சனி, 29 டிசம்பர், 2012

sattray ninaithuparungal

     சற்றே  நினைத்துப்பாருங்கள்  !
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  !
  1.          உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும்   தினமும் கடைபிடியுங்கள்
  அது இளமையென்னும் ரகசியத்தை  ரசிக்கும் இடமாகும்  !
  1.              பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  !
  1.            நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
          அது  உன் நேர்மைக்கு இடமாகும்  !
  1.             வாழ்வில்  சேமிப்பை  கற்றுக்கொள்ளுங்கள் 
அது  எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும்   !
  1.              சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
      அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

veeraraghavan


                                           வீரராகவன்
கமலா, வேதாந்தம்  தம்பதினரின்  மூத்த புதல்வரே  !
என்றும்  கடமை, பக்தி, நல்லொழுகத்தில்  சிறந்து விளங்கியவரே !

காஞ்சியில் பிறந்து,  சென்னையில்  குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும்,  குடும்பத்திலும்  சிறந்து விளங்கினாய் !

 வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய்  திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள்  இடையே சிறந்து விளங்கினாய் !

இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின்  எவரும்  புகழாமல்  இருப்பதில்லை.!

மகன்களுக்கும், மகள்களுக்கும்  என்றும் சிறந்த தந்தையாய்  !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த  அண்ணனாய் !

பொறுமையிலும், ஒழுக்கத்திலும்  என்றும் சிறந்து விளங்கி,
பலரது  இகழ்சிகளையும்  சுமைதாங்கி போல்  தாங்கி ,

நல்மனம் கொண்டு நற்செயல்  புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய்   திகழ்ந்தாய் !

ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும்  மூன்று அடங்கும் !
பத்மா  எனும் பெயர்  விளங்கும் !

கைப்பிடித்தவள்  வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?

அகவை அறுபதும்  என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி  விண்ணுலகம் அடைந்தவரே !

நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை  கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா  புகழ்  அடைந்தாய் !

பெற்றோரை  என்றும் பணிவுடன் வணங்கிடுவோம்  !
வாழ்வில் எல்லா வளம் பெற்று  வாழ்ந்திடுவோம்!


                                                                              ரா. பார்த்தசாரதி
                                                                                 ( பாச்சு )

  




சரோஜா


                                                                       சரோஜா

வாழ்வின் ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன்,
வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன் ,
எழுதுகோலை  துணிவுகொண்டு கைய்யில் எடுத்தேன்,
அன்னை சரோஜாவின் அருமையினை எழுத துணிந்தேன்.!

மக்களைப் பெற்ற மகராசியே   தாய்தான் ,
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்,
ஞானியும், துறவியும்  போற்றும் தெய்வம்,
ஞாலம்   புகழ்ந்திடும் சிறந்த தெய்வம் !

ஏழு பிறவி எடுத்து  ஏழு பிள்ளைகள் பெற்றாய்,
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஒர்  தொடர்பு வைத்தாய்,
ஏழுலே  ஒன்றே  ஒன்று  பெண் ஆனாலும் ,
எல்லோரிடத்திலும் மாறா அன்பும், பாசமும் வைத்தாய் !.

ஓய்வின்றி, உறக்கம்மின்றி,  உன் உயிரைக் கூட,
 ஒவ்வொர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்.,
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே,
உன் அருமை அறியா பிள்ளைகளை  தூற்றுமே.!

பாசமுள்ள   வேளையிலே, காசு பணம்  கூடலியே,
காசு வந்த   வேளையிலே.  பாசம் வந்து சேரலியே ,
பருவத்திலே நாங்கள் பட்ட  வலி தாங்கலியே ,
வார்த்தையிலே  வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே.!

பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே,
பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே.
எனக்கென்று  துன்பம் வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு ,
உனக்கென்று துன்பன் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ ?

தாயைவிடச்  சிறந்த தெய்வம்  இல்லை ,
திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை,
தாயின் பெருமையினை சொல்ல வார்த்தையில்லை,
தியாகச்சுடரே  தாயுருவம், மனதினின்றும் மறைவதில்லை !

இளமையில் ஸ்பரிசம்,  முதுமையில் பாசம்,
என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்,
இளமையில்  நான் உனக்கொரு குழந்தை,
முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை !

வாழ்க்கை  படகினிலே  நீயொரு  துடுப்பு 
எங்கள்         பிறப்பே  உன் படைப்பு 
எங்கள்         வளமே உன் சிறப்பு ,
எங்கள்   நினைவே  பாசத்தின் பிணைப்பு !

பூமியைவிடச்   சிறந்தவள்   தாய் ,
ஆகாயத்தை  விடச்  சிறந்தவர்  தந்தை.,
பூவிலே  சிறந்தது  மல்லிகை     ரோஜா,
எங்கள்   தாயின்   பெயரோ         சரோஜா !


                                                      ரா. பார்த்தசாரதி 



சரோஜா 
saro

      

manithanay

                     

      மனிதனே !    நட்பையும்,  உறவையும்   உதறிவிடாதே !   

பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !

 சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் ! 
மண்  என  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
இனம்  என  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் 

பாசத்தையும்,   நேசத்தையும் , பாலமாக  அமைத்துடு !
சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும், படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு ! 
நட்பும், உறவும், உன் உடன்பிறப்பு என நினைத்திடு !

மன்னிக்க தெரிந்த  மனிதனே  நல்லவன்  என  கருதிடு  !
கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு ! 
 மனிதனே, உறவும் ,நட்பும் ஓர்  இரு சக்ர  வண்டிதானோ !

 இரண்டுமே , ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்ககள்தனோ !
 நட்பையும், உறவையும், நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ !

இதை படித்த பின்னும் நட்பையும், உறவையும்  உதறிவிடாதே ! 


                                                                                      ரா. பார்த்தசாரதி   
               

சனி, 8 டிசம்பர், 2012

vasanthamay varuka


எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம். 

பன்னிர்த்துளிஎன  தெளித்தது  பனித்துளி .
 

சற்றே தயக்கமும் , நடுக்கமும் அடைந்தோம் 

அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?




  இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்


மலர்கள் பலநிறங்களில்  மிளிர்வதை காண்கின்றோம்
மனிதர்கள்,முகமலர்ச்சியுடன் வரவேற்ப்பதை  கண்டோம்

 எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!

பூத்து  குலுங்கும்   புதுமலர்கள்     அசைய,
 

புதிதாய்  தளிர்த்து  புன்னகை புரிய,

மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய,



வரவேற்றோம், வசந்தமே  வருக,  வருக  என.


செவ்வாய், 4 டிசம்பர், 2012

navin

மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு                                    தேதி : 31-03-2013
முத்தமிழ் எனும் பெயருண்டு,
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நாட்டை  நல்வழியில் நடத்தும், தலைவர்கள்  காண்பதோ  வெற்றி 
நட்பின் இலக்கணமாய்  மூன்று எழுத்து கொண்ட பெயரும்  நவீன் 
நல்லொழுக்கத்தின்  நாயகிக்கும், மூன்று எழுத்து கொண்ட பெயரும் சுஜாதா ,
நவீன்,  சுஜாதா  தம்பதியினர்  மகனின்  முதலாம் ஆண்டு பிறந்தநாள் 
 கொண்டாடும்,  மகனின்  பெயரும்  மூன்று  எழுத்து  கொண்ட கேசவ் 

நவீன், சுஜாதா , கேஷவிற்கு  எங்கள்  ஆசிர்வாதங்கள்.

ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி . 
-----------------------------------------------------------------------------------------------------------


குழல் இனிது யாழ் இனிது  என்ப  தம்  மக்கள்,
மழலைச்  சொல்  கேளாதவர் 

தம்மின்  தன்  மக்கள்  அறிவுடைமை  மானிலத்து ,
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.

எல்லா  பிள்ளைகளும் ,  மண்ணில் பிறக்கையில் நல்லவர்களே.!
அவர்கள்  நல்லவர்  ஆவதும், தீயவர்  ஆவதும் தாய் தந்தை வளர்ப்பினிலே !

ரா.  பார்த்தசாரதி 


திங்கள், 3 டிசம்பர், 2012

neenkal eppadi irupirkal

   
         நீங்கள் எப்படி  இருப்பிர்கள்!!         எதை  இழைப்பிர்கள் !!


       1. நயம்பட பேசினால்,  நல்லவனாக  கருதபடுவாய் !

       2.  சிந்தித்து  பேசினால்,  சிறப்புடன்   இருப்பாய் !

       3.  அறிவு ஆற்றலுடன்  பேசினால்,  அறிவாளியாக  
புகழப்படுவாய் !
                                                                                         
       4.  பொறுமையாக பேசினால்,  போற்றப்படுவனாக இருப்பாய் !  
     5.  பொருத்தமாக பேசினால்,   மதிக்கபடுவாய்

     6.  பண்புடன் பேசினால் பயன் அடைபவனாக இருப்பாய் 

        7.    கோபமாக பேசினால் குணத்தை   இழப்பாய்  !

        8.   ஆணவமாய்  பேசினால் , அன்பை   இழப்பாய் !

        9.   கடுமையாக .பேசினால்  நட்பை
இழப்பாய்    !

      10.   வேகமாக பேசினால்  அர்த்தத்தை 
இழப்பாய் !

      11.   அதிகமாக பேசினால்  உன் மதிப்பை  
இழப்பாய்   !

      12.   பொய்  பேசினால் உன் பெயரையே
இழப்பாய்  !

 நல்லதே  பேசுங்கள் ,  நல்லதே செய்யுங்கள ! நன்மை  அடைவீர்கள் !

 

                                                                   ரா. பார்த்தசாரதி 










வெள்ளி, 30 நவம்பர், 2012

நயகரா நதியே !

                                 நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
3.
மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                       

   


 
.         

seshasai

                                                                சேஷசாய்- மகன்

மகன் என்றும்,  மகள் என்றும், உரிமை  என்றும்,
மண்ணுலகத்தில் இல்லறத்தின் பயனாய் நின்றும்,
தகவுடைய குடிப்பெருமை தாங்க வந்த,
தகுதியின்   வடிவம்தான்,  மகனே ஆகும். 

பந்தங்கள், சொந்தங்கள் பெறுவதற்கே 
பாதையிட்ட  பெருமையெல்லாம் மகனால் அன்றோ,
நிறைவான பண்புகளால்  வாழ்க்கைத்  தேரை,
நேரியதோர் வழி  செல்லுதுவதும் மகன்   அன்றோ?

வளர்ந்த பின்னர்,  தந்தைக்கு  கால்களாக,
விளங்குகின்ற மகனேதான் சிறந்து நிற்பான்,
தளர்ந்து நிற்கும், பெற்றோர்க்கு  மருந்தாகி,
தன்னகத்தே உணவிட்டு நாளும் காப்பான் அன்றோ?

ஈன்றெடுத்த தாயானவளும்  கடமை செய்தாள்,
ஏற்றதோர்  கல்வி தந்து தந்தை நின்றான்,
சான்றோனாய் நிற்பதுதான் மகனின் ஆற்றல்,
சுமந்து நின்றே தாய்தந்தை வாழ்தல் வேண்டும்.

இருபத்து நான்கு வயதிற்குள் கல்வி முடித்தும்,
இருபத்து   ஐயிந்தில்   தொழில் கண்டும்,
குடும்பத்தில் கண்ணாகிய  கன்னியர்க்கு திருமணம் 
முடித்து வைத்து உதவுபவனும்  மகனே!!

அயல்நாட்டில் பெருமையுடன்  பணிபுரியும் நேசம்,
பணத்தையும், பாசத்தையும் ,பிரிக்கும் தேசம்,
மனம்சோர்ந்து  ஏங்கி தவித்திடும் தாய்தந்தையின் பாசம்,
என்றைக்காவது  குடிபுகுவாய் உன் தாய்நாட்டின் வாசம்.

விருப்பமுடனே பெற்றோர்  பார்த்த திருமகளை,
நன்றே  என நவின்றிடும் நற்புதல்வனே,
குலப்பெருமை காத்திடும், எங்கள் புத்திரனே,
சேஷசாய்  என்ற பெயருடன் இந்தியானபோலீசில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !!


kumar




இடம் :கடல்மங்கலம்   -2013                                                        தேதி : 21-07-2013

வியாழன், 29 நவம்பர், 2012

obama

                                                  
                                       ஒபாமா



மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நம்மை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் நம் தலைவர்கள்
காண்பதோ வெற்றி
நம் வாழ்க்கையினை வளம்பெற செய்திடும் இந்நாடு,
நம் நாட்டிற்கும் உதவிக்கரம் நீட்டிடும் இந்நாடு,
அதுவே மூன்றெழுத்து கொண்ட U S Aஎனும் பொன் நாடு



இந்நாட்டில் வெற்றியுடன் உலா வரும் தானை தலைவரின்
 பெயரும்   மூன்றெழுத்து     கொண்ட  ஒபாமா       



ரா . பார்த்தசாரதி



தாயே தெய்வம்

                                              தாயே  தெய்வம்

கண்கண்ட தெய்வமென  நூலோர் சொன்னார் 
கண்மூடிச் சொல்லாம் தாயைக்  காட்டி,,
மண்ணுலகில் இறைவன்னில்லை , தாயின் அன்பை 
மதித்து  இங்கே உவமைச் சொல்ல சொற்க்கள்  இல்லை.

பத்து மாதம்  கருப்பையில்  சுமந்து பெற்று,
பக்குவமாய் வளர்த்தவளும்  தாயே ஆவாள் 
சொத்து என்றால் தாயேதான் ,  தாயின் மேலாம் 
சொத்துக்கள், சொந்தங்கள் ஏதும் இல்லை.

குடும்பத்தின் முழுநேர வேல்லைக்காரி,
குழந்தைகளின்  துப்புரவு பணியாள்,  என்றும்,
அடுப்படியில் சமைப்பதர்கே , கொஞ்சம்கூட 
அல்லுக்கதா  சலிக்காமல் சுழலும் பூமி !

மடிதன்னில்  குழந்தைகளே இல்லா நேரம் ,
மற்றவர்கள் தருகின்ற தீனி இட்டு ( சோறுண்டு}
விடியலுக்கு காத்திருப்பேன்  என்று சொல்லி,
விளக்கேற்றி மகிழ்கின்ற  " தாயே தெய்வம் "

ரா.பார்த்தசாரதி


புதன், 28 நவம்பர், 2012

pattukottail kavithaikal

செய்யும் தொழிலே  தெய்வம்,
அதில் காணும் திறமைதான் நமது செல்வம்
கையும், காலும்  உதவி
அதுவே நமக்கு தருமே பெரும் பதவி.

சனி, 24 நவம்பர், 2012

naan virumbia kavithaigal




sudanthira siragukal

                                                               



obama



செய்யும் தொழிலே  தெய்வம்
அதில் காணும் திறமைதான் நமது செல்வம்
கையும்,  காலும்  உதவி
அதுவே  நமக்கு தருமே பெரும் பதவி 

வியாழன், 22 நவம்பர், 2012

காதல் நாடகம்

                                            காதல் நாடகம் 

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,

எல்லை மீறும் அன்பே, செல்வம் ஆகுமே ,
இளமை நேசமே, மண் மேல் சுகமே !

சிந்தும்  செந்தேனும் , சொல்லில் ஊறுமே,
தென்றல் வீசியே,  நன்றியும் கூறுமே!

காலம்  எனும் பந்தலில், அன்புக்கைகள் ஒன்று சேருமே 
மகிழ்ச்சி  வெள்ளத்தில்,   இரு உள்ளங்கள் துள்ளுமே!


ரா.பார்த்தசாரதி

புதன், 21 நவம்பர், 2012

unmaiyum, perunmiyum

உண்மையும், பேருன்மியும்

எம்மொழியே செம்மொழி

                                                  எம்மொழியே  செம்மொழி

இனிய  தமிழ் மொழியே   நமக்கு அமுதம்,
நமக்கு இன்பம் தந்தாலே நல்லமுதம் !
எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி
அருளாளர்களும், ஆழ்வார்களும், வளர்த்த மொழி !

தமிழுக்கும் அமுதென்றுபேர், என்பார்  பாரதிதாசன்,
தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தோள் என்பார்,
தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்,
தமிழையும், தாயையும் புகழாமல்   இருப்பவருண்டோ தரணியிலே !

செந்தமிழ் நாடெனும்  போதிலே  இன்பத்
தேன்வந்து  பாயுது  காதினிலே என்றார், பாரதியார்,
செம்மொழி மாநாடு நடந்ததும்  கோவையிலே,
தமிழர்கள்   கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே !

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் !
தமிழ் படித்தவர்களுக்கே தமிழ் நாட்டில் வேலை,
தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
எம் தமிழ்மொழியும், பெருமைவுறுமே பாரினிலே !

தமிழ் பரவும் வகை செய்திடுவோமே !
கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே !
எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

தமிழ், தமிழென  முரசு கொட்டவேண்டாம் !
ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம் !
தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு !
பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

 எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே !
இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே !
வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு !
அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்கு தனிச்சிறப்புண்டு !

ஆங்கிலப் பெயர் பலகையினை தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே  ஒரு சிறப்பன்றோ !
தனியார்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
அறிவியலிலும்,உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்
                                                                                                                                 வேண்டுமே!

எம்மொழி, செம்மொழி  எனச்  சொன்னால் போதாது!
ஏற்றமிகு  மாற்றங்கள்  செய்திடல் வேண்டும் !
மாற்றங்கள் செய்ய பள்ளியும்,கல்லூரியும் ஒருமைபடவேண்டுமே !
பாமரனும் படித்து  உவகை  கொள்ளவேண்டுமே !

இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிலவவேண்டும் !
எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும் !
தலைமுறைகள் பல கழிந்து குறைகளைய வேண்டும்.!
எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர் !   வாரீர் !

ரா,பார்த்தசாரதி





செவ்வாய், 20 நவம்பர், 2012

நரசிம்ம ப்ரபத்தி

                                                              நரசிம்ம  ப்ரபத்தி 

மாதா  நரசிம்ம:  பிதா நரசிம்ம:
ப்ரதா  நரசிம்ம: சகா நரசிம்ம:
வித்யா நரசிம்ம: த்ரவினம் நரசிம்ம:
ஸ்வாமி நரசிம்ம: சகலம் நரசிம்ம:
இதோ  நரசிம்ம: பரதோ நரசிம்ம:
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ம:
நரசிம்ம தேவாத், பரோ நகஸ்ஸித்:
தஸ்மான்  நரசிம்ம: சரணம் ப்ரபத்யே !  

manithanum erumbum

மனிதனும் !  எறும்பும்!

சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .

யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு  எறும்பிற்கு ?

மனிதனே!

சுறுசுறுப்பாய்  இரு !
கடினமாய்  உழைத்துடு !
சேமித்துடு !

எதையும்  ஐயிந்தறிவு எறும்பிடம்தான்  கற்றுகொள்ளவேண்டுமா ?

ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 18 நவம்பர், 2012

veda vakku

                                                     வேத வாக்கு

1,     பல புண்ணிய தலங்களையும்  பல நாடுகளையும் சுற்றிவருதல்,
2.     ஏழை, எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும்  உதவுதல்
3.    ஏழைகளுக்கு    கல்வி  அளித்தல்.
4.    பெண்களுக்கு  மாங்கல்யம், தானமளிதல்
5.    வாயில்லாத  ஜீவன்களை பராமரித்தல்
6.    பொன், பொருள்களை  தானமாக  அளித்தல் 
7.   ஆலய பணிகளுக்கு உதவி அளித்தல்   
8.   கூட்டுப் பிராத்தனைகளில் கலந்து கொள்ளுதல்
9.   முதியவர்களுக்கும்  ஆதரவுவற்ற    குழந்தைகளுக்கும்  உதவிசெய்தல்
10. அனுதினம்  கடவுளை  துதித்தல்

மேற்குரிய நற்செய்கையால்  உண்டாகும் புண்ணியங்கள்  யாவும்
உன்  தாய்,  தந்தை இருவரையும்   ஒரு முறை பக்தியுடன்
 வணங்கினாலே  உங்களுக்கு கிடைத்து விடும்  என்பது வேதவாக்கு

                                                                                        ரா . பார்த்தசாரதி