திங்கள், 25 ஜூன், 2018

Face Book Message




  Face Book Message Sent by Mr.Shankar  - Advocate


தொடர்புகளுக்கு அனுப்பவில்லை என்றால், இந்த செய்தியை அனுப்பாமல் உங்கள் தொடர்புகள் அனைத்தையும் இழந்து வருவதால் உங்கள் கணக்கு செயலற்றதாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்படும், புதிய வடிவமைப்பு மற்றும் அரட்டைக்கு ஒரு புதிய வண்ணம் இருக்கும். பேஸ்புக் பயனர்களே, நாங்கள் பேஸ்புக்கு புதுப்பித்து 23:00 p.m. இந்த நாளில் 05:00 a.m. வரை. உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் இதை அனுப்பவில்லை என்றால், புதுப்பிப்பு ரத்துசெய்யப்படும். உங்கள் பேஸ்புக் செய்திகளுடன் அரட்டை செய்ய உங்களுக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் அடிக்கடி பயனாளராக இல்லாவிட்டால் நீங்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். உங்களிடம் குறைந்தபட்சம் 10 தொடர்புகளை வைத்திருந்தால், இந்த SMS அனுப்பவும், நீங்கள் ஒரு பயனர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் குறிக்க லோகோ சிவப்பு நிறமாக மாறிவிடும் ... நாங்கள் அதை இலவசமாக முடிக்கிறோம். நாளை அவர்கள் 0.37 சென்ட்டுகளில் ஃபேஸ்புக்கிற்கான செய்திகளை சேகரிக்கத் தொடங்குகின்றனர். இந்த செய்தியை உங்கள் 9 க்கும் மேற்பட்ட தொடர்புகளுக்கு அனுப்புவதோடு, உங்களுக்காக வாழ்வதற்கு இது இலவசமாக இருக்கும். பார் மற்றும் பந்து பச்சை மாறும். அதை நீங்கள் பேஸ்புக் இப்போது இலவசமாக பார்க்க வேண்டும். செலவில்லாமல் உங்கள் சேவையை மீண்டும் செயல்பட 10 நபர்களுக்கு அனுப்பவும்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

Thirumana Naal




                                                            

                                                                  திருமண நாள் 



உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ 
இலத்தரசனும்அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் . 

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக 
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக 
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து 
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க 
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான 
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி  - 8148111951

சனி, 23 ஜூன், 2018

மிச்சத்தை மீட்போம்





                                                    

                                                         மிச்சத்தை மீட்போம் 


           பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா 
           இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா 
           தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை 
          தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !

           வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே 
           நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே
           பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம்
           வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !

          பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
          அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம்
           ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது
          மனிதனின் மிச்சமோ மனிதனையே  தீண்டத்தக்கதாக அமைகிறது !

         மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே
        பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே
        ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே
         பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !

         ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான்
         தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான்
         பணக்காரகளின் செல்வம் அவன்  தலைமுறைக்கேச்  சேருகிறது
         மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
       
         ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா
         ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா
         வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா
         விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
       
         
         
         ரா.பார்த்தசாரதி 
           

Padakkavithai Potti 166




                                              படைக்கவிதை போட்டி 166


                தன்  மகனுக்கோ, கணவனுக்கோ
                தேநீர்  ஆற்றும்  பெண்மணியே !

                வாய் பொறுக்கும் சூட்டிற்கு குடிக்க ஆற்றுகின்றாய்
                உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காக பணிசெய்கின்றாய் !

                கொடுத்திடும்  உன் தாயன்பிற்கு  ஈடு இணையில்லை
                உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை !

                இன்முகம் காட்டி, பாசத்தை தேநீரில் கலந்து, மகிழ்ந்து
                கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்ப பெண்மணியே !

                களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாகப் பானம்
                உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும் !


                 ரா.பார்த்தசாரதி


              

வியாழன், 14 ஜூன், 2018

டி .ஜே ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா





                                              

டி .ஜே  ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா 
Awarded by Indian Virtual Academy for peace and Education

கவிபரணி ஏறி, கலிங்கத்து பரணி கூறுகிறேன்
கேளுங்கள், கேளுங்கள் 

மூன்றெழுத்திற்கு  ஓர் சிறப்புண்டு 
முத்தமிழ் எனும் பெயருண்டு 

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
                       தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
               குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
                                     வாசமுள்ள  மலர்களின் சிரிப்பே மணம்
                             கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பே மழலை 
                     மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
                  மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
   நல்வழிக்கும் , அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடும்  
                                                நம் தலைவர்  காண்பதோ  வெற்றி
    ஆம் நம் விஷ்ணுசஹஸ்ரநாம  மண்டலியின்  தளபதி 
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற  மூன்றெழுத்து   ஸ்ரீதர்
ஆம், ஸ்ரீதர் என்ற பெயரும் மூன்றெழுத்து 
================================ரா.பார்த்தசாரதி 
ஜே .பி .என் விஷ்ணுசஹஸ்ரநாம மண்டலி  


ஞாயிறு, 10 ஜூன், 2018

ஸ்ரீ கிருஷ்ணர் vananguvathu




ஸ்ரீ கிருஷ்ணர் யார் யாரை வணங்குகிறார் ?


                     1.            நித்ய அன்னதானம் செய்பவன்

                    2.             இளம் வயதில் திருமணம் எல்லா கர்மாக்களையும்
                                    ச்ரத்தையுடன் தவறாமல் அனுஷ்டிப்பவன்

                    3.            வேதம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவர்கள்

                    4.             கற்புடைய உத்தம ஸ்தி

                   5.              காயத்ரி, சந்தியாவந்தனம் மற்ற தேவ பூஜாக்களை
                                    ச்ரத்தையுடன் அனுதினம் அனுஷ்டித்து அதன் பின்
                                   அதிதிகளுக்கு அன்னம்மிடுபவன்.

                  6.             ஆயிரம் பௌர்ணமி கண்ட, இல்லற தம்பதிகளையும்
                                  நான் வணங்குகிறேன்.
                                  ------------------------------------------------------------------------------------

வியாழன், 7 ஜூன், 2018

தலையாட்டும் நாட்டிய பொம்மை



                            தலையாட்டும் நாட்டிய பொம்மை


      நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் பொம்மலாட்டம்
       உடம்பின் பல பாகங்கள் அசைந்தாடும் தோற்றம்
       அழகாக தலையசைத்து ஆடும், மனதில் மகிழ்வூட்டும்
       தொட்டுவிட்டால் தானே ஆடி அபிநயம் காட்டிடும் !

        இன்றைய அரசியல் வாதிகளோ தலையாட்டும் பொம்மைகள்
         தன்னாட்சி கவிழாமல் இருக்க, மேலிடத்து அடிமை பொம்மைகள்
         கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் ஊமைகள்
         ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்து செய்யும் கொடுமைகள்

         தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
          மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம் !
          பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
          மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப்பிரச்சாரக் கூட்டம் !

           பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
            அக்ஷிய பாத்திரத்தை கொடுத்து பிச்சை எடுக்கும் கூட்டம்
           

         
         




செவ்வாய், 5 ஜூன், 2018

உலக சூற்று சூழல் தினம்




                    உலக  சூற்று  சூழல்  தினம் 


                 நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக  வை           
                 தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து  வை
                 காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.
                 வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

                இன்று தண்ணீரும்,  காற்றும் மாசு படுகின்றதே
                இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே
                கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ்  இனங்கள் இறக்கின்றதே
                காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே  தவிக்கின்றதே  !

                சுற்றுப்புறம் தூய்மையாய்  இருப்பதற்கு உதவுங்கள்
                தனிமனிதா,  தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்
                வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என  எண்ணுங்கள்
                குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

                அழகாக வீடு கட்டினால்  மட்டும் போதாது
                அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது
                வீட்டைச் சுற்றி  குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
                மக்களுக்கு  மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

               வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம்   கொள்
               கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,
               கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,
               உலகின்  சுற்றுசுழலையும்     பாதுகாக்க   எண்ணம்கொள் !


                ரா.பார்த்தசாரதி
           


திங்கள், 4 ஜூன், 2018

Abijith Neram




அபிஜித் நேரம் என்றால் என்ன ?


தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.
இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!
நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.
அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.
இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.
இல்லையே ... மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே...
இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.
இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,
எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.
சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.
துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.
ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.
இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.
உத்திராடத்தில் கணபதி...
இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.
திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.
சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.
ஆக... இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,
இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.
எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.
இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.
ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.
அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.
ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?
இல்லை... ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.
அது எந்த நேரம் என்றால் .. மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.
இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,
ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.
எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!
ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779
அடுத்த அத்தியாயம் வரும் 7.5.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.
- தெளிவோம்