ஞாயிறு, 28 ஜூலை, 2013

காதலே உன்னோடு வாழ்வேன்



காதலே உன்னோடு வாழ்வேன்


பட்டாம் பூச்சியாக  மனம்  இருந்தாலும், 
 மலர்விட்டு மலர்,  தாவ மாட்டேன் !


  தேனிருக்கும் மலராய் நீ இருந்தாலும்,
  காகித பூவினை நான் விரும்பமாட்டேன்!


   கங்கையாய்  நீ இருக்க  என்றும்
    நான் கானலை  தேடமாட்டேன்!


    உனக்காக  பாடலை எழுதிவிட்டு,
    ஊருக்காக அதனை  படிக்கமாட்டேன்!

    உன்னோடு வாழ முடியாமல் போனாலும்,
    உன் நினைவோடு வாழ்ந்திடுவேனே!

    துணையாக நீ  வராமல் போனால்
    என் மனதை விட்டுச்  செல்வேனே!
 
    காதலுக்கா கடல்கடந்து  வேலைக்கு சென்றாலும்,
    என் இதயத்தை உன்னை, நினைக்கச் செய்வேனே !

    காதலால் சிலரது  இதயம் பாதிக்கலாம் ,
    காலம் ஒன்று சேர்ந்தால்  எதையும் சாதிக்கலாம் !

    காதலுக்கு கண் இல்லை என்பான் கவிஞ்சன்
    காதலுக்காக என்றும் கவிதையும் பாடுவான்  காதலன் !

    ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக