புதன், 15 ஜூலை, 2015

மெல்லிசை மன்னன்

                                                       மெல்லிசை மன்னன் 


இசைக்கு  உருகாதார்  யாவரும் இல்லை 
இசையை வாழ்வோடு இணைத்து  வாழ்ந்த மனிதன் 
இசையை  வாழ்கையாய்   கொண்ட இசை மன்னன் 
அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !

ஏழு  ஸ்வரங்களில் எத்தனை பாடல்கள் இசை அமைத்தாய் !
பாட்டிற்காக  இசையா,  இசைக்காக  பாட்டா !
மெட்டுக்காக  பாட்டா ,  பாட்டுக்காக  மெட்டா !
ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட்ட  !

கவிஞ்சனின்  பாடல்கள்  இன்னிசையாய்  உருமாறி,
சந்தத்துடன் பாடல்கள்  இனிதே மெருகேறி ,
பாடல்களும்  இன்னிசையால் புகழப் பெற்றதே !
கவிஞ்சனின் புகழும் அதனால் நிலைப்பெற்றதே 

கண்ணதாசன் பாட்டுக்களை காலமெலாம் கேட்க செய்தாய் 
வாலிக்கும் மற்ற  கவிஞ்சர்களுக்கும் இசை அமைத்து கொடுத்தாய் 
திரை உலகில் மெல்லிசை  மன்னனாய்  திகழ்ந்தாய்,
நீ மறைந்தாலும், உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !

நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு 
அந்த இசையே  மனிதனுக்கு தரும் மன நெகிழ்வு 
காலங்கள் மாறினாலும்  பாடலின் இசை  நம்மை நினைவுபடுத்தும்,
திரு. எம்.  எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !


ரா.பார்த்தசாரதி