செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

kankanda deivam

 


         கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.
பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் 
உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?
உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே
என்   வளமே உன்  சிறப்பு
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 
அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.

   ரா. பார்த்தசாரதி.

புதன், 7 பிப்ரவரி, 2024

 


                                   சாய்ஸ்ரீ , வினோத்    

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !
            ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
            பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, 

            எங்கள் தாய்மொழி தமிழில்
            மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
            மூத்தமிழ்  என்ற பெயருண்டு

            தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
            அன்பிற்கும் மூன்றெழுதுதான்
            தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
            அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   
            குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
            கல்விக்கும் மூன்றெழுதுதான்
            பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
            பக்திக்கும்  மூன்றெழுதுதான்  
            கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
             யுக்திக்கும் மூன்றெழுதுதான்  
             குழந்தையின்  சிரிப்பே  மழலை 
             பூக்களின்   சிரிப்பே  மணம் 
             நாடு நலம் பெற வேண்டின்
             நாட வேண்டும் நல்லவர்  நட்பு 
             படை வீரர்கள்  திறமையே  வீரம் 
             பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 
             மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
             கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம   

             எங்கள் அன்பு செல்ல பெண் சாய்ஸ்ரீ  மூன்று எழுத்து 
             எங்கள் அன்பு மருமகன் வினோத்  மூன்று எழுத்து 
              அவர்கள் எல்லா செயல்களிலும்  வெற்றி  எனும் 
             மூன்றுஎழுத்தினை அடைய வேண்டும் .

             ரா.பார்த்தசாரதி - 8148111951