செவ்வாய், 26 டிசம்பர், 2023

எது பெருமை

 


                     

         

                                         எது பெருமை 

            பத்தாயிரம்  அரசு பணிக்கு 
            பத்து  லட்சம் பேர் எழுதுவது பெருமையா !

            அரசு கட்டிய குடியிருப்பில் இருபத்தைந்து 
            ஆண்டுகளில் இடிந்து விழுவது பெருமையா !

            மது வருமானத்தில், இலவசங்கள், சலுகைகள் 
            கொடுப்பது பெருமையா !

            எதிர்த்து ஏசியவரையெல்லாம் ஏலம் எடுத்து 
            கட்சியில் சேர்ப்பது  பெருமையா !

            சின்னத்திரை  பெரியத்திரை ஆக்கிரமித்து 
            வன்முறையால்  அடக்கி ஆள்வது  பெருமையா !

            விபத்து மரணங்களுக்கு  லட்சங்கள் கொடுத்து 
            படம் எடுத்துக்கொள்வது பெருமையா !

            வாரிசுகளை வளர்ப்பதும், நேரம் பார்த்து 
            பதவிகள்  அளிப்பதும் பெருமையா !

            வெள்ளம் சூழ்ந்த இடத்தினை நேரில் பார்க்காமல் 
            பிற ஊர் சென்று உரையாற்றுவது  பெருமையா !  

            உதவிக்கு வந்தவர்களை தடுப்பது  பெருமையா !
            தன்னிச்சையாக செயல் படுவது பெருமையா !

            பெருமை எனப்படுவது யாதெனில், மக்களை 
            உழைத்து உயர செய்யவும், 
            வேலைவாய்ப்பை  பெருக்கவும்,
            தொழில்கள் வளரவும் 
             மதுவை  விலக்கியும் 
             தண்டனை அதிகரித்தும் 
             விவசாயிக்கு உதவியும் 
              ஓட்டுக்கு திட்டமிடாமல் 
              நாட்டுக்கு திட்டமிடுவதே 
              நிரந்தர பெருமையாகும் 

              தொகுத்தவர் :  ரா.பார்த்தசாரதி 
    

                

திங்கள், 25 டிசம்பர், 2023

Thaalaatu 2

 


                                                         



                                                                   தாலாட்டு  பாட்டு 

                                          
                                            வாழ்  நாள் எல்லாம் உடலை வருத்தி 
                                             உனக்காகவே தவமாய் தவமிருந்து 
                                             ஈறு ஐந்து  மாதங்களில் நான் 
                                             பெற்றுயெடுத்த பெண்பிள்ளை தானே 

                                              மலடி என்று சொல்லாமலே 
                                              தாய் எனும் பெருமையினை தந்தவளே 
                                              என்றும் எங்கள் வீட்டு திருமகளே 
                                               எங்கள் குலம் காக்கும் குலமகளே !
==================================================================

                                                நீலவண்ண  கண்ணா  வாடா 
                                                நீயொரு  முத்தம்  தாடா 
                                                நிலையான இன்பம்  தந்து 
                                               விளையாடும் செல்வா வாடா !

                                                உன்முகம்  என்றும்  சந்திரபிம்பம் 
                                                என்றும் உன்முகம் புன்னகை தவழும் 
                                                என்மடியே உனக்கு பஞ்சு மெத்தை 
                                                என் தோளே உனக்கு  தூளி 
                                                ஆராரோ பாடி தூங்க வைப்பேனே !
=======================================================================


                   

வியாழன், 14 டிசம்பர், 2023

Thalaattu





                                                                       தாயின் தாலாட்டு 

                                            சிங்காரப்  புன்னகை  கண்ணாற  கண்டாலே 
                                             சங்கீத  வீணையும் எதுக்கம்மா 
                                             மங்காத  கண்ணில் மையிட்டுப்  பார்த்தாலே 
                                             தங்கமும் வைரமும் எதுக்கம்மா !

                                             கண்ணே !  உன்னை கண்டால்  போதும் 
                                             கவலைகள் எல்லாம் மறந்தே போகும் 
                                            செவ்வாயின்  மழலையும் ஆனந்தமாகும் 
                                             எங்கள் செல்வ மகளே குல விளக்காகும் !   
====================================================================


                                                     மண்ணுக்கு மரம் பாரமா 

                                           முகம் என்றும் சந்திர பிம்பம் 
                                           கள்ளமில்லாச் சிரிப்பு மனதை வெல்லும் 
                                           எங்களுக்குத் தருவாய் என்றும் பேரின்பம் 
                                           எங்கள் செல்வியே மகாலக்ஷ்மியாகும் !

                                           மண்ணுக்கு  மரம் பாரமா 
                                           மரத்திற்கு கிளை பாரமா
                                           கொடிக்கு  காய்  பாரமா 
                                           பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா !
==================================================================

செவ்வாய், 12 டிசம்பர், 2023

  


                                                         காலமும்  நேரமும் 

                             காலமும், நேரமும்  மனிதனுக்காக காத்திராது 
                              கடந்து விட்ட நேரமும் திரும்ப  வாராதது 
                             காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம்  மாறுபடுமே  
                              நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் !

                              இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே 
                              காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே 
                              நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது  நம் கடமை 
                              இதுவே  மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை !

                              கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது  
                              சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது 
                              காலமும் ,  நேரமும்  பொன் போன்றதன்றோ 
                              அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !
       
                              சூரியனும், சந்திரனும் காலத்தை உணர்த்துபவர்களே 
                              மானிட பிறப்பை உதயாத்தி வைத்து கூறிப்பார்களே 
                              காலத்தினால் செய்த நன்றியை மறக்க மாட்டார்களே 
                               எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !

 



       எதுவும் வீணாவதில்லை 

வீழ்ந்ததெல்லாம்   வீணாகிவிடுவதில்லை  
வீசி  எறிந்த  விதைதான்  விருச்சமாகிறது 

உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை 
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது 

உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை 
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது 

விருந்து முடிந்து எரியும் வாழை இலைகள் 
பசுக்களுக்கு இரையாகி, பாலை அளிக்கிறது 

வீசி எறிந்த விதைகள் தான்  இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி உயரே வளர்கின்றது   

வீணாவதில்லை துாக்கி எறியப்பட்டது துடைப்பம் தான்...
எனினும எவ்வளவு துாசிகளைஉதிர்ந்த துவம்சம் செய்தது
 என்று எண்ணி பார்க்கும் இதயம் எத்தனை இருக்கிறது !

முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை எழுதியது என்று
எவருக்கு தெரியும்!

விழுந்து, வெடித்து மரணித்த மழைத் துளிகளின் 
மகிமையில் தான் உலகம் தன் வதனத்தை 
அலங்கரித்துக் கொள்கிறது!

விரல் பிடித்து நடக்க விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும் விமானத்திற்கு விழிகளாகிறது!

உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்த சருகுகள் தான் 
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு வளம் சேர்க்கிறது!

இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை

வெல்வதற்கே என்று எண்ணுங்கள் !

ரா.பார்த்தசாரதி 


ஞாயிறு, 10 டிசம்பர், 2023

மழை பேசுகிறது

 




                                              மழை பேசுகிறது 

         விசும்பின் கீழே வீழ்வதெல்லாம்  மழைதானே !
           பருவத்திற்கு ஏற்ப காலத்தில் பொழிவதும் மழைதானே !
          கீழே வீழ்ந்தாலும் தடுத்து நிறுத்துவதும்  மனிதன்தானே !
          மனிதர்கள் வீடு கட்ட  என் தடங்களை பலி கொடுத்தேனே !

          என் உடன் பிறப்புக்களையும் நானே பொழிந்து அழித்தேனே 
          என் பாதையில் செல்ல பல வழியில் தடைபட்டு நின்றேனே 
          அணை கட்டாமல் பல வழிகளில் வீணாய் கடலடைந்தேனே 
         அந்நியமாய் கேட்பாரின்றி பல வருடங்கள் அழித்தானே !

         இந்திரனிடம் அனுமதி பெற்று புயலுடன் பொழிந்தேனே !
         கடுங்கோபத்துடன் மிக்ஜெம் எனும் பெயருடன்சூறையாடினேனே  
         முடிவில் வழியின்றி எல்லா இடங்களிலும் கொட்டித்தீர்த்தேனே
         சக்ர வியூகத்தில் அபிமன்யூ போல் நடுவில் மாட்டிக்கொண்டேனே!

        நான் யாரிடம் முறையிடுவது என நினைத்தேனே 
        நாட்டையே விற்பவன் இந்திரனையே பொம்மையாக்கினானே 
        பணத்தால் எல்லாம் முடியும் என பல வருடமாய் தீர்மானித்தானே 
        நான் யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சாடினானே !

        வெளிவரத்தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றேனே 
       நாட்டுத் தலைவன் என்னையே தந்திரமாய் பழித்துரைத்தானே !
       நான் கோபப்பட்டுதான், வீட்டையும்.மக்களையும்சுற்றிவளைத்தேனே 
        என் வழித்தடங்களை சரிசெய்ய மும்மூர்த்திகளை வேண்டினேனே!   

       ரா.பார்த்தசாரதி 
              

சனி, 9 டிசம்பர், 2023

வாழ்க்கை ரகசியம்

                    






                                                     வாழ்க்கை  ரகசியம் 

                               புரியாது, புரியாது, வாழ்க்கை ரகசியம் புரியாது 
                               வளரும் ஆசைக்கு அளவேது !  முடிவு ஏது !
                                முடிந்த பின்,  உலகம் நமக்கேது
                                முடிந்ததை நினைத்தால் பயனேது !

                                ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும் 
                                உரிமை, அன்பும் மறுபடி சேரும் 
                                திருமணம்  இரு மனமாகும் 
                                பெண் மனம் தாய்மையை தினம் தேடும் !

                               பெருமைகள் பேசுபவர் பூமியில் பிறந்தார் 
                               பிறந்தவர்  தாயின் மடிதனில் வளர்ந்தார் 
                               வளர்ந்தவன் வாழ்வில் கொடுப்பதை மறந்தான் 
                                ஒருபிடி சாம்பலே முடிவெனஉணர்ந்தான் !

                                ஒரு சிலரே புகழோடு தோன்றுவர் 
                                ஒரு சிலரே புகழோடு  இறப்பர் 
                                வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒன்றே 
                                 மானிடம் அறியாமல் திரிவதும் இன்றே !

                              

வெள்ளி, 1 டிசம்பர், 2023

பாரதியே ! மறுபடியும் எழுந்து வா

 


                                      


                             பாரதியே ! மறுபடியும் எழுந்து வா 

            பாரதிபோல்  ஒருவன் தமிழகத்திற்கு  வருவாரா !
            நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுப்பாரா !
            நாட்டில் கல்வியும் அறிவையும்தானே வளர்க்கச்சொன்னேன் 
           ஆண் பெண் வித்தியாசமின்றி ஆடையை குறைக்க சொன்னேனா !

           நாட்டிலுள்ள மக்களுக்கு நன்மை செய்ய சொன்னேனே !
           நாட்டையே கூறு போட்டு விற்று லாபமடைய சொன்னேனா !
           வாணிபம்,பெருக விளைப்பொருளை விற்க சொன்னேனே !
           கனிமங்களை சூறையாடி,ஆறுகளை கெடுக்க சொன்னேனா !

          சுயநலம் மிகுந்து பத்து தலைமுறைக்கு பணம் சேர்க்க சொன்னேனா
          மக்களை குடிகாரனாக்கி வாழ்க்கையை கெடுக்கசொன்னேனா !
         நாட்டின் தலைவர்கள் நீதி தவறி நடப்பதும் முறையா !
          கண்டிக்காத அரசும் இன்று மக்களுக்குத் தேவையா !

          அன்று விடுதலைக்கும், பாமரனுக்கும் துணிந்துகவிதை எழுதினேன் !
          வெள்ளையர்களே மேல்இக்கொள்ளையர்களை விட என எழுதுவேன்
         பாரதி போல் ஒருவர் தமிழகத்திற்கு வருவார் ! எதிர்த்து கேட்பார் !
         மக்களை திருத்துவார் ! நல்லாட்சிக்கு  வழி  வகுப்பார் !

         எழுத்துரிமை  பேச்சுரிமை  என்பது எங்கே போயிற்று !
        ஜனநாயகம் என்பதே கேள்விக்குறியாக  போயிற்று !
        நானே  தமிழகத்தை கண்டு பதறி கடற்கரையில் சிலையானே !
        பராசக்தியை வேண்டி தர்மத்தை நிலைநாட்ட வேண்டினேன் !

                     

திங்கள், 27 நவம்பர், 2023





                                               சமாமெஷ்ஷில்  பனித்துளி                                                       


             பனித்துளிகள் புல்லின்மேல்  மிக அழகாய் காட்சியளிக்குதே 
            படுக்க வெண்ணிறப்பாய்  போல் நமக்கு தோற்றமளிக்குதே 
            குளிர்ச்சியுடன் எங்கும் தரையில் பரவி நீண்டு பரவியதே 
            குளிர்ந்த காற்றுடன் தென்றல்போல் சில்லென்று வீசுதே 
           சிலமணி நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு மறைந்ததே 
           சமா மெஷ்ஷில் அதிகாலையில் காணும் காட்சியானதே 
           மரங்களும் இலை உதிர்த்து பல நிறங்களில் மிளிர்கின்றதே !
           எங்கள் மனதிலும் உடையிலும் குளிர்ச்சி உண்டானதே !


              
     

ஞாயிறு, 26 நவம்பர், 2023

Ithuthaan Kaliyugam

 


                                                            



                                                           இதுதான்  கலியுகம் 

                   நல்லவை அழிந்து  தீயவை  தொடர்ந்து நடப்பதே கலியுகம் 
                  தன்னலமே பொதுநலமாக  மனிதன் கருதும் கலியுக காலம் 
                  மக்களை ஏமாற்றி பணம் சேர்பதயே குறிக்கோலான காலம் 
                  பல கோடிகள் பணம் சேர்ந்தாலும் திருப்தியடையாத காலம் 

                  கொள்கைகள் இருப்பது போல் கபடநாடகம் ஆடும் காலம் .
                 பொய் மூட்டைகள் அவிழ்த்து விடும் சந்தர்ப்பவாதிகள் காலம் 
                  பணத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றும் பொற்காலம் 
                  எதையும் செய்யாமல் வாய் கிழிய சமூக நீதி பேசும் காலம் 

                  மது, மாது மற்றும் சூதாட்டம் தலைவிரித்து ஆடும் காலம் 
                  ஆண்களை குடியால் அடிமையாகி வாழ்வை அழிக்கும் காலம் 
                   பணத்திற்காக பெண்கள் கற்புநெறி தவறி நடக்கும் காலம் .
                   அடிதடி,  கொலை, கொள்ளைக்கு  அஞ்சாத கலியுக காலம் 

                   மக்களையும், ஏழைகளையும் ஏமாற்றி பிழைக்கும்  காலம் .
                   பணத்தால் , நியாயம் தர்மம் நீதியை வாங்கும் கலியுக காலம் 
                   பாசம் உறவு, நட்பு இவை என்னவென்று கேட்கும் கலியுக காலம் 
                   தவறுகளை கண்டிக்க கடவுளே அவதாரம் எடுத்து வருவார் !
                   

சனி, 25 நவம்பர், 2023

தமிழும், தமிழ் மக்களும்

 


                                                 

                                                  தமிழும், தமிழ் மக்களும் 

        தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
        வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
       சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
       நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?

      கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
      எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
      மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
      சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
      
     கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
     ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம் 
     முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
     மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை  

   பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே 
  அப்துல்கலாம், சர்  சி.வி  ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே 
   ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை 
   அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
   
   எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
   தங்கள்  ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
   நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
   நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !

  சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
 இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
  அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே  !
  இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !

தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள் 
மக்களே,  குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
ஜனநாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள் 
மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
தன்னலமற்ற தலைவனையே  பதவி ஏற்க உதவிடுங்கள் !
வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !







      

       

திங்கள், 20 நவம்பர், 2023

தமிழனே துணிந்து செல்லடா

 



                                                   



                                  தமிழனே  துணிந்து  செல்லடா 

             தமிழன்  என்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா !
             தமிழனே ! என்றும்  கைகட்டி வேடிக்கை பார்க்கலாமா !
             இந்து மதத்தை பழிப்பவனை  பழிவாங்கவேண்டாமா !
             எழுச்சி கொள்ளடா !  என்றும் துணிந்து செல்லடா !

            வேற்று மதத்தினர் இந்து மதத்தை குறைகூறலாமா 
            கூறை  கூற ,என்ன தகுதி இருக்கு என எண்ணவேண்டாமா 
            ஆராய்ந்து அறிந்து சொல்ல  அறிவு வேண்டாமா
            பிறர் எழுதி கொடுத்து படிப்பதை  அறிய வேண்டாமா !

           மதத்தைப் பழிப்பவன் தாய் மொழியை பழிப்பதற்கு சமம்.
           அவர்களின் பேச்சுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டாமா 
           மாநில சுயாட்சி என்ற பெயரில் நாட்டையே விற்பார்கள்
            தன மனதிற்கு பட்டத்தைப் பொய்யாக உரைப்பார்கள் !

           கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் 
            நீதி தர்மம் மற்றும்  சமூக நீதியை பின்பற்றாதவர்கள் 
            தண்டனை பெற்றவர்களையும் கூட்டாக சேர்ப்பார்கள்     
           மக்களை பணத்தால் அடிமைப்படுத்த  நினைப்பார்கள் 

           பாரதிபோல் எதையும்  எதிர்த்து  முழங்க வேண்டும் !
           மதத்தை பழிப்பவனை, தரணியில்  அகற்ற வேண்டும் !
           தமிழ்  மக்களே ஏமாறாதீர்கள், தகுந்த பாடம் புகட்டுங்கள் 
           மக்கள் குரலே, மகேசன் குரல் என நினையுங்கள் !

          ரா.பார்த்தசாரதி 

                

வெள்ளி, 17 நவம்பர், 2023

சற்றே சிந்தித்துப் பார் தமிழா ! தமிழா !!

    



                                                   

                                



                  சற்றே  சிந்தித்துப் பார்  தமிழா ! தமிழா !!

                 எங்கே செல்கிறது நம் தமிழ் நாடு ? தமிழா !
                 சற்றே நினைத்துப்பாருங்கள் தமிழ் மக்களே !
                 இன்று காண்பது என்ன! கோடி கணக்கில் லஞ்சம் 
                 பொறுப்புள்ள மந்திரிகளே லஞ்சத்திற்குள் தஞ்சம் 

                 லஞ்சம் வாங்கினாலும் தண்டனையை தடுக்கலாம் 
                 நீதியை வளைத்தால் தண்டனையின்றி தப்பலாம் !
                 லஞ்சம் வாங்கியவன் சிறிதும் வெட்கப்படவில்லை 
                 மக்கள் வரிப் பணத்தை சுருட்டுவதாக நினைப்பதில்லை 

                 கண்டுபிடித்தாலும் அதனை திருப்பி கொடுக்க மனமில்லை !
                 எதையும் பணத்தால் சாதிக்கலாம் என்கிற நினைப்பு !
                 நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கு? தீர்வு ஒன்றும்மில்லை 
                 கொள்ளையடித்ததை பங்குபோடுவதற்கே நேரமில்லை !

                 கோடிக்கணக்கில்  நாட்டையே விற்றாலும் ஆச்சரியமில்லை !
                  அதனை வேறு நாட்டில் முதலீடு செய்ய தயங்குவதில்லை !
                  ஏமாறும் மக்கள் ஏமாந்துகொண்டே  இருக்கவேண்டும்  
                  என்றைக்கு திருந்துமோ ! என்று திறன் கொண்டு எதிர்க்குமோ!

                  மக்களே  சபதம் மேற்கொண்டு  ஓட்டுக்காக பணம் வேண்டாம் 
                  நடுநிலை தவறாத நீதியும், அரசியலும் ஆட்சி செய்ய வேண்டும்  
                  கோ டிக்கணக்கான பணத்தை அரசே திரும்ப எடுக்க வேண்டும் 
                  எடுத்த பணத்தை நல்வழிலயில் மக்களுக்கே செலவிட வேண்டும் 


                  ரா.பார்த்தசாரதி 
                       

                  
                                   
                                   
1
                                 

 

அளவுக்கு மிஞ்சினால்

 


      


                                                        

                                               அளவுக்கு  மிஞ்சினால் 

                        அளவுக்கும் மிஞ்சினால் எல்லாம் ஆபத்தே 
                        இனிப்பு அதிகமானாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                        உப்பு அதிகமானாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                        அதிக கவலைகள்  உடம்பிற்கு என்றும் ஆபத்தே 

                         அதிக கண்விழிப்பும்  உடலுக்கு என்றும் ஆபத்தே 
                         அதிக உடற்பயிற்சியும் உடலுக்கு என்றும் ஆபத்தே 
                         அதிக குளிர்ச்சியுடன் சாப்பிடுவதும்        ஆபத்தே 
                         அதிக சூட்டுடன் குடிப்பதும் உடம்பிற்கு ஆபத்தே 
 
                         அதிக தூரம் ஓடினாலும்,நடந்தாலும் ஆபத்தே 
                         அதிக நேரம் கண்விழித்தல் உடம்பிற்கு ஆபத்தே 
                         அதிக நேரம் உறங்கினாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                         அளவிற்கு மிஞ்சி பணம் சேர்த்தாலும்  ஆபத்தே!

வியாழன், 16 நவம்பர், 2023

எங்கள் தலைவர் நரேந்திர மோடி










                                        எங்கள் தலைவர் நரேந்திர மோடி                                  

                          தன்னலம்  கருதாதவனே தலைமைக்கு தகுதியானவர்!
                           நாட்டு  நலனில் அக்கறை கொண்டவனே தலைவர் !  
                           தனக்கின்றி பிறர் நலனை கருத்துபவனே  தலைவர்! 
                           யார் குற்றம் புரிந்தாலும் தண்டிப்பவனே  தலைவர் !
                           தன்னலம் முடையவன் தன குடுப்பதையே நோக்குவார்!
                           தனக்கு மிஞ்சியே தர்மம் என நினைப்பார் !
                           நல்லவர்களின் துணை கொண்டு நற்செயல் புரிபவர் !
                           நாட்டின் நிலைமைக்கு ஏற்ப நலத் திட்டங்களை செய்பவர்!
                           தேனீர் விற்றாலும் தேச மக்களை நினைப்பவர் !
                           அவரே எங்கள் பிரதமர் திரு, நரேந்திர மோடி  ஆவார்!

                           ரா.பார்த்தசாரதி 
                                
                                
                                  

திங்கள், 13 நவம்பர், 2023

கொள்கையா ! ! கொள்ளையா !!

 


 

                                                



                                         கொள்கையா  ! !    கொள்ளையா !!

                      அரசியல் தலைவர்கள் தனக்கென  ஓர் கொள்கை !
                     அதனை பின்பற்ற வைப்பதே அவர்களின் கோரிக்கை !
                     இதனை விளம்பரப்புடுத்துவதே அவர்களின் வாடிக்கை !
                     இதனை இன்று கடைபிடிக்கத் தவறி விட்டார்களே !
                     தன்  குடும்பம், தன் வாரிசு என நினைக்கின்றார்களே !
                     தன்னலம் கருதுபவர்கள், பிறர் நலம் கருத்தமாட்டார்களே !
                    நாட்டை , கொள்ளையடிப்பதே எண்ணமாக கொண்டவர்களே !
                    கொள்கையை கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டவர்களே !
                     தன்  தவற்றை உணராமல், பிறரை குறை கூறுபவர்களே !
                     எல்லாம் செய்துவிட்டோம் என பொய்யுரை கூறுபவர்களே !
                     மக்களை அராஜகத்தால்  அடக்க என்றும் நினைப்பவர்களே!
                     கொள்கையின்றி, கொள்ளையில் கூட்டு சேருபவர்களே !
                     தர்மம், நியாயம் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களே !
                     கொள்கையின்றி, கொள்ளையடித்து நரகம் அடைபவர்களே !
                    உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழ் மக்களே !
 

                    


வெள்ளி, 10 நவம்பர், 2023

Kalamum, Neramum

 


                                                             காலமும்  நேரம் 

                            காலமும், நேரமும்  மனிதனுக்காக காத்திராது 

                              கடந்து விட்ட நேரமும் திரும்ப  வாராதது 

                             காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம்  மாறுபடுமே  

                              நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் 

                              இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே 

                              காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே 

                              நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது  நம் கடமை 

                              இதுவே  மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை 

                              கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது  

                              சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது 

                                காலமும் ,  நேரமும்  பொன் போன்றதன்றோ 

                               அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !

                               எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !

                             

வெள்ளி, 3 நவம்பர், 2023

 




                                                   எங்கே சமூக  நீதி

              இதுதான்  நல்லாட்சியா ? இதுதான் சமூக நீதியா 
              நிர்வாணமாக்கி  இருவரிடம் கொள்ளை அடிப்பதும்,
              கடையில் தேநீர் கேட்டவனிடம் இனத்தினால் ஒதுக்கியதும் 
              குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும்
              மனிதனின்  தலை மீது சிறுநீர் கழித்துஅவமானப்படுத்துவதும்,
              மாநிலம், நாடு என்றாலும் எல்லோர்க்கும் ஒரே நீதிதான் 
              தவறு எங்கு நடந்தாலும் அரசு தலையிடவேண்டுமே 
              இச்சமூக  அநீதிக்கு அரசு தண்டனை கொடுக்கலாமே ,

              திராவிடம்  பேசுபவன்,  சமூக  நீதியை பற்றி பேசுவானா !
             சந்தானத்தை பற்றி பேசுபவன், சாராயக்கடையை மூடுவானா !
             கோர்ட்டில் முறையிடாமல், முட்டையை காட்டி ஏமாற்றுவானா 
              

              பெண் உரிமை பணத்தை  சிலருக்கே கொடுப்பானா !
              பெண்கள்  இலவசமாக செல்ல ஓட்டை பேரூந்து அனுப்புவானா 
              காவல் துறையை கைபொம்மையாக்கி நீதி தவறுவானா 
              எல்லாம் சரியாக நடக்கின்றது என பொய்  உரைப்பானா !
              மக்கள் ஒரு நாள் தட்டி கேட்பார்கள் என  நினைபானா !
              கேட்டால்  அடக்கு முறை ஒன்றே  என தீர்மானிப்பானா !

              எழுந்திடுங்கள்! எதிர்த்திடுங்கள் ! சமூக நீதியைகாப்பாற்ற !
              பொருளாதாரத்தையும், சமூகநீதியையும் காப்பாற்றுங்கள் 
              காந்தியின் வழியை பின்பற்றி இவற்றை நிலைநாட்டுங்கள் 



       

திங்கள், 23 அக்டோபர், 2023

 


                                 காதல்  நெஞ்சம் 

* அன்பே !  ஆருயிரே1..அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள்
   மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று அழியாதவைகள் !

* காட்சி அளிக்கும்படி கரும்பலகையில் எழுதி வைச்ச காதல் அல்ல !
 துடைப்பான் கொண்டு துடைப்பதற்கு முயல்வது நல்லது  அல்ல !

* ஒப்பந்தம் போட்டு உண்டானது இல்லை  உன் நினைவுகள்
   உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல !

*என்னை நீ மறந்து விடு' என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது உன் நினைவுகள் இல்லா உலகில் !

உன்னுடன் மயங்கி நின்றேன்  உள்ளதால் நெருங்கி வந்தேன் 
என்னுயிர் காதலி  !  என்னுயிர் தேவதையே  என்பேன் !!  

* அந்தி மழையின் மண் வாசனை அதனின் பங்கிற்கு உருட்டிச் செல்கிறது
  உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !

* என் எழுத்தாணிக்கும் இயலுவதில்லை உன் நினைவின்றி எழுதத் தொட்ங்குமா !
    நான் எழுதுவது கடிதம் அல்ல ! என் நெஞ்சிம் உன் பெயரை சொல்லுமா !

  தொட்டாசிணுங்கி போல்  உன் மனம் சட்டென்று மூடி கொள்ளுமே 
   உன் மனம் மூடினாலும்,  உன் இதயம் பட படக்குமே !

* மதுரம் இல்லாத தேனீர் பருகும் போதெல்லாம் உன் நினைவுகளை கொள்கிறேன்!
   என்  நினைவுகள் சிந்திப்பதே இல்லை என்னை தந்து விட்ட பிறகு !
 
* மறந்து விடுவதற்கோ மறைப்பதற்கோ...மரணம் ஒன்றே மார்க்கம்!
* அதுவே உனக்கு சொர்க்கம் எனில்,மகிழ்ச்சியாய் ஏற்பேன் உன்நினைவோடு !

  ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 6 அக்டோபர், 2023

செங்கோல் ஆட்சியா ! சிதைக்கும் ஆட்சியா !!

 




                                 செங்கோல்  ஆட்சியா !  சிதைக்கும் ஆட்சியா !!


                             செங்கோலை  மதிப்பளித்து   ஆட்சி  செய்யலாமே !    
                             ஆள்பவர், மக்களின் நலனைக்  கருத்தலாமே !
                              மதத்தையும், ஜாதியையும் காட்டிப் பிளவுபடுத்தலாமா !
                              ஆக்கபூர்வமான தொழில்களுக்கு தடை செய்யலாமா !

                               விவசாய்க்கும், ஏழைகளுக்கும் உதவி அள்ளிக்கலாமா !
                               சொல்வது ஒன்று,  செய்வது ஒன்று, என்று இருக்கலாமா !
                               தப்பு செய்தவனை, தண்டனையிலிருந்து தப்பவிடலாமா !
                               வேலியே  பயிரை மேய்வதுபோல் ஆட்சி  இருந்திடலாமா !

                               உனக்கென, எனக்கென  என்று பங்கு பிரிக்கலாமா !
                               எஙகே நீதி ! தர்மம் என நினைக்கத் தூண்டலாமா ! 
                               நாடும், மாநிலமும் எக்கேடுகெட்டு இருந்தாலென்ன!
                               பணம் சேர்பதையே, குறிக்கோளாக இருந்திடலாமா !

                              மக்களை  மாக்கள்  என நினைத்துக்கொள்ளலாமா !
                               சிறுதொகை அளித்து பெரும் தொகையை அடையலாமா!
                               சிறுவெள்ளத்தை பெருவெள்ளம்  காணாமர்செய்யுமா!
                               நியாயம், தர்மம்,மனிதநேயம், இவ்வற்றைதூக்கிடலாமா !

                              நெஞ்சம் பொறுக்கவில்லையே ! நிலைகெட்ட மானிடர்களே 
                              பாரதிபோல் முழங்கிடுங்கள்!1 எதிர்த்து செயலாற்றுங்கள் !!
                              நல்லவர்களையும், நன்மைசெய்பவர்களை ஆதரியுங்கள் !
                              ஒன்று கூடுங்கள் !!  நல்லாட்சிக்கு  வழிசெய்யுங்கள் ! ! 

                             ரா.பார்த்தசாரதி 

          
                

                                 

வியாழன், 5 அக்டோபர், 2023

தமிழனே விழித்திரு எதிர்த்திடு

 



                                                


                                        தமிழனே  விழித்திரு  எதிர்த்திடு 

       வேற்று மதத்தினர் இந்துக்களையும்  தமிழையும் இழிவுபடுத்திறார்களே  
       சுதந்திரம் அடைந்து எழுபத்தாறு ஆண்டுகள்  முடிந்தது ? ஏன் இந்த நிலை 
       வேற்றுமையில் ஒற்றுமை பெயரளவில்தான் ,இதில் உண்மைஇல்லையே 
        மணிப்பூர் இன பிரிவிற்கு சமாதானமும் தீர்வும் இன்றைளவு ஏற்பட்டதா ? 

       தமிழனை பிறர் ஆட்சி  செய்கிறான்? ஜாதி, மதத்தால் பிளவுபடுததுகிறான் 
       இந்துமதம் , சனாதனம் ஒன்று. அவற்றை நோயாக கருதுகிறார் 
       என்று  தமிழ் நாட்டிற்கு விடியல் ஏற்படுமோ? தமிழனே சற்றே விழித்திரு!!
       சனாதானத்தை  பேசுபவனுக்கு, சாராய கடையை மூட மனம் வருமா ?

       சமூக நீதி பேசுபவன், மலம் கலந்த நீரைத்தான்  உன்ன மனம் வருமா ?
       மலம் கலந்தவனை கண்டுபிடிக்க தெரியாத ஓர் அரசு? இது மானக்கேடு !
       விவசாயி;க்கு தான் விளைத்த பயிருக்கு விலை நிர்ணயிக்க முடிவதில்லை
      விளைந்த நெல்லுக்கு அதனை சேமிக்க பாதுகாப்பு இல்லை !

       சாராய கடை த்திறப்பதிலும் , நீர் வளம் கெட மணல் கொள்ளை 
      அநீதியை கேட்டால் கட்ட பஞ்சாயத்து ராஜ்யம், அடிதடி கொலை 
       தன குடும்பம், தன மக்ன், மருமகன், என்ற ஓரே  ராஜ்யம் !
      காவலும், நீதி துறையும், அவர்களின்  கைபொம்மைகள் !

      எல்லா திட்டத்தையும் நிறைவேற்றியதாக ஓர் பொய் பிரச்சாரம் !
      தமிழ் மக்களை குடிகாரனாக ஆக்கியதே இந்த அரசு !
      குடியால் அவர்கள் கெடுவதை வேட்டிக்கை பார்க்கிறார்கள் !
      சாரயத்தில் சம்பாதித்தை , பெண் உரிமை பணம் கொடுக்கிறார்கள் !

      கள்ளச்சாராயம் சாப்பிட்டவனுக்கு மான்யம் பத்து லட்சம் 
     விவசாயி  கடனில் இறந்தால்  மான்யம்  இரண்டு லட்சம் 
    நீட் தேர்வில் மாணவன் இறந்தால் மான்யம் ஐந்து லட்சம் !
    என்னே  நமது அரசின் சமநோக்கு பார்வை! சிந்தியுங்கள்!

    பிறர் இந்துமதத்தை இழிவு படுத்துவதை தட்டி கேளுங்கள் !
    கோடி, கோடியாய் சம்பாதிப்பதை தடை செய்யுங்கள் !
     ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள் !
     நல்லாட்சிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !இதுவே குறிக்கோள் !

    மாற்றம் ஒன்றே மாறாதது !மாற்றத்தை கொண்டுவருவோம் 2024 !!
    தமிழகத்தை  தீயசக்திகளிடமிருந்து முயன்று மீட்டெடுப்போம் !!

    மானமுள்ள ஓர் தமிழனின் வேண்டுகோள் !