புதன், 30 மே, 2018

பெண் பிள்ளை



                                                        

                                                      பெண் பிள்ளை 

     பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள் 
    ஆண்  மனம் மகிழ்   ஆனைப்  பெற்றாள் 
     ஏனோ உலகில் பாசத்தை பிள்ளைகளிடம் வைத்தான் 
     பெண்ணும், ஆணும் சமம்  என உலகில் உணரவைத்தான் !

    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே 
    மகனின்  பாசம் என்றும்  தாயினிடத்திலே 
     இதுவே  இன்றைய பாசவலையாய் தொடர்கிறது 
     தாய்தந்தையின்  நேசக்கரங்கள்  உதவுகிறது ! 

     மகளே, உன் பிஞ்சு கால்களால் என்னை உதைக்கின்றாய்  
     என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய் 
    உன் பிஞ்சு கால்கள் என்  மார்பில் நடனமாடுதே 
     என் உள்ளம் மகிழ்ந்து  திளைக்குதே !

    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே  
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே  
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை  நீக்குதே 
   உன் கருவிழிக் கண்கள்  என்னை  அடிமையாக்குதே  !

   உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய் 
   அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல்  தெளிக்கின்றாய் 
   உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய் 
   என் வஞ்சிக்க கொடியே, உன் பிஞ்சு காலால் மகிழ்வூட்டுகின்றாய் !

   பெண் மகள்  என்றும் செல்ல மகள்  ஆவாள் 
   திருவிழா காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள் 
   தந்தைக்கு  என்றும்  தாதியாய்  இருந்திடுவாள் 
   தரணியிலே  மகளே  என்றும்  போற்றப்படுவாள் !

   

   ரா.பார்த்தசாரதி 

    
  

ஞாயிறு, 27 மே, 2018

அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே




                                      அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே


கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக்  காட்டுகின்றாய்
என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
மாலையிட்ட  மணாளனை கண்டவுடன்  உனக்கு
மனதிலே பலவற்றை நினைவூட்டும் உனக்கு !

ஆசைக்கு ஒன்று,  ஆஸ்திக்கு  ஒன்று பெற்றோம்
கொஞ்சி மகிழ்ந்திட,  இதுவே நம்முலகம் என்றோம்
வேலைமுடித்து வரும்போது  களைப்பு தீர தாகம் தீர்த்து,
வளைக்  கரங்களில் நீ தரும் நண்ணிரே என் பசி தீரும் !

வேலை  செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததை பகிர்வேன்
அதனை வேடிக்கையாய் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
என்றும் நமது உள்ளமே, பொங்கும் பலவண்ணம் அறிந்தோம் !

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, வாழ்வு கெட்டுப்போவதில்லை
என்றும் நம்மிடம் பிரிவில்லை வாழ்க்கையில் ஒன்றானபின்னே
ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்

நான் சின்னப்பெண்  என நினைக்கும் போதினிலே
என் எண்ணம்  என்றும் ஈடேறும் போதினிலே
உன் முகச்சிரிப்பினிலே என்  மனதினிலே
கண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே !




மாற்றம் என்பது...







மாற்றம் என்பது...

முகஸ்துதி செய்வதும்
முழங்காலிட்டு
மண்டியிடுவதும் தான்
இன்று
முதல் மரியாதை
என்றாகி விட்டது!

சொத்துகளை மதிப்பிட்டு
சொந்தங்களை
தீர்மானிப்பது தான்
இன்று, 'சுற்றுச்சூழல்'
என்றாகி விட்டது!

மற்ற வாத நோய்களை விட
மதவாத நோயாளிகளே
மண்டிக்கிடப்பது தான்
இன்று
மதசார்பின்மை
என்றாகி விட்டது!

கை நிறைய சம்பளம்
வாங்கினாலும்
கையூட்டு வாங்குவது தான்
இன்று
கலாசாரம்
என்றாகி விட்டது!

வித்துக்களை வைத்து
விளை நிலங்களை
தீர்மானிப்பது தான்
இன்று
விவசாயப் புரட்சி
என்றாகி விட்டது!

மணல் அள்ளி
மாபியாக்கள் ஆவதுதான்
இன்று
மகத்தான புரட்சி
என்றாகி விட்டது!

குடி கொடுத்து
குடி கெடுத்து
கோலோச்சி வருவது தான்
இன்று
குடிமக்கள் அரசு
என்றாகி விட்டது!

இலவசம் கொடுத்து
எதையும் சாதிக்கலாம்
என்பது தான்
இன்று
எழுதாத விதி
என்றாகி விட்டது!

வாங்கிய பணத்துக்கு
வாக்கைச் செலுத்துவது
என்பது தான்
இன்று
வாக்குத் தவறாமை
என்றாகி விட்டது!

ஆகையால்...
மாற்றம் என்பது
செய்யும் அவலங்களில்
தெரிய வேண்டாம்...
செய்யும் அலுவல்களில்
தெரியட்டும்!

பெ.கருணைவள்ளல், சென்னை.




















கண்ணே உன் காதோர கம்மல்
என்னை கவிபாட சொல்லுதம்மா
பெண்ணே உன் விழி பேசும் மொழியின்
மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா
மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
புன்னகையின் புது வெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே
கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
கொஞ்சி மகிழ்ந்திட தந்தாயே – திரை கூப்பி வெண்
பஞ்சாய் தலை நரைக்கும் காலத்திலும்
நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே
வேலைமுடித்து நான் கலைத்து வரும்
வேளையிலே கோலமயிலே நீ என்
கலைப்பு தீர அன்பு நீர் குவளை தனை ஆசையோடு
வளைகரங்களில் தாங்கி வந்து தருவாயே
கவலை மறந்து சிரித்திருப்போம்
கதைகள் பல பேசி மகிழ்ந்திருப்போம்
கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்
முல்லை மல்லிகை மலர்களைப் போல
வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
தில்லையாண்டவன் துணையோடு நாம்.


புதன், 23 மே, 2018

ஏன் இந்த கொடுமை




                                                    ஏன் இந்த கொடுமை 


   முத்துக்குளிக்கும்  ஊரில் ஓர்  கொடுமை நடந்தேறியதே 
  அப்பாவி  மக்களை காவல் துறை கொன்று குவித்ததே 
   அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே 
   மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

  இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா 
  வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா 
 யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே 
 சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

 மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே 
 துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே 
அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு  நடத்தமுடியுமா !
 கல்செஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

அன்று ஜாலியன் வாலாபாக்ஹ் படுகொலை நடந்தேறியதே !
சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே 
மக்கள் உயிரை துச்சமாக  மதித்து  அரசு ஆட்சி செய்யுதே 
பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே ! 

பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி  அடக்குவதா 
அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா 
மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்
போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !


ரா.பார்த்தசாரதி  

சனி, 19 மே, 2018

Paatali Makkal




 பாட்டாளி மக்கள்

நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும்  மிக கஷ்டம்
 நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்ற கூட்டம்

உழைத்தால்தான் ஊதியம்  பெறமுடியும்
உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்றான்

படித்தவன்  கணினியில் வேலை செய்து
இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்.

அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்
உடல் உழைப்பை கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு

இமயமலைப் பனி மலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து நிறுத்தும்
 பட்டாளத்து பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்

நம் பசியை தீர்க்கும்  விவசாயும் ஒரு பாட்டாளிதான்
அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான் !

உழைக்கும் கரங்களே, உரிமைக்கு குரல் கொடுங்கள்
அடக்குவோரை எதிர்த்து நின்று வெற்றி வாகை  சூடுங்கள் ~


ரா.பார்த்தசாரதி 

பாட்டாளி மக்கள்


பாட்டாளி மக்கள்




பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாகஉழைக்கின்றான்

நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும்  மிக கஷ்டம்
 நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

படித்த கணினியில் வேலை செய்பவும்
இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்

இமயமலைப் பனி மலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து
இரவு பகல் பாராமல் உழைக்கும் பட்டாளத்து பாட்டாளி !

எட்டாத தூரமந்த இமயமலை _ அதை
கிட்டால கொண்டுவர தொடர்ந்துஉழை!
பட்டாளத்தார்பணியில்நாட்டின்எல்லை
கெட்டியாயிருப்பதினால்ஏதுதொல்லை!
வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
சட்டங்களைப்போடுகிற அரசாங்கமும்
சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
முட்டாளாயில்லாமல்செயலாற்றினால்
துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
எட்டும் அறிவினில்ஆணும்பெண்ணும்
கூட்டாயியங்கையிலேவெற்றிபெறலாம்!
காட்டைவெட்டி நிலமாக்கிப்பயிரிடுவோர்!
ராட்டைநூத்துத்தறியாலேநெய்திடுவோர்!
போட்டிபோட்டுத்தொழிற்சாலை தோறும்
ஈட்டுகிற பொருள்களைஅள்ளி வழங்கி
நாட்டுக்குவளம்தரும்தொழிலாளிகள்!!
டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
பாட்டாளிக்கூட்டத்தால்உருவாகுவார்!!
ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
வீட்டுக்குவீடுஉழைப்பாலுயர்வோம்!!!
சூட்டிடுவோம்மகிழ்வினைமக்களுக்கே!
==================================
ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி…ஈரோடு….
9442637264….
==========================

வெள்ளி, 18 மே, 2018

உழைப்பே உறுதிசெய்



உழைப்பே   உறுதிசெய் 

வெற்றியின் வேதம்

முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
முடியாததில்லை எதுவும் முயன்றாலே
முடியுமென்று முன்னேறு – உன்னாலே
முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே
கடமையை மட்டும் செய் கவனமாய்
கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
கடினமாய் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வு கொள்
வெம்மை காட்டும் சுடு பொழுதில் உடல்
வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
வளைந்த முதுகின் வலிமையால்
விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை
காடு மலை மேடு எல்லாம் உன்
கடும் உழைப்பால் காட்சிபெறும்
கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்
காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்
நெம்பு கோல் தத்துவமே வாழ்க்கை
தெம்பு கொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு
நம்பு நீ ஒரு நெருப்பு கோள் – சிற்றுளி
அம்புகள் பிழக்கும் பெருமலை பாறைகள் ஏராளம்
உழைத்துக் களை உடல் இளைக்க உழை யாருக்கும்
சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
விளைவித்து காட்டு என்னாலும் முடியும் என்று -ஓங்கி உயர்ந்த
உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை
சு.பாஸ்கரன்
22-ஒலப்பாளையம்
புன்னம் சத்திரம் அஞ்சல்
கரூர் மாவட்டம்- 639136
9789739679, 8903292398
http://noyyal.blogspot.in/

வியாழன், 17 மே, 2018

ஒரு தாயின் புலம்பல்!





   தாலாட்டு பாடி
உன்னை துாங்க வைத்த வாய் 
இன்று
தானாய் புலம்புகிறது!

சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!

ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!

நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!

அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!

கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!

வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!

காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!
- தி.வள்ளி, திருநெல்வேலி.


ஒரு தாயின் புலம்பல்!

அன்பு மகனே...
தாய்மைப் பேற்றுக்காக
நான் தவமிருந்த
தருணங்களை
எண்ணிப் பார்க்கிறேன்!

நீ
கருவில் வளர்ந்த காலத்தில்
கண்டதை உண்ணாமல்
கண்டதை காணாமல்
உணவுப் பத்தியத்தோடு
உணர்வு பத்தியமும் இருந்தேன்!

உன்னை குழந்தையாக
பிரசவித்தபோது
என்னை தாயாக
பிரசவித்துக் கொண்டேன்!

உனக்கு அமுதுாட்டும்
அந்த தருணங்களில்
எனக்குள் அபிஷேகம் நடந்த
அதிசயம் கண்டேன்!

நீ உதிர்த்த மழலை மொழிக்கு
புது அகராதி தயாரித்தேன்
நீ உதிர்த்த உணவில்
புதிய ருசி கண்டேன்!

ஆனால், மகனே...
கோவிலுக்கு போகத்தானே
கூட்டிக் கொண்டு போனாய்
கூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னை
தொலைத்து விட்டுப் போனாய்?

கர்ப்ப கிரகத்தில் நின்று
கடவுளை கும்பிட்ட நீ
கர்ப்பத்தில் உன்னை சுமந்த
என்னை எப்படி மறந்தாய்?

அனாதை இல்லத்தில் இங்கு
அத்தனையும் கிடைக்கிறது
ஆனாலும், உன்னை பார்க்கும்
ஆவல் மட்டும் தகிக்கிறது...
என்றாவது ஒருநாள்
என்னை பார்க்க
வருவாயா?

புதன், 2 மே, 2018

இயற்கையும், மனிதனும்



                                                இயற்கையும், மனிதனும் 


    விதை  செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே 
    பூவாகி, காயாகி  கனிகளை கொடுக்கின்றதே !

    கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே 
    அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே 

    மழை மண்ணை நனைத்து  குளிர வைக்கின்றதே 
    இதுவே பயிருக்கு சிறந்த நன் நீராகிறதே !

    நிலவும் குளிர்ச்சி தந்து தன்னொளி வீசுகின்றதே 
    நிலவும், தென்றலும், நல்லுறக்கம்  அளிக்குதே !

     மனிதனே  மரங்களை அழித்து கூறு போடாதே