வியாழன், 8 அக்டோபர், 2015

சுதந்திரம் எங்கே



 சுதந்திரம் எங்கே 

நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்,
வெள்ளையனே வெள்ளியேறு  என சொன்னோம்!

சுதந்திரம் எதில்? பெண்ணிடமா , பெண்ண்மையிலா ?
கற்பை   சூறை யாடுபவர்களுக்கு   சுதந்திரமா! 

அரசியல்வாதிகள்  ஊழலை மறைபதற்கு சுதந்திரம்
ஏன்  என்று கேட்பவர்களுக்கு சிறையே  அடைக்கலம்!

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம் ,
இன்று கெடுதல் நடக்கா மலிருக்க ஓர் யாகம்!

ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிக்கும் சுதந்திரம்,
நல்லதை செய்பவர்களை   தடைசெய்யுதே  சுதந்திரம்!

பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம் !

அறுபத்தொன்பது    ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு,
இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே ?

இளைஞ்சர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் 
தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாய் உழைத்திதிடுங்கள் !

ஊழலையும், கொடுமைகளையும், அநீதிகளை   எதிர்த்து போராடுங்கள், 
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள்,
அதுவே  பல தியாகிகளின்,  தியாகம் என நினைந்திடுங்கள் !

இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உன்னை தூண்டட்டும்,
இன்றைய பாரத இளைஞ்சர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.