புதன், 21 ஆகஸ்ட், 2013

காதல் உள்ளங்கள்

                                                             காதல் உள்ளங்கள்

உன்னாலே  உயிர்  வாழ்கின்றேன் ,
உன்  நினைவாலே துடிக்கின்றேன் ,
உன்னை  சந்திக்க  விரும்புகிறேன் ,
முடியாவிடில், கனவில் சந்திக்கின்றேன் !

வானமெனும்  வீதியிலே  வரவேற்றேன்  கனவிலே,
நிலவை, மறைத்தேன்  உன்னை நினைத்தேன் நெஞ்சினிலே ,
தென்றலாய் வந்து என்னை அணைப்பாயா?
என் மனதினிலே வந்து கலந்துவிடுவாயா?

உன் விழிகளின் படபடப்பில் என் இதயம் சிறகடிகும்,
உன் பார்வையால் என்  உயிர் துடிதுடிக்கும் ,
என் மனம் கடல் அலைப் போல் மோதுதே,
காதலால் நம் பார்வை ஒன்றோடுஒன்று உறவாடுதே!

காதல் அழகாய் பூக்குதே , சுகமாய் தாக்குதே,
நம்  உள்ளங்கள் , சொல்லாமல்,கொள்ளாமல் பந்தாடுதே !

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக