திங்கள், 26 ஆகஸ்ட், 2013

வாலி

                                                                         வாலி

புவியில்  புனைபெயர்  கொண்ட  வாலியே ,
நின் புகழ்  திரைஉலகில்  ஓங்கியே !

உனது பாட்டெல்லாம் பாரினில் பரவியே,
உன்னால் பின்னணி பாடகர்களுக்கும் பெருமையே !

பதினைந்தாயிரதிற்குமேல்   பாடல் எழுதிய பாடலாசிரியனே,
திரையுலகில்  நீ  ஒரு  சகாப்தம்தானே !

 இன்று   நீ   இல்லா   தமிழ்  நாடு
 இன்று     நிழல்    இல்லாத வீடு !

நந்தா விளக்கே  கவிஉலகின்  ஒளிவிளக்கே! 
உயர்ந்த சிந்தனை, அஞ்சாமை இவ்வுருவமே  வாலி !

உன் திரைபட    பாடல்கள்  தலைமுறைக்கும் அவணி  ஆளுமே!
உன் பாட்டென்றால் பாமரனின் நெஞ்சத்தையும் அள்ளுமே !

உன்னோடு முடிந்ததோ  காதல் காவியம்
இனி  எவர் படைப்பார்  கவிதை ஓவியம் !

நீ  கல்லறையில் தூங்கினாலும், உன் பாடல்கள் தூங்காது,
உன் பாடலின் இன்னிசையே  என்றும் ஓயாது !

   வாழ்க! வாலியீன் புகழ்!

ரா.பார்த்தசாரதி

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக