திங்கள், 24 ஆகஸ்ட், 2020

Home Remedies to control Diabetes-Natural Home remedies for Diabetes By ...

பழுதடைந்த சிறுநீரகம் புதிது போல் மாற,சிறுநீரகம் பாதுகாக்கப்பட இது மட்டும...

கால்வீக்கம்,காலில் நீர் கோர்த்துக், கணுக்கால் வீக்கம் சரியாக இது ஒரு கைப...

கால்வீக்கம்,காலில் நீர் கோர்த்துக், கணுக்கால் வீக்கம் சரியாக இது ஒரு கைப...

therthal kavithai




ஓட்டு திருடர்களே
சீக்கிரம் வாருங்கள்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு
காத்துக் கிடக்கிறது!

காத்துக் கிடக்கிறோம்

காத்துக் கிடக்கிறோம்
திருடர்கள் எப்போது
கதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!

முன்பு திருடர்களுக்கு பயந்து

கதவை மூடுவோம்...
இன்று
திருடர்கள் வருகைக்காக
காத்துக் கிடக்கிறோம்!

தெரியாமல் வரும் திருடனை

அடித்து விரட்டுகிறோம்...
தெரிந்தே வரும் திருடனுக்கு
ஆரத்தி எடுக்கிறோம்!

ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு

ஐந்து ஆண்டு நாட்டை
அடகு வைக்க காத்து கிடக்கிறோம்!

வழி விடுங்கள் வழி விடுங்கள்

காவலரின் துணையோடு 
கயவர்கள் வருகின்றனர் 
வழி விடுங்கள்!

கயவர்கள் என்று தெரிந்தும்

கதவை திறந்து விட
தேர்தல் வந்ததே 

     

Sattray Senthiyungal





                  சற்றே   சிந்தித்துப் பாருங்கள் ! 
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  

\6 உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும் , முத்திரையையும் 
மூச்சு பயிற்ச்சி  கலைகளையும்    தினமும் கடைபிடியுங்கள                                                                                                         
அது  கொணரா வைரஸை எதிர்க்கும் இடமாகும்,
  1.                வாழ்வில்  பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்     
                   எதிர் காலத்தில் உன்னை தாங்கும் தூண்னாகும் 
  2.               பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  

10          நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
             அது  உன் நேர்மைக்கு இடமாகும்  

           
11.        சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
            அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

Kadal



காதல்....

அழகைப் பார்த்து
காதலிப்பதா
காதல்...

ஆளைப் பார்த்து
ஆடையைப் பார்த்து
ஒப்பனை பார்த்து...

பட்டம் பார்த்து
பதவி பார்த்து
வருமானம் பார்த்து...

ஜாதி, மதம் பார்த்து
வயது பார்த்து
வசதி பார்த்து...

உருவம் பார்த்து
அளவு பார்த்து
நிறம் பார்த்து...

சுற்றம் பார்த்து
சூழல் பார்த்து
பின்புலம் பார்த்து...

சுற்றிச் சுற்றி வந்து
அலையாய் அலைந்து
தவியாய்த் தவித்து...

தாடி வளர்ப்பதும்
மனம் வெறுப்பதும்
கற்பழிப்பதும்...

ஆசிட் ஊற்றுவதும்
கொலை செய்வதுமா
காதல்...

இல்லவே இல்லை...
இதயம் நிறைந்து
முழு மனதோடு
'எங்கிருந்தாலும் வாழ்க'வென
வாழ்த்தி அனுப்புவது தானே
உண்மைக் காதல்!

சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

சீரகத்துடன் இதை சாப்பிடுங்க.சிறுநீரகம் புதிது போல் மாறும்,KIDNEY DISEASE...

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

Poochuddal



ன்ன்`````
 
                                         மாலினியின்  பூச்சூட்டல்/சீமந்தம் 

கடவுளுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

நிக்கிலின்  மனைவி  மாலினிக்கு இன்று   பூச்சூட்டல்!
நிக்கிலின்    அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
அமெரிக்காவில்  இனிதே நிகிலுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, ரோஜா, என பல நறுமண மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனம் பூசி, பன்னீரும்  தெளித்து  வாழ்த்துவதே 
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்வதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடையுதே
தானும் அணிந்து, பிறர்க்கும்  வெகுமதியாய் கொடுக்கப்படுகின்றதே  

வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவிப்போமே ,
அவ்வளையல் ஓசை அவள் குழந்தைக்கும்,கணவனுக்கும்  சொந்தமே  
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
மாலினியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (மாலினி) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள்,  மாலினியை வாழ்த்திடுவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Nayagaarah Nathiye




                           நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
             

        1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞனஇல்லை 
           நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பாரதில்லை 

       2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே 
           மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   

      3. மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே

          மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே

      4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ? 

          அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

      5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய்

        நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

     6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா
        எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
     
    7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய்         நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

    8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !

       நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !

   9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய

       நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய்

     நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி