புதன், 9 அக்டோபர், 2013

அன்புள்ள காதலியே

                                                            அன்புள்ள  காதலியே


சொல்லவரும்  வார்த்தைகள் காணமல் போகிறது ,
பெண்ணே உன் கண்ணைக்   காணும்போதெல்லாம்!


காதலித்து  கணவனை  கைபிடித்த  நீ வாழ்க பல்லாண்டு,
உன் மனம்  அறியுமோ  நான்  பட்ட  பாடு!

என்னிடமே  தேவையெற்ற   ஊடல் ஏனோ?
உன்னிடம்  மயங்கினாலும் உள்ளத்தால் தடுமாறு கின்றேனோ! 

உன் முல்லை சிரிப்பை உதிர்பாயா
என் நெஞ்சில் ஆசையினை  தூண்டுவாயா?

உன் விழியின்  ஈரம்   சொல்கிறது ,
என் மேல் உள்ள  காதலை !

நெஞ்சில்  காதல் அழகாய்  பூத்ததே , சுகமாய் தாக்குதே
சொல்லாமல் , கொள்ளாமல் மனதில் பந்தாடுதே!

என்னைத்  தேடி  அலையும் உனது ஈரவிழியில்,
வாழ்கிறது நம் காதல், அதிலும் சுகமான காதல்.

ரா.பார்த்தசாரதி

anbulla kanavaney