வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கவனமாய் இருப்போம்

கவனமாய் இருப்போம் 

வெள்ளிச்சம்  வந்தால், இருள் விலகும் ,
தர்மம் செய்வதால், வந்திடும் இன்பம் !

இதயத்தில், அன்பு நிறைந்தால் , வன்மம் வெளியேறும்,
இரக்கம் நிரம்பினால் கோபம் வெளியேறும் !

பொறுமை நிரம்பினால், பொல்லாங்கு வெளியேறும் ,
பிறர்நலம், பேணினால், தன்னலம்  வெளியேறும்  !

இன்மொழி நிரம்பினால், வசைமொழி வெளியேறும்,
துணிவு ஏற்பட்டால்  அச்சம் வெளியேறும்! ,

நேர்மை நிரம்பினால், கயமை வெளியேறும்,
திருப்தி அடைந்தால், பொறாமை வெளியேறும்!

முயற்ச்சி  செய்தால், தடைகள் வெளியேறும்,
தோழமை கொண்டால், பகைமை வெளியேறும் 1

 வெளியேற்றபட   வேண்டியதை கணக்கில் எடுத்து,
நிரப்புவதிலே    என்றும்    கவனமாய்   இருப்போம்!

ரா. பார்த்தசாரதி
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக