புதன், 4 செப்டம்பர், 2013

மஹா சம்ரோக்ஷனம் - களியப்பேட்டை

களியப்பேட்டையில் இன்று, செண்பகவல்லி சமேத கார்வனதுள்ளன்

                                                                                                          மஹா  சம்ரோக்ஷனம்,
சம்ரோக்ஷனம்  செய்வதே தாயாரும், பெருமாளும் சக்தியும், மேன்மையும்
                                                                                                             அடையும்  தருணம் !

களியப்பேட்டையிலும், காஞ்சியிலும், காட்சிதரும் திருகார்வானனே,
வேண்டியதை, வேண்டியர்வர்களுக்கு  அளித்திடும்  இறைவனே !

தெய்வங்கள்  பலவாயினும், பலவுருவமானாலும் குணங்கள் ஒன்றே,
களியப்பேட்டையிலும், திருவெள்ளறையில் காட்சிதரும் செண்பக தாயாரும்
                                                                                                                                  ஒன்றே !

கார்வானத்தினாய், முகில்வண்ணனாய், விளங்கும் வேணுகோபலனே ,
இனிய  கானம்  வேய்ந்குழலில்  இசைத்திடும்   வேணுகோபலனே !

ருக்மணி, சத்யபாமா  சமேத   வேணுகோபாலன் சந்நிதி ,
இது  பக்தர்களுக்கு  தந்திடுமே  மனநிம்மதி !

மனிதனை  புனிதம்  ஆக்குவது  தெய்வதரிசனம் ,
மனதில்  சலனம்  போக்குவது   தெய்வதரிசனம் !

வேற்றுமையில்  என்றும்  நாம் ஒற்றுமை  காண்போம்,
வேற்றுமையில்லா  இறைவனை  என்றும் நாம் துதிப்போம்!

ரா. பார்த்தசாரதி
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக