சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த நன்னாள் !
அஹிமிசை வழியில் கிடைத்த அன்புத்திருநாள்.
அடிமைச் சங்கிலியை உடைத்த அற்புதமான நாள்
வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள் !
கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள் !
பாரதி கூறுகிறார் - ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே
பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார்.
உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை ! என்றும்
யாதும் ஊரே ! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா ! எனும்
பொது மறையை உணர்த்தியதும் நம் நாடு ! ஒன்றை மட்டும் கூறுகிறேன் !
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை
காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும்
அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !
2. சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே
சுதந்திரத்தின் முழுமை !
3. எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
பேசியதை செயல் படுத்துவதே முழு சுதந்திரம் !
4. மதுவுக்கு அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட
வாங்கவில்லை சுதந்திரம் !
5. மாற்றி முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!
6. பதவி வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம்
பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !
7. சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை
சுதந்திரம் .
8. செத்து விடாமல் சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .
9. நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை
மதிப்பதற்காகவே முழு சுதந்திரம் !
10, தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய இந்தியா எனும்
சித்திரம்
11. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு வளர்ச்சிக்கு உதவுவோம் !
12.. இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை
பிறக்கட்டும்,
முதலமைச்சர், பிரதமர் யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை
செய்பவரையே இச்சுதந்திரநாளில் வரவேற்போம் நன்றி !
மேலும் பாரதி கூறுகிறார் : தாயின் மணிக்கொடி பாரீர் ! அதை தாழ்ந்து
பணித்திட வாரீர்! ஓங்கி வளர்ந்த்தோர் கம்பம் அதன் உச்சியின் மேல் எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் ! வந்தே மாதரம் என்போம் நம் பாரதம் காப்போம் எனக் கூறுகிறார் ! இங்கே கவிதை பாட பாரதிதாசன், பாரதி இல்லாவிடினும் உங்கள் முன்
பார்த்த சாரதியாக நின்று விடை பெறுகிறேன் !
ஜெய் ஹிந்த் !