புதன், 25 மே, 2022

sri krishna nichiyathaartha vaztg madal


                                   ஸ்ரீ கிருஷ்ணாவின்  நிச்சியதார்த்தம் 

இடம்:       ராதா கிருஷ்ண மந்திர                                   தேதி: 26 மே 2022
          லீ  மாண்ட , இல்லிநாய்ஸ்  60439
2.  ருக்மணி,சத்யபாமா சமேத வேணுகோபாலஸ்வாமி அருளால் 
     ராதாகிருஷ்ணா மந்திரில்  ஓர்  நிச்சியதார்த்த  மேடை !

2.  திருமதி லதா திரு சுரேஷின் புதல்வன் ஸ்ரீகிருஷ்ணாவிற்கும் 
     சௌபாக்கியவதி  ஷீட்டலுக்கும் நிச்சியதார்தம்  இன்று 

3. இது கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை 
    இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே  அன்று .
     
4   காலம், தேதி, இடம்  முடிவுசெய்வதும்  நிச்சியதார்தமே 
    இறைவன் நாமங்கள்சொல்லி லக்னபத்திரிகை வாசிக்கப்படுமே !

5.  இருவீட்டாரும்  சேர்ந்து நடந்திடும் நிச்சியதார்த்த  விழா 
     உற்றார், உறவினர் சேர்ந்து நடந்திடும் விழா !

வாழ்க்கைத்  துணைநலம் நாடும் ஸ்ரீகிருஷ்ணா எனும் ஆடவனே 
    என்றும் அமெரிக்காவில்  ஷீட்டலுடன்  வாழ்ந்திடுவாய் சிறப்புடனே !

நகமும், சதையும் ( Bone & Skin) போல்  இருந்திட  வேண்டும் 1
    இரு கைகள் சேர்ந்தால்தான் வாழ்க்கை என அறிந்திட வேண்டும் !

8  திருமணம் என்பது  இருமனம்  அல்ல  
    அதுவே  இருமனம் கொண்ட ஒரு மனம் !
 
9 திருமதி ஒரு வெகுமதி என அழைப்பது பழக்கம் 
    திருமதீயின் பெயரோ ஷீட்டல்  என அழைப்பது வழக்கம் !

10 காலமும், காட்சிகளும்  வாழ்க்கையில் என்றும் மாறும் 
    கணவன், மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும்  !

11 பிறந்த வீட்டின்  குலம்  காக்க வேண்டும் 
    புகுந்த வீட்டின்  நலம்  காக்க  வேண்டும் !

12/ மலர் போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்ப்பெண்ணே 
     மண்வாசனை மாறாத குணம்  வேண்டும்  மணப்பெண்ணே !

13 நிச்சியதார்தம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே !
    அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்   ஆசியே !

14 ராதாகிருஷ்ணா மந்திரில் இருவீட்டாரும் சிறப்புற  நடத்தினரே 
     வேற்றுமையில் ஒற்றுமை கண்டு,விருந்துண்டு மகிழ்ந்தனரே !

15 அன்பும்  அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
     பண்பும் பயனும் அது.  என்பது வள்ளுவன் வாக்கு !

   ரா.பார்த்தசாரதி 
  


  


     





 

ஞாயிறு, 15 மே, 2022

 


                                                              ருஷில்  உபநயனம

  இடம்:  உட்சௌ  ஹால்   ஆர். ஏ  புரம்          தேதி: 1  13 மே 2022
                 சென்னை =28
         
                  இன்று உட்சவ்  ஹாலில்  ஓர்  உபநயனம் 
                 ருஷில் வியாஸ் ஆனந்தின்  உபநயனம் 
                பிரியா  ஆனந்தின்  தவ புதல்வனாய் 
                பார்வையால் எல்லோரையும் கவருபவனாய் 
              
                திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவனாய் 
               ஆசாரியன் ஸ்ரீ ராமானுஜர் அருள் உடையவனாய் 
               படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரனாம் 
              ட் ரும்ப்  வாசிப்பதில்  கைத்திறன்  மிக்கவனாம் 

             அன்பு  தங்கை ரிஷிகாவை  நேசிப்பவனாம் 
           தாத்தா, பாட்டிகளின் ஆசீர்வாதம் பெற்ற பேரனாம் 
           உலகில் சிறந்தது  தாய் தந்தையின் ஆசிர்வாதமே 
           உற்றார்,  உறவினர் பல்லாண்டு  வாழ்க  எனவும் 
           நொடிநொடியின்றி  வளரவும்  வாழ்த்தினரே  !!