புதன், 28 செப்டம்பர், 2016

எழுத்து

                                                                 


                                                                        எழுத்து

              எண்ணும், எழுதும் இரு கண்கள் என்றான்
               எண்ணிற்கு பிறகே எழுத்தை வைத்தான்
               எண்ணிற்கும் எழுத்திற்கும் ஓர் உறவு வைத்தான்
                இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே என்றான்

                எண்ணால் விண்ணையும்,மண்ணையும் அளக்கலாம்
                எழுத்தால் மட்டுமே அவைகளின் தன்மையை பார்க்கலாம்
                எழுத்தறிவித்தவன் இறைவன் எனக் கூறுவர்  சான்றோர்
                 நான்கெழுத்து படிக்காதவனின் செல்வமும் பயனற்றது என்பர்!

               ஓம் என்ற எழுத்திலிருந்து  பிரணவம் பிறந்ததே
               ஓங்கார சக்தியுடன் சமயமும்,பக்தி பாடல்களும்  தோன்றியதே  .
               தாய்மொழி உயிரும்,மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யெழுத்தானதே
               நமது உயிரும், உடலும் சேர்ந்து  ஆன்மா  ஆனதே !  

               எழுத்து என்பது, உயிர்மெய் எழுத்துக்களின்  கூறியீடுகளே,
               இவைகளே வார்தைகளாகி, நூல்களின்  தோற்றங்களே 
               நூல்கள் எழுத்து, மற்றும் ,வார்த்தைகளின்  கோர்வையே , 
               உலகெங்கும்   பலவடிவில் செய்தியாக  உலா வருபவையே !         

               மனிதன் கையால் எழுதும்போது, கையெழுத்து என்கிறான்
                அவன் விதி முடிந்தால் அவன் தலையெழுத்து  என்கிறான்.
                எண்ணையும், எழுத்தையும் எழுதாமல் இருக்கமுடியாது
                இவ்விரண்டும் வாழ்வின் கண்கள் எனில், அது  மிகையாகாது!              

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கடலோரக் கவிதை



                                                          கடலோரக் கவிதை

     நேரமும் அலையும்  மனிதனுக்காக  காத்திருக்காது 
     கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற  முடியாது
     ஆசையே அலைபோலே, எனப் பாடினான்  கவிஞ்ன்,
     அலையும் ஆசையும்  செயலில் ஒன்றே என்றான் !

     கடலைப்  பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே 
     காதலியின் முத்துச்சிரிப்பினை அலையென மனம் நினைத்திடுமே ,
     முத்துசிரிப்பும், புன்னகையும்,வெண்ணிற அலையில் தோன்றிடுமே,
     காதலி என்னை வருடியதுபோல் கடல் அலையும்   அழைக்குமே !

     கடலோர காற்றும்,சூழலும், கவிதை எழுதத்  தோன்றும் 
     கவிஞனின் எண்ணங்கள் என்றும் சிறகடித்து பறக்கும் 
     கடல் அலைகள் கண்டு மனம் என்றும் பொங்கி எழும் 
     அவன் எழுதும் கவிதைக்கு தென்றல் வாழ்த்துப் பாடும் !

     கடலோர கவிதைக்கு என்றும் சிறப்புண்டு 
     கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு 
     மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு 
     கால் தடத்தில் மண்  பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !

     நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும்  காட்சி ,
     கடல் அலைகளுக்கு இதனை காண்பதே  மகிழ்ச்சி 
     கடற்கரையே  காதலர்களுக்கு  ஓர்  சொந்த வீடு 
     தனியே கொஞ்சு மொழி பேசிட, அங்கில்லை கட்டுப்பாடு !


         ரா.பார்த்தசாரதி

        

     
     

    
     

வியாழன், 22 செப்டம்பர், 2016

தண்ணீர் இரத்தம்



                                    தண்ணீரும்   இரத்தமும் 

உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே
ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,
வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,
தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !

சுதந்திரம் அடைந்ததது முதல் நதிநீர் இணைப்பு
இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,
நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே
விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நீயமானதே !

வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை
இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை
நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை
வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !

நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,
நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்
இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்
இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !

மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்
ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்
மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்
ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !

நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்
மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்
நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்
நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !


ரா.பார்த்தசாரதி









1


நீதியைத் தேடி

                                                            

                                                                    நீதியைத் தேடி


                                        குற்றங்கடிதல்  எழுதிய  வள்ளுவன்
                                        நீதியை தேடி  எழுதவில்லை அன்று !

                                        ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !
                                        ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?

                                        சட்டத்தின் முன் எல்லோரும் சமம்
                                        நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?

                                        நடுநிலைமையுடன்  நீதி வழங்க வேண்டும்
                                        நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,

                                        இன்று நீதிக்கே அநீதி  இழைக்கப்படுகிறதே !
                                        பணத்தினால் சாட்சிகள் மறைக்கப்படுகிறதே !
                                          
                                       பணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்
                                       செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த  முடியும் !

                                      அவனியில் ஏழைக்கு  ஓர்  நீதியா
                                       பணம் படைத்தவனுக்கு ஓர்  நீதியா !

                                      நீதி  பணத்தால் தன்மானம்  இழக்கின்றது
                                      ஏழைக்கு  எட்டா  கனியாகிறது !
                        
                                      நீதியை  உண்மையாக்கினான் மனுநீதி சோழன்
                                      உண்மையை  விலை பேசினான் இன்றைய நீதியரசன் !

                                      நீதி பணத்தால்  மௌனம் சாதிக்கின்றது ,
                                     மனுநீதி சோழனும் நீதியை தேடியே இறந்தான்  


                                       ரா.பார்த்தசாரதி
                                        
                                         
 
            

வியாழன், 15 செப்டம்பர், 2016

எங்கே நிம்மதி ?




                                                  எங்கே நிம்மதி   ?

தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?
எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,
ஒவ்வொருவாறும்  வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை 
துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!

நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,
அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும்  என்றான் ,
இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?
இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?

நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?
இதனை நாளும் தேடித்தேடி  அலைவது வீண் என்று தோன்றுமா ?
யோகிகளையும்  முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?
 அவர்களும்  அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?

தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,
நிம்மதி என்பது    நம்   மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,
தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,
இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!

ரா.   பார்த்தசாரதி


இனிய தலைமுறை



தொடரும் இனிய தலைமுறை
பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
பெருமை பேசும் பேத்தி
கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
நடை தளர்ந்த வயதில்
நடைவண்டிகளாய்ப் பேரன்கள்
ஓடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
[…]
தலையெடுக்கும் தலைமுறையினரைத்
தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
ஆச்சிதாத்தாஅய்யாஅப்பத்தாஆயா
பாட்டிபாட்டையா…. மாமை
விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்தபின்
தாவி ஓடும் இளையதலைமுறையைத்
தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
கைநீட்டிக் கதைபேசும் மழலைகளை
கைகாட்டி வழிநடத்துவார்
ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
நம் பெற்றோரும்
பெற்றோரின் பெற்றோரும்
ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
ஆதாரமாய் நம்மைக் காப்பர்.

”தாவி ஓடும் இளைய தலைமுறையைத் தம் பாசவேர்களால் வீழாது காப்போர் பெற்றோரும், பாட்டன்மார்களும், அவர்களையொத்த பிற உறவுகளுமே! கைநீட்டிக் கதைபேசும் மழலைகளைக் கைகாட்டி வழிநடத்தும் வித்தகர்கள் அவர்கள்” என்று முதுமையைப் போற்றும் புதுமைக் கவிதையிது! இதனை இயற்றியிருக்கும் முனைவர். மா. பத்மபிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன். பாராட்டுக்கள்!
=========================================================================


.

.

.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வாழநினைத்தால் வாழலாம்




                                               வாழநினைத்தால்  வாழலாம்

வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,
மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்
ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்
மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்
கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,
யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !
வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,
வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்
மனிதனின் மனதினில்  அலைபாயும் பாச உணர்வுகள்
அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்
வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்
வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்
உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,
வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,
ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,
உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை
ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,
ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை
மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !


ரா.பார்த்தசாரதி









.