திங்கள், 24 ஏப்ரல், 2023

சீமந்த வாழ்த்து மடல்

 




                             

                                              சீமந்த  வாழ்த்து மடல் 

இடம்: அபிராமி மினி ஹால்                               தேதி: 04-05-2023
              கிழக்கு தாம்பரம், சென்னை -59.

சிறப்புமிகு  சீமந்தம்  திங்கள் ஆறிலும், எட்டிலும், அமைவதே 
 அருமை பூச்சூடலோ  திங்கள் ஐந்திலும் ஏழிலும் அமைவதே 
பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே!


ஜெயந்தின் மனைவி காயத்ரிக்கு  சீமந்தம் ! 
ஜெயந்தின்  அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
வண்டலூரில்  இனிதே ஜெயந்துடன்   வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !


மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
 வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
வலையோசை அவள் பிள்ளைக்கும், கணவனுக்குமே சொந்தம் 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகளை   பெற்று தர,
காயத்ரியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் ( காயத்ரி ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(காயத்ரியை ) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

thamizh puththaande

 




     தமிழ்ப்புத்தாண்டே  வருக ! இன்பத்தை தருக !

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை சோபக்ருது  எனப்  பெயரிட்டான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

வஞ்சத்தையும், வன்மத்தையும் அகற்றிவிடு 
மன்னிக்கத்தெரிந்த  மனிதனாய் மாறிவிடு 

நாட்டுக்கு நாடு, சமாதனத்தை  போற்றிடு 
வேற்றுமையில் ஒற்றுமை காண வெற்றிக்கொடி  காட்டிட்டு  !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


                                 

*

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

Thirupuppugazh Anbargal

 


                   பெறுநர்: திருப்புகழ்  அன்பர்கள்  குழுமம் - Mrs. Uma Balaji

                                         குருவே வழிகாட்டி, குருவேத்துணை 

        திருப்புகழைப்  பாட . பாட  வாய் மணக்கும்,  செந்தூர் முருகனால் 
        வாழ்க்கை  என்றும் சிறக்கும் .  திருபுகழனை வாரம்தோறும் 
       ஒவ்வொரு  மேட்ரோசோன் இல்லங்களிலும்  இனிதே நடைபெறுகிறது.

      மனிதர்களில் மூன்று வகையுண்டு .  முதல்வகை மனிதனாய் பிறந்து 
       தவறே செய்யாதவர். இரண்டாம் வகை  தவறே செய்பவர். மூன்றாம் 
      வகை  தவறு செய்துவிட்டு பின் திருந்தியவர்கள் .

     மேற்கூறிய  மூன்றாம் வகையை சேர்த்தவர்கள் வால்மீகியும், 
     அருணகிரிநாதரும். இருவரும் இறைவன் அருளால் ஆட்படுத்தப்பட்டு 
    செயற்கரிய  செயலை  செய்தனர் .  வால்மீகி, வால்மீகி ராமாயணமும் 
    அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய  திருப்புகழ் எல்லோராலும் 
    பாடப்பெற்று  எல்லோர் உள்ளத்திலும்  நீங்கா இடம் பெற்றுள்ளது .\
     சைவம், வைணவம்  இரண்டிற்கும் பொது தன்மை உடையதாக 
    திருப்புகழ்  விளங்குகிறது  என்றால் அது  மிகையாகாது 
   
   குருவே வழிகாட்டி, குருவேத்துணை,  என்பதற்காகவே நம்மாழ்வார்க்கு 
   ஒரு  மதுரகவி ஆழ்வார் சீடராய் இருந்து  பக்தி பாடல்களையே 
  இயற்றினார்.  முருகன்  அருளாலும், அவரையே வழிகாட்டியாக 
  கொண்டு அவர் அருளால்  அருணகிரிநாதர்  மூவாயிரம் பாடல்களுக்கு 
  மேல்   பாடினார் . ஒரு சில  பாடல்களே  நமக்கு   கிடைக்கப்பெற்றது .

   திரு  A.S, ராகவன்  ( திருப்புகழ்  குருஜீ )  திருப்புகழ் பாடல்களை செவ்வனே
    சீரமைத்து  உள்ளம் உருகும்படி  பாடியும். மற்றவர்களுக்கு கற்பித்தும் 
   பல இடங்களில் திருப்புகழ்  அன்பர்கள் குழு  அமைத்து, பாராயணம் 
   செய்வதற்க்கு காரணமாய்   இருந்தார் . வடக்கேயும், தெற்கேயும்  மற்றும் 
  அயல் நாட்டிலும் திருப்புகழ் அன்பர்கள் பரவியுள்னனர் .சுருங்க கூறின் 
   திரு. ஏ' எஸ் . ராகவன் வாழ்நாள் முழுதும் திருப்புகழ் தூதுவராகவே 
   செயல்பட்டார் .

  திருப்புகழ்  அன்பர்கள் குழுமத்திற்கு  உறுதுணையாக திருமதி  சுதா  
மற்றும்  உமா பாலாஜியும்  சென்னை மெட்ரோசோன்  திருப்புகழ்  அன்பர்கள் என்கிற குழுமத்தின் மூலம் செவ்வனே   திருப்புகழ் வகுப்பு  நடத்தப்படுகிறது .

             குரு என்ற  சொல்லே  திருவின்  அடையாளம் !
             குருவின் துணையே வாழ்வின் சிறப்பாகும் !
            குருவின் நல்லாசியே  நமக்குத்  துணையாகும் !
             குருஜி  ஏ .எஸ். ராகவன் திருப்புகழின் தூதுவராகும் !

இதனை எழுதி முடிக்கும் போது  இரவு  ஒன்பது மணி. எழுதி 
முடித்ததும் நான் கேட்ட பாடல்,
              
             மண்ணானாலும்  திருச்செந்தூர்   மண்ணாவேன் 
              ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையின் மரமாவேன் 
              கருங்கல்லானாலும்  தணிகைமலையின் கல்லாவேன் 
              பசும்  புல்லானாலும் முருகன் அருளால்  பூவாவேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
   தொகுத்தவர் : ரா. பார்த்தசாரதி