ஞாயிறு, 28 ஜூலை, 2013

உண்மையும், பேருண் மையும்

 உண்மையும், பேருண் மையும் 

அடுபங்கரையே  பள்ளியறை என்று 
அகிலமாய்  இருந்த பாட்டிமார்  காலத்தில் !

சமையல்வேளை , வீட்டுவேலையோடு 
அருகிலிருந்த பள்ளிக்கு  செல்ல 
முடிந்தது  அம்மா காலத்தில்!

கல்லூரியில் படித்து  அறிவைப் பெருக்கி 
அலுவகப்பணியும்  சாத்தியமானது  அக்காமார் காலத்தில் !

நாகரிகத்தின் மாற்றங்கள், நவீன உடைகள், அலைபேசி  காதல் 
என சுந்தந்திரம் கிடைத்தது தங்கைமார் காலத்தில்,

அலைபேசியால் அளவான பேச்சு, முகம் அறியாதவரோடு " சாட்டிங் "
என்பது சுதந்திரத்தின்  அம்சம்.!

 தானியங்கி வாகனங்களை தாமே இயக்குகின்ற பேத்தி  ககாலத்தில்,
தலைமுறைக்கு, தலைமுறை பெண் இனம் முன்னேறியதே,!

படிப்பு, பணம், என வளம் பெருகியதே ,
இது  உண்மையென  எல்லார்க்கும்  தெரிந்ததே!

பாட்டி, அம்மாக்கள்  இருந்த காலத்தே,
இருந்த அன்பும், பண்பும் சுருங்கி போனதே,
இதுவும் ஓர்  பேருண்மையாதே.!

இன்று பணம் எட்டிப் பார்க்கிறது  பாசம் விலகியே போகிறது.

 ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக