புதன், 6 டிசம்பர், 2017



                                      பெண்ணிற்கு வளையல்

  நன்மனத்துடன்  வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்
 கைகளின்  அளவிற்குக்கேற்ப  வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்
 என்றுமே வண்ண  கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு
 இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!

 வண்ண வளையல்களை கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு
அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு
அந்த  வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு
வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!

ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம்  மகிழ்விக்கும்
வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை  அதிகம்
பெண் வளையல்களை  அணிவதன் காரணம்  ஏனோ ?
கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?

தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடைந்ததே
தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே
வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !

ரா.பார்த்தசாரதி

  

திங்கள், 4 டிசம்பர், 2017



                                        

                                                 ராகுல் திருமண வாழ்த்து மடல்


மணமகன் : கே. ராகுல்                                 இடம்:பிரேமாவதி ஹால்
மணமகன்: எஸ். வைஷ்ணவி                               கோவிலம்பாக்கம் 
                                                                                                  சென்னை - 600 117
                       
                                                                                    தேதி :    07-12--2017


1. கோவிலம்பாக்கத்திலுள்ள பிரேமாவதி ஹாலில் திருமண மேடை   
  இன்னாருக்கு  இன்னாரென்று இறைவன் எழுதிவைத்த திருமண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !


4. திருமணத்தை எதிர்நோக்கும்  ராகுல்   எனும்   ஆடவனே                                   என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே 


 5. திருமணம் என்பது  இருமனங்கள்  அல்ல !
    அதுவே  இருமனங்கள்  ஒரு மனமாகும் !     
                                                                                                                        
6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ   வைஷ்ணவி   என்று சொல்வது பழக்கம்   !


7.   காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!!

8.   மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
      மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!


9.   பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10. கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  

11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
    ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!


12. மகள் இல்லாத வீட்டில் மருமகளே மகள் ஆவாள்
     குடும்பத்தை  நிலைநிறுத்தும் குலவிளக்கு ஆவாள் !

13. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

திருமணம் என்றால்





          திருமணம்  என்றால்
                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  
1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    
4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  
7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
==================================================================

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த
                                               வீட்டிற்கு.
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது
                                                    புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு –          தெய்வத்திற்குப் பயந்தவள்
=================================================================

தாலி :                 தாலியே பெண்டிற்கு வேலி .
                               தாயாகி தாலாட்டு பாட கணவன் தரும் பரிசு .
கூரை புடவை/ மாங்கல்ய தாரணப் புடவை 
                                மணமகள், திருமகளாய் விளங்குவதற்கும், கற்பையும் 
                                 குலத்தை  காக்கவும்  புடவை உடுத்தப்படுகிறது
  
தோடு:               எதையும் காதோடு  போட்டுக்கொள், வெளியே சொல்லாதே.
மூக்குத்தி :     வாசனையும், சமையல் அறியும் உத்தியும்,
                             முன்யோசனையுடன், எதையும் செய்வாயாக என்பதை
                             உணர்த்துகிறது .
வளையல் :        கணவன் உன்னை வளைய,வளைய வரவேண்டும்
                                 என்பதற்காக.
ஒட்டியாணம்:  கணவன் மனைவி  இருயிர்  ஓர் உயிராய் இருபதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது .
மோதிரம்:          எதிலும் உன் கைத்திறன்  காட்டுவதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது
மெட்டி      :          திருமணம் ஆனவள் என்பதையும், தீய சக்திகள்
                                 அவளை நெருங்காமல் இருக்க, அணிவிக்கபடுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------

சப்தபதி - ஏழு அடிகள் பெண்ணுடன் நடப்பது 

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர  
  வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
--------------------------------------------------------------------------------------------------------- 
கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,
*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 
*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.
*  தேவைப்படும்போது  பாராட்டுதல்.
--------------------------------------------------------------------------------------------------------------

தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி .

ராகுலின் திருமண வாழ்த்து மடல்




                                            
                                                   ராகுலின் திருமண வாழ்த்து மடல்

மாலினியின் பூச்சூட்டல்/சீமந்தம்




                                         
                                         மாலினியின்  பூச்சூட்டல்/சீமந்தம்

கடவுளுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

நிக்கிலின்  மனைவி  மாலினிக்கு இன்று   பூச்சூட்டல்!
நிக்கிலின்    அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
அமெரிக்காவில்  இனிதே நிகிலுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, ரோஜா, என பல நறுமண மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனம் பூசி, பன்னீரும்  தெளித்து  வாழ்த்துவதே
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்வதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடையுதே
தானும் அணிந்து, பிறர்க்கும்  வெகுமதியாய் கொடுக்கப்படுகின்றதே 

வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவிப்போமே ,
அவ்வளையல் ஓசை அவள் குழந்தைக்கும்,கணவனுக்கும்  சொந்தமே 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
மாலினியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (மாலினி) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள்,  மாலினியை வாழ்த்திடுவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி