செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018






                                சுதந்திரத்திற்கு சுதந்திரம் இல்லை


எழுபத்திரண்டு  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து செயல்படுகின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில், அநீதி எனும் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
தேசத்திலும், அந்தமான், சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞ்சர் கருணாநிதி



                                       

                                                கலைஞ்சர்  கருணாநிதி


 உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே என்று அழைக்கும் தலைவா
 இனி.  அந்த காந்த குரல் கடற்கரை காற்றில்  கலந்து விட்டதா
 உலக தமிழரின் உயிர் மூச்சே,  சுண்டி இழுத்தது உன் பேச்சே
 ஒன்றா, இரண்டா உன் சாதனை, ஏட்டில் அடங்கா உன் போதனை !

 உதயசூரியன் மறைந்து விட்டது, இதய காவியம் இறந்துவிட்டது \
 உன்  கவிதையும்,வசனமும் மனத்தினில் நின்று நிழலாடுது 
 உன் குறளோவியமோ வள்ளுவனேயே  நினைக்ச்  செய்கின்றது  
வள்ளுவர்கோட்ட குறள்  ஓவியமே, நீ என்றும் நிலைத்த காவியமே!

 உன் பேனா குனித்தாலும் உன் எழுத்துக்கள் நிமிர்ந்தே நிற்கின்றது 
 தமிழே  உன்னால்  செம்மொழியாய் சிறப்புடன் உலகில் திகழ்கின்றது 
 தமிழின் பெருமையை உலக தமிழ் மாநாட்டால்  சிறப்புற செய்தாய் 
 மெரினாவில் அண்ணாவின் பக்கத்திலேயே  இடம் பிடித்தாய் !  

 கலைஞ்சன்  இருக்கும்போது யாரும்  அவர் செய்ததை  புகழ்வதில்லை  
 அவர் இறக்கும்போது யாரும் அவரை புகழாமல்  இருந்ததில்லை  
 உன் போல் எந்த தலைவனுக்கும், உலகமே  அழுததில்லை 
 உயிர் பிச்சை கேட்டு இறைவனை என்றும் தொழுததில்லை

உன்னைப்போல், சொல்வல்லன் சோர்வு அடைவதில்லை 
உன் சொல்லாலே எதிரியை வீழ்த்த என்றும் தயங்குவதில்லை 
தடைக்கற்கள் உண்டெனினும் தடத்தோள்கள் உண்டு என்றவரே 
எதிர்த்து நின்றரோர்  தமையெல்லாம் எளிதாக வென்றவரே !

முத்துவேலர்,அஞ்சுகம் பெற்று எடுத்த முத்தமிழ் காவலரே 
அரசியலிலும் சாதனை படைத்து, இன்று சரித்திரமானாய் 
உன் திறமையால், உன்னத தலைவனாய் உருவெடுத்தாய் 
உன் இடம் வெற்றிடமே, உன்னை என்றும் மறவாது தமிழினமே !


ரா.பார்த்தசாரதி