வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுதந்திர சிறகுகள்

     
                                                சுதந்திர சிறகுகள்


மனிதனே,  நம்  சுதந்திரம்  பிறர்  பறப்பதற்கா 
நம் சுதந்திரம்,     நம்மை  பிறர்  ஆள்வதற்கா ?

இளைஞ்ர்களே   சிந்தனைச்  சிறகுகள் பறக்கவா 
காதல் சிறையினில் உன்னை  பூட் டிடவா

சிறுவர்களே, வசந்த சிறகுகள்  பறக்கவா, 
திரை அரங்கிலே  என்றும் தொலைத்திடவா?

வாக்களர்களே,   உங்கள் வாக்குசீட்டு எனும் அட்சயபபாத்திரத்தை ,
அரசியில்வாதியிடம்    இலவசமாக கொடுத்துவிட்டிர்களா ?

பாட்டாளி, தோழனே  உன் உழைப்புச் சிறகுகளை,
பண முதலைகளிடம்  சேர்ந்தே அடகு வைத்துவிட்டிர்களா ?

இன்னும், இன்னும், உதிர்ந்திடாத சிறகுகளோ,
நம்  நாட்டில்,  ஏராளம் , ஏராளம்!

இனியாவது, பெற்ற சுதந்திரந்திற்கான  இனிப்போடு ,
பெறவேண்டிய சுதந்திரத்திற்கான  கண்ணீரை பிரசிவிப்போம்!


ரா.பார்த்தசாரதி


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக