனக்காக  வாழ்ந்திடு!

               காதல்   கவிபாடு, காலமெல்லாம்   விளையாடு ,
               காதல் ஒன்றே  காதலர்களின்  வழிபாடு 
               மனதை  பறிகொடுத்தபின்  வாழ முடியாது 
               உன்னை என்  நினைவில்  இருந்து மாற்ற  முடியாது !
 
               உன்  இருவிழிகளின்  நேசம், அதுவே காதல் தேசம்
               அதுவே  நான் சரண் புக  தேடும் காதல்  தேசம்
               நினைப்பது நிறைவேறும்  நீ இருந்தால் என்னோடு,
               நடப்பது  நலமாகும்  நான் இருந்தால்  உன்னோடு !

              ரா.பார்த்தசாரதி