புதன், 28 மார்ச், 2018

வீசியெறிந்தால் வீணாவதில்லை



வீசியெறிந்தால்  வீணாவதில்லை 




வீழ்ந்ததெல்லாம்   வீணாகிவிடுவதில்லை  
வீசி  எறிந்த  விதைதான்  விருச்சமாகிறது 

உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை 
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது 

உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை 
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது 

விருந்தாளிக்கு பசியை போக்கி,வீதியில் விழும் வாழை இலை 
பசுக்களுக்கு இரையாகி தன் உயிரை இரையாக்குகிறது 







விழுந்தவைகள் எல்லாம்
வீணாகி விடுவதில்லை
வீசி எறிந்த விதைகள் தான்
இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி நிற்கிறது!
வீணாவதில்லை துாக்கி எறியப்பட்டது
துடைப்பம் தான்...
எனினும்
எவ்வளவு துாசிகளைஉதிர்ந்த 
துவம்சம் செய்தது என்று
எண்ணி பார்க்கும் இதயம்
எத்தனை இருக்கிறது!

முச்சந்தியில் கிடக்கும்
முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை
எழுதியது என்று
எவருக்கு தெரியும்!

விருந்தாளியின் பசியை போக்கி
வீதியில் வந்து விழும்
வாழை இலை தான்
வாழும் பசுக்களுக்கு இரையாகி
இன்னுயிர் விடுகிறது!

விழுந்து, வெடித்து மரணித்த
மழைத் துளிகளின் மகிமையில் தான்
உலகம் தன் வதனத்தை
அலங்கரித்துக் கொள்கிறது!

விரல் பிடித்து நடக்க
விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும்
விமானத்திற்கு விழிகளாகிறது!

உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்த
சருகுகள் தான்
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு
வளம் சேர்க்கிறது!

இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை
வெல்வதற்கும் தான்!