வியாழன், 29 டிசம்பர், 2022

Vasumathi Sridharan

 



         1.  அலர்மேலுமங்கை சமேத, ஸ்ரீநிவாசப்  பெருமாள் ஆசியுடன் 
              சதாபிஷேக  விழா !

        2.  ஆண்டவன் ஆஸ்ரமத்தில்  01-01-2023 அன்று நடக்கும் விழா 
              திரு. ஸ்ரீ. ஸ்ரீதரனுக்கும் , திருமதி வசுமதிக்கும் சதாபிஷேக விழா !

      3.    அகவை அறுபதும், எண்பதும் என்றும் சிறப்புடையதன்றோ 
              மகள் ஸ்ரீமதியும், மகன் விஜய்யும், தலைமையேற்று நடத்துவதும் 
                                                                                                       பெருமைக்குரியதன்றோ !
     4.      ஆயிரம்  நிலவை  கண்ட  இல்லறத்  தம்பதிகளே 
              என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும் வையகத்திலே !

     5.      சதாபிஷேக விழா என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
               அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின்  ஆசியாகும் !

    6.      காலமும், காட்சிகளும்  என்றும் உலகில் மாறும் 
             கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

   7.      குடும்பம்  ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் 
            குடும்பத்தை ஆணிவேராய் தாங்குவதும்  தலைவனாகும் !

   8.      வயதில்  சிறியவர்கள் அவர்களிடம்  ஆசிப்பெறட்டும் 
            வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு  ஆசி வழங்கட்டும் !

  9.     நான்கு எழுத்திற்கு,நான்கும் தெரிந்தவர்கள் என்ற பெயருண்டு 
           ஸ்ரீதரன் , வசுமதி  என்ற பெயருக்கும் நான்கு எழுத்துண்டு !

10.    உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி  விருந்து உண்ணட்டும் 
        ஆயிரம் பிறை கண்டவரை ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் ! 

11,   அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
         பண்பும்  பயனும் அது,
                                                                                   
                                                             ரா.பார்த்தசாரதி - 8148111951
           

     

செவ்வாய், 20 டிசம்பர், 2022

Ennaumum Sinthanaiyum

 


எண்ணமும், சிந்தனையும்!
______________________________________

எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !

நல்லதே நினையுங்கள் ! நல்லதை செய்யுங்கள் !









மனிதனே சற்றே நினைத்துப்பார்
______________________________________

எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் – விழிப்பர்
விழிப்பவர் – உழைப்பர்
உழைப்பவர் – உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

 

செவ்வாய், 13 டிசம்பர், 2022

New year 2023

 


     புத்தாண்டே ஒற்றுமை மலராதோ !!!                 

புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே !


பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

நாட்டுக்கு, நாடு சமாதானம் 
தானமாய் கிடைக்காதோ 
மக்கள் இறப்பினை 
சற்றே நினைக்காதோ !
புத்தாண்டே !

மண்ணில் விழும் மழைத்துளியும்
விண்ணில் வீசும் 
காற்றும் 
யாவருக்கும் பொதுதானே
புத்தாண்டே
!


*நதியால் இணைந்த
மாநில மக்கள், 
அணையால் 
பிரியும் அவலமும் அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே
!

நம்பிக்கை துரோகமும் 
நயனவஞ்சகமும் கூடஇருந்தே  குழி
பறிக்கும்  கூட்டங்களின் 
எண்ணங்கள் மாறாதோ                           
புத்தாண்டே!

வெள்ளத்தால் சேதமுற்ற 
பயிருக்கும், வீடு, வாசல் 
இழந்தோர்க்கும் ஆவண 
அரசு செய்யாதா  புத்தாண்டே !

சுயநலங்களும் சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல் மறைந்து,

மனித நேயம் மலரட்டும் 
புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 



புதன், 16 நவம்பர், 2022

எங்கே அவள் ?

                                             


                                                    எங்கே அவள் ?

        பூத்த  விழிகள் கதை பேச பூங்காற்று மெல்லசைய 
        மண்ணைப் பார்த்து நடக்கும் அவள் அழகை காண 
        பூமியும் கூட அவளை காதலித்து விடுமோ என பயந்தேன் 
        நல்லவேளை பூமியும் ஒரு பெண்தானே என ஆறுதலடைந்தேன் 

        விரல் பிடித்து என்னுடன் வருவாய் என நினைத்தேன் 
         விலகிச்  செல்வாய் என்று  தெரிந்திருந்தால் 
         உன் விரல்  அல்ல,  என் உயிர் என்றே நினைப்பேன் 
         யாரோடு வாழ முடியுமோ அவளோடு வாழ்வதல்ல வாழ்க்கை 

         யாரின்றி  வாழ முடியாதோ அவளுடன் வாழ்வதே வாழ்க்கை 
         இருகை சேர்ந்தால்தான் வாழ்க்கை என அவள் அறிவாளா !
         இரு இதயங்களின் சங்கமம் என தெளிவாளா 
         இரு விழிகளின் நேசமே, எங்கள் காதல் தேசம் என அறிவாளா !

சனி, 5 நவம்பர், 2022

thamizhum, panpaadum, kalacharamum

 


                                           தமிழும்,  பண்பாடும் , கலாச்சாரமும் 

                   கல்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 
                   தமிழின் பெருமையும், ஆண்ட அரசர்களின் வம்சம் 
                  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இயற்றியார் 
                  கல்லிலே கைவண்ணம் காண கற்கோவில் அமைத்தான் 

                  தமிழனின் பெருமையை  உலகெங்கும் பரப்பினான் 
                 கம்பன் கண்ட  ராமாயணம் என்றும் சிறப்புடையதன்றோ 
                 வள்ளுவனின் திருக்குறள் என்றும் பொதுயுடமையன்றோ 
                 கல்விக்கும்,  புகழுக்கும் பொது அதிகாரம் அமைத்தான் 

                 நம் முன்னோர்கள் ஆன்ற அறிஞர்கள் என  அறிந்ததே 
                திசையை எட்டாகவும் , இசையை ஏழுகவும் பிரித்தான் 
                சுவையை ஆறாகவும், நிலத்தை ஐந்தாகவும் பிரித்தான் 
                காற்றை நான்காகவும் ,மொழியை மூன்றாகவும் பிரித்தான் 

                வாழ்க்கையை மட்டும்,  அறம், புறம் என இரண்டாக பிரித்தான் 
                மனித ஒழுக்கத்தை  மட்டும் ஒன்றாய்  அமைத்தான் 
                ஒழுக்கத்தை  உயிரினும்  மேலாய் கருதச் சொன்னான்
                யாதும்  ஊரே, யாவரும் கேளிர்,எனபொதுவுடைமையாக்கினான் 

                 ரா.பார்த்தசாரதி.
                    
                    
                      
                        
                      
                        

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

             

            

                                               மங்கள விநாயகனே    

                     விநாயகனே,   என்றும் வினைதீர்ப்பவனே 
                     வேழமுகத்தோனே , வேலவனுக்கு மூத்தவனே 
                    ஞான முதல்வனே,  கணங்களின்  தலைவனே 
                    செய்யும் தொழிலுக்கு ஆதாரமாய் முன்னிற்பவனே 

                   வெற்றிக்கு  வழிவகுக்கும் வெற்றி விநாயகனே 
                   மண்ணிலும், மஞ்சளிலும் உருவமாய் திகழ்பவனே 
                  காட்சிக்கு  எளியவனாய், தெருவெங்கும் அமர்ந்தவனே 
                  மூலப்பரம்பொருளே, மூழிக  வாகனனே 

                   புத்திக்கு வித்தாகும்  சித்தி விநாயகனே 
                   காக்கும் கடவுளாய், கணேசனாய் நிற்பவனே 
                   கவலைகள் அகல துணையாய் இருப்பவனே 
                   மெட்ரோஸ்னில் குடியிருக்கும் ஆனந்த விநாயகனே 
                   எல்லோரும் ஆனந்தமாய் வாழ அருள் செய்பவனே !

                   ரா.பார்த்தசாரதி  8148111951
             

               

THIRUMANA NAAL

 


                                                            திருமண நாள் 

                                       உற்றவர்,  பெற்றவர்  ஆசிகள் சூழ 
                                      இல்லத்தரசனும்.அரசியுமாக 
                                      மங்கல நாண் பூண்டிடும் 
                                      திருநாளே  திருமண நாள் !

                                     திருமணம் என்பது இரு மனம் அல்ல 
                                     அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம் !

                                     இருமனம் புரிதலோடு வாழும் வாழ்க்கை 
                                    வருடா , வருடம்  நினைத்து பெருமிதம் 
                                   கொள்ளும்  நாள் !

                                   வேறு,வேறு மண்ணில் மலர்ந்தாலும் 
                                  ஆயிரங்காலத்துப் பயிராக கிளை பரப்பி 
                                  செழித்து நிற்கும், அஸ்திவார  நாளே 
                                  திருமண நாள் !

                                 கண்ட கனவுகள் நனவுகளாக சிறகடித்து 
                                 பறக்க, சமூகத்தில் புது அந்தஸ்து பெரும் 
                                நாளே , திருமணநாள் !

                                 சுற்றம் வளைத்து, நட்பு வட்டம் பெருக்க 
                                வாழ்க்கை என்னும் பாதையில்  நடக்க 
                               இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில் 
                                நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட 
                                கருத்தொருமித்து மேன்மையான எதிர்காலம் 
                               சமைத்திட , அடிகோலும் பெருநாளே 
                               திருமண நாள் 

                                ரா.பார்த்தசாரதி 8148111951
                                 
                                 


புதன், 25 மே, 2022

sri krishna nichiyathaartha vaztg madal


                                   ஸ்ரீ கிருஷ்ணாவின்  நிச்சியதார்த்தம் 

இடம்:       ராதா கிருஷ்ண மந்திர                                   தேதி: 26 மே 2022
          லீ  மாண்ட , இல்லிநாய்ஸ்  60439
2.  ருக்மணி,சத்யபாமா சமேத வேணுகோபாலஸ்வாமி அருளால் 
     ராதாகிருஷ்ணா மந்திரில்  ஓர்  நிச்சியதார்த்த  மேடை !

2.  திருமதி லதா திரு சுரேஷின் புதல்வன் ஸ்ரீகிருஷ்ணாவிற்கும் 
     சௌபாக்கியவதி  ஷீட்டலுக்கும் நிச்சியதார்தம்  இன்று 

3. இது கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை 
    இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே  அன்று .
     
4   காலம், தேதி, இடம்  முடிவுசெய்வதும்  நிச்சியதார்தமே 
    இறைவன் நாமங்கள்சொல்லி லக்னபத்திரிகை வாசிக்கப்படுமே !

5.  இருவீட்டாரும்  சேர்ந்து நடந்திடும் நிச்சியதார்த்த  விழா 
     உற்றார், உறவினர் சேர்ந்து நடந்திடும் விழா !

வாழ்க்கைத்  துணைநலம் நாடும் ஸ்ரீகிருஷ்ணா எனும் ஆடவனே 
    என்றும் அமெரிக்காவில்  ஷீட்டலுடன்  வாழ்ந்திடுவாய் சிறப்புடனே !

நகமும், சதையும் ( Bone & Skin) போல்  இருந்திட  வேண்டும் 1
    இரு கைகள் சேர்ந்தால்தான் வாழ்க்கை என அறிந்திட வேண்டும் !

8  திருமணம் என்பது  இருமனம்  அல்ல  
    அதுவே  இருமனம் கொண்ட ஒரு மனம் !
 
9 திருமதி ஒரு வெகுமதி என அழைப்பது பழக்கம் 
    திருமதீயின் பெயரோ ஷீட்டல்  என அழைப்பது வழக்கம் !

10 காலமும், காட்சிகளும்  வாழ்க்கையில் என்றும் மாறும் 
    கணவன், மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும்  !

11 பிறந்த வீட்டின்  குலம்  காக்க வேண்டும் 
    புகுந்த வீட்டின்  நலம்  காக்க  வேண்டும் !

12/ மலர் போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்ப்பெண்ணே 
     மண்வாசனை மாறாத குணம்  வேண்டும்  மணப்பெண்ணே !

13 நிச்சியதார்தம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே !
    அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்   ஆசியே !

14 ராதாகிருஷ்ணா மந்திரில் இருவீட்டாரும் சிறப்புற  நடத்தினரே 
     வேற்றுமையில் ஒற்றுமை கண்டு,விருந்துண்டு மகிழ்ந்தனரே !

15 அன்பும்  அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
     பண்பும் பயனும் அது.  என்பது வள்ளுவன் வாக்கு !

   ரா.பார்த்தசாரதி 
  


  


     





 

ஞாயிறு, 15 மே, 2022

 


                                                              ருஷில்  உபநயனம

  இடம்:  உட்சௌ  ஹால்   ஆர். ஏ  புரம்          தேதி: 1  13 மே 2022
                 சென்னை =28
         
                  இன்று உட்சவ்  ஹாலில்  ஓர்  உபநயனம் 
                 ருஷில் வியாஸ் ஆனந்தின்  உபநயனம் 
                பிரியா  ஆனந்தின்  தவ புதல்வனாய் 
                பார்வையால் எல்லோரையும் கவருபவனாய் 
              
                திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவனாய் 
               ஆசாரியன் ஸ்ரீ ராமானுஜர் அருள் உடையவனாய் 
               படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரனாம் 
              ட் ரும்ப்  வாசிப்பதில்  கைத்திறன்  மிக்கவனாம் 

             அன்பு  தங்கை ரிஷிகாவை  நேசிப்பவனாம் 
           தாத்தா, பாட்டிகளின் ஆசீர்வாதம் பெற்ற பேரனாம் 
           உலகில் சிறந்தது  தாய் தந்தையின் ஆசிர்வாதமே 
           உற்றார்,  உறவினர் பல்லாண்டு  வாழ்க  எனவும் 
           நொடிநொடியின்றி  வளரவும்  வாழ்த்தினரே  !!
           
          
                                                 


       

செவ்வாய், 29 மார்ச், 2022

k ann kanda deivam

 

    கண்கண்ட  தெய்வம் 


தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே 
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.

பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் .

உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?

உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே

என்   வளமே உன்  சிறப்பு,
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 

அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.

வெள்ளி, 11 மார்ச், 2022

 


                                                                   எங்கே   அவள் 

       1,  அன்பால்  அரவணைக்கும்   அன்னை     அவள் !
     2   பொறுமையின் புகலிடமாய்  இருப்பதும்  அவள் !
     3.  இலவாழ்க்கையில்  இனிமை சேர்ப்பதும்    அவள் !
      4/  தன்னுயிரை  பணயம் வைத்து உயிர் கொடுப்பதும்  அவள்  
     5.  தமையனுக்காக    தாங்கும்  தங்கை   அவள்  !
    6   சுமைகளை  சுகமாய்    தாங்குவதும்     அவள்  !
   7   மனத்தால்  மயக்கும்  மனைவி  அவள் !
  8.   கண்களால்  கவரும்  காதலி   அவள்  !
  9   பிள்ளைக்கும், கணவனுக்கும் பாலமாய் இருப்பதும்  அவள் !
 10   குடும்பத்தில்  பல பதவிகளை  வகிப்பதும்    அவள் !
11  எதிர்நீச்சல் போட்டு சாதிப்பதும்  அவள் !
12. தியாகத்தின் திருவுருவாய்  திகழ்பவள்   அவள் !

    மங்கையராய்  பிறப்பதற்கு  மாதவம் செய்திடவேண்டும் 
    மாநிலத்தில்  மாட்சிமை  பெற்று  விளங்கிட வேண்டும் 
   மகளிர் தினத்தை ஆண்டுக்கு, ஆண்டு போற்றிட வேண்டும் 

   எழுதியவர் :  பாலா  

    

திங்கள், 28 பிப்ரவரி, 2022


                  Invitation size :  6 x 9 cm   Invitation  cover size 6.5 x 9.5

Marriage cover Printing:   Chiranjeevi: P.Seshasai ( alias) Karthik

                                                           with

                                      Sowbhagiyavath      Pavithra

-----------------------------------------------------------------------------------------------------------------

FIRST PAGE ENGLISH  MATTERS:   

                                                          Sri Ramajayam


                                         Smt.  Kamala Parthasarathy. 

                                                        and 

                                       Sri     R. Parthasarathy
 (No.103, First floor, D Tower, The Metrozone, Annanagar, Chennai 40)

                     request the pleasure of your company with

 family and friends on the occasion of the marriage of their son

                    Chiranjeevi  P. Seshasai (alias) Karthik

                                           with

                       Sobhagiyavathi:  R.Pavithra
       (D/o. Smt. Pushpa&Sri K.S.A. Ramanujachary)

                 On Wednesday the 4th May 2022
   
                   between  9 am   and  10 am     

          at  SVL  ARENA  Convention Centre

         Rockhill Colony, Near Reliance Petrol Pump

                          L.B.Nagar to Uppal Road,
              
         Telangana    500068    Phone:040  29550050

                                 PROGRAMME
                          
                                      03-05-2022
Nichiyathartham :                5 pm

Reception (Sangeeth)         6 pm to 8.30 pm onwards 

Dinner                            :   8.30 pm  onwards
===================================================

With best compliments from       Anand, Priya Anand, Rushil Vyas Anand,
                                                       Rishika Veda Anand

                               Friends  and Relatives
                         
  
         
        
           
                  








                                      

வெள்ளி, 21 ஜனவரி, 2022

Unmai Kaadal

 


                                             உண்மை காதல் 


காதல் என்பது காத்திருந்து  அன்பின்   பரிமாற்றமே 
இருவிழிகளின்  ஈரத்தை  கசியவிடுமே 
இரு இதயங்களின்  சிறகடித்து பறக்கும் எண்ணமே 
உள்ளங்கள்  ஒன்றொடுஒன்று  மனதினில் பந்தாடுமே  !

ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப்  பொழிந்தாலும் 
இறுதி மூச்சு வரை  மனதினால்  ஒன்று பட்டாலும்  !

காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும் 
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக்  காதல் !



 ரா.பார்த்தசாரதி

திங்கள், 3 ஜனவரி, 2022

 


                                 பொங்கல் பண்டிகை 


தையிலே உத்திராயணம்  உதித்து  வரும் காலம் 
உதய சூரியனை வழிபடும் சங்கராந்தி  காலம் 
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை 
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும், கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு 
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்துடுவோமே!

கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே !
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே !
விவசாயிக்கு முக்கிய பண்டிகை பொங்கல் திருவிழா !
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும்  திருவிழா !

பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

உழவர்களின் உரிகைக்காக கைகோர்த்து  நிற்போமே!
 வெள்ளத்தால்  ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுசெய்ய வேண்டுவோமே !
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 


ரா.பார்த்தசாரதி

Ruthran and varichaa moonrezhuthu

  


                                                    மூன்றெழுத்து

   கவிபரணி ஏறி கலிங்கத்து பரணி பாடுகின்றேன்
   கேளுங்கள், கேளுங்கள் !
   ஆடிடும் அலையினில் எரிடும் நுரையென
   பாடிடும் இசையினில்  பண் என விளங்கிடும் முத்தமிழே !

  மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
 முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம் 
குழந்தையின் சிரிப்பே மழலை 
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதேவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம். ழுது 
நாடு நலம் பெற பெயரும் வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு. 

 திருருத்ரன், திருமதி வாரிசா  மகனின் பெயரும் 
 மூன்றெழுத்து கொண்ட  விஜய் !
 விஜய்யின் அருமை  புதல்வியின் பெயரோ மூன்றெழுத்து உள்ள  கயல் !
திரு விஜய், திருமதி  சாந்தியின் அருமை  புதல்வன் பெயரும்  கவின் !
நான்கில் ( ருத்ரன் ) என்றும்  மூன்று (வாரிசா ) அடங்கும் 
கயல், கவின் இருவரும் ருத்ரன்,வரிச்சா  பேத்தி , பேரனாகும் !
குடும்பத்தில் நாம் காணும் நல்லவை  எல்லாம் 
மூன்றெழுத்து  உடைய  வெற்றி என்பதாகும் !

ரா.பார்த்தசாரதி