திங்கள், 30 டிசம்பர், 2013

puthaandu

                                         புத்தாண்டில்  ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!
                                 

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே
...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

* மண்ணில் விழும்
மழைத்துளியும்

விண்ணில் வீசும்

காற்றும்

யாவருக்கும்

பொதுதானே

புத்தாண்டே
!

* நதியால்
இணைந்த

மாநில மக்கள்

அணையால் பிரியும்

அவலமும்

அமிழ்ந்து போகாதோ

புத்தாண்டே
!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்

சுவடு தெரியாமல்

மறையாதோ

புத்தாண்டே
!










* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்

தானமாய் கிடைக்காதோ

புத்தாண்டே
!

* தேசங்களுக்கிடையே
பிரிவினை

முட்கள் சிதைந்து

ஒற்றுமை பூக்கள்

மலராதோ

புத்தாண்டே
!

* ஆட்சியும்
அதிகாரமும்

ஏழைகள்

ஏக்கம் தீர்க்காதோ

புத்தாண்டே
!

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!



R.Parthasarathy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக