செவ்வாய், 25 டிசம்பர், 2018

raja 70th birthday vathumadal









                           ஸப்த ஹப்த  வாரிஷீஹ் /  பீமரத  சாந்தி  விழா 

இடம்: பள்ளிப்பட்டு நரசிம்மாச்சாரி தெரு            தேதி:26-12-2018
           மதுராந்தகம் 

கோதண்டராமர் அருளால்   மதுராந்தகத்தில் P.N.chaari veethiyil, இன்று  
 ஸப்த ஹப்த (பீமா ரத ) சாந்தி    விழா ! 
திருமதி பட்டம்மாள். மாடபூஷி ..எம்.கே .சசுந்தரராஜனின் 
ஸப்த ஹப்த  ( பீமரத )  விழா !

 ஸ்வர்கஸ்ரீ , திருமதி ராஜலக்ஷ்மி, திரு. மாடபூஷி கோதண்டராமனின் மூன்றாம் மகனே 
 என்றும்  மதுராந்தகத்தில்   வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

அகவை  அறுபதும், எழுபது மற்றும் எண்பதும்   சிறப்புடையதன்றோ 
மகன்  சாய்நாத், மகள் சுபஸ்ரீயும்  தலைமையேற்று நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ!

கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே !

தமிழ் நாடு மின்சாரவாரிய  என்ஜினீயராக சிறப்புற பணிபுரிந்து  ஓய்வு பெற்றாய் 
தாய்க்கு   !இறுதிவரை, சேவை செய்து என்றும் சான்றோனாய்  விளங்கினாய் 

கண்ணின் அருகே இமை இருந்தும், கண்கள் இமையைப் பார்ப்பதில்லை 
கண்களை இமைகள் காப்பதுபோல், மனைவி, கணவனை விட்டு பிரிவதில்லை 

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலமும், கோலமும்   என்றும் உலகில்  மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம் !
திருமதியின் பெயரோ  வெகுமதி பட்டம்மாள் (பட்டு)  என்று அழைப்பது பழக்கம்! !


கல்யாணம் என்றாலே உற்றார்,உறவினர்ககளின் ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஏழில் ( சுந்தரராஜன்) என்றும் ஆறு  அடங்கும் 
பட்டம்மாள் என்ற பெயரும் விளங்கும்,

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்! 

உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்துண்போம் 
அவர்கள் வாழ்க்கை வளம் பெற  வாழ்த்துவோம் 

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 

ரா.பார்த்தசாரதி 
===================================================================

ஞாயிறு, 4 நவம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்





  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
   

நீ நீடு வாழ வேண்டும் 
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் 
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம் 
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும் 
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும் 
நன்மை செய்து  புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும் 
எட்டு திக்கும் புகழ வேண்டும் 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை 
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும்,  நட்பையும் பேண வேண்டும் 
பாசமும், நேசமும் வளர்த்திட வேண்டும் 
வாழ்த்த வயதில்லை ஆனாலும் 
கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன் 
பிறந்த நாள் வாழ்த்துகள் 
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரா.பார்த்தசாரதி