வியாழன், 25 ஜூன், 2015

திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள்



                                                    திருமணத்தின்  முக்கிய  நிகழ்ச்சிகள் 


                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  

1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    

4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  

7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
================================================================== 

கணவன் மனைவியுடன்  இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,

*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 

*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.

*தேவைப்படும்போது  பாராட்டுதல்.
==================================================================  

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை. 
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.


- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நலத்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கை விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது. இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது


தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.


மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது ஏன்னு தெரியுமா...??

சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார்.
=======================================================================

திருமணத்தின் போது ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த*னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் முயற்சிப்போம்..
==================================================================== 

திங்கள், 22 ஜூன், 2015

புரியாத புதிர்



படக் கவிதை போட்டி 17

 பன்முகமாய் பரந்திலங்கும்  பான்மதியே 
செங்கதிரை விரித்து தோன்றும் பொன்னிற பானுமதியே 
கீழ்வானில் எழுந்து  குமரியிலே  மறைந்து,
பொன்மாலை  பொழுதிற்  அலைகள்  அசைந்து 

நின்னை  காணுங்கால்  ஓர்  இயற்கை  அழகு 
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
எனது, உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !


ரா.பார்த்தசாரதி 

 புரியாத புதிர் 

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டை  பின்பற்றுகிறேன் 
அன்று உன் நிலைமை கண்டு பிரம்மிப்பு அடைந்தேன்,
உன்னைப்போல்  உழைக்கின்றேன் இன்று நானே, 
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன் 

இன்று திருமணம் ஆனதால் பிற நலமாக  சிந்திக்கின்றேன் 
என்  குழந்தை,என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்  
ஏன் இந்த மாற்றம்,  என்  நிலைமை  என்னை மாற்றியதா, 
பெண்  இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா !

பிறந்த வீட்டின் குலமும், புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும் 
இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும் 
பெண்ணின் நினலைமை மதிற் மேல் பூனையாக  அமைந்தாலும் ,
பெற்ற தாயையும், தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும், 

அன்று கல் ஆனாலும் கணவன்,புல் ஆனாலும் புருஷன் ,
இன்று  ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும் ,
ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே  
வாழ்கையில்  அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும் ! 

நீயும் என்வயத்தில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய் ,
உன் அன்பும், தியாகமும், எங்களுக்காக அளித்தாய் 
நீ செய்த பாசத்தையும்,  அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா, 
தாய்பாசத்தையும், தந்தையின் அரவணைப்பையும் திருப்பி தரமுடியம்மா   !

தாயின் பாசமும், அன்பும்,  அவள் மடியிலிருந்து தொடக்கம், 
பெண் தாய்க்கு  தாயாக  இருந்தாலும் மீண்டும் பிறக்கும் ,
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி,
 பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே   வெற்றிக்கு மாலை !

பல உருவினில் இருந்தாலும், இன்றும்  ஒரு புரியாத புதிர் !

சனி, 13 ஜூன், 2015

அயல் நாட்டு மோகம்



                                                    அயல் நாட்டு மோகம் 

வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம் 
புதிய தேசம், புதிய மனிதர்களின் நேசம் 
மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே 
உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை 
ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை 
பெற்ற மகன்,மகளின் ஸ்பரிசம் இல்லை 
அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

அன்னமில்லை, நேரத்திற்கு நமக்கு ஆகாரம்மில்லை 
பண்டிகை இல்லை, அன்புகாட்ட  யாரும்மில்லை 
உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை,
வேதனையும், துன்பத்தையும்,வெளிக்காட்டத நிலை !

பணம்மிருக்கும் நாட்டில், நல்ல மனதிர்க்கு இடமில்லை 
குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை 
வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள் 
வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
கலைமகளை, ஒதுக்கி, காசினைப் பூஜிக்கின்றாயே !

பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
பண்பு, கலாச்சாரம் இவற்றின் மதிப்பு தெரியும் 
பணத்திற்காக பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
 அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

பிள்ளைகளை பணத்திற்காக புதைகுழியில் தள்ளுகின்றோம்
பாசத்தையும், அன்பையும், தள்ளிவைத்து துயரப்படுகின்றோம்
பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
தாய்நாட்டின்  வளர்ச்சியை   தடை செய்கின்றோம் !

பணம் எட்டி பார்க்கும் , பாசம் பக்கத்தில் இருக்காதே  
பணத்திற்காக ஆசைப்பட்டு,உறவுகள் துரத்தபடுகிறதே   
தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
எண்ணியே வாழ்க்கை  இருதலை கொல்லியாய் இருக்கிறதே!

என்றும்     காலங்கள்   மாறி,  தன்னிறைவு  பெற்றாலும் 
பணம் இருந்தாலும், வசதிகள்  இருந்தாலும் 
மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும் ,
என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம் ! 

ரா.பார்த்தசாரதி 


  







குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்




                                        குழந்தை தொழிலாளர் ஒழிப்பு  தினம்

  குழந்தை பெறும்போது  ஏற்படும் மகிழ்ச்சி
  அதனை வளர்க்கும்போது  பல வித நிகழ்ச்சி
  குடிகார கணவனால் ஏற்படும்  அவதி
 குடித்துவிட்டு பிள்ளைகளை அடிப்பதும் தலைவிதி!
,
பள்ளிக்குச் செல்லும் வயதில் வேலைக்கு அமர்த்துவது
பல இடங்களில் குழந்தைகளை  அடமானமாக வைப்பது,
கிடைத்த பணத்தை வீண் செலவு  செய்வது
இதனையே குடும்ப தலைவன் பெருமையாக நினைப்பது !

கல்வீ   இன்மையால் கெட்ட  பழக்கங்களுக்கு அடிமை
பிள்ளைகள் பல கேளிக்கைகளில் ஈடுபடும் தன்மை
எதிர்காலத்தை பற்றி நினைக்காமல் காலம் தள்ளும் நிலைமை
மாநிலங்களும், நாடும்  அடைவதோ  ஏழ்மை !

கல்வி கொண்டு, குழந்தைகளின்  அறியாமையை  நீக்குவோம்
குழந்தை  தொழிலாளர்  ஒழிப்பிற்கு  கூரல்  கொடுப்போம்
அரசாங்கத்திற்கு  உறுதுணையாக, சேர்ந்தே செயல்படுவோம்
உலக குழந்தை தொழிலாளர் தினத்தன்று நிறைவேற்றுவோம் 

ரா.பார்த்தசாரதி

     

வியாழன், 11 ஜூன், 2015

ரேகா திருமண வாழ்த்து மடல்



                                   திருமண வாழ்த்து மடல்                           .

மணமகள்: ஆர் . ரேக்கா                              இடம்: வசந்தம் கல்யாண மண்டபம் 
மணமகன்: எம். சாய்கணேஷ்                   ஆரிய கௌடா ரோட்      
                                                                                    தேதி :    12-06-2015 


1. இன்று , வசந்தம் கல்யாண மண்டபத்தில் ஓர் கல்யாண மேடை,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  கல்யாண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

4. காதலை முடித்து, திருமணத்தை எதிர்நோக்கும் சாய் கணேஷ்  எனும்    
                                                                                                                                           ஆடவனே
   என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கை      
                                                                                                                         நடத்திடும்  வரை! 

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ ரேக்கா என்று சொல்வது பழக்கம்   !

7.  காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!

8.மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9.  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

12. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
      மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

13. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி . 

வெள்ளி, 5 ஜூன், 2015

Ayal Naatu Mogam


Ayal Naatu Mogam
வாசல் வரை வந்த
துன்பமெல்லாம் வழியனுப்ப
வான்பறவை மேலேறி
அயல்தேசம் காணப்
பணங்கட்டிப் படியேற
விடை கொடுக்கும் நிலையம்
விமான நிலையம்…!

புதிய தேசம் போனதும்
புதிரான மனிதர்கள்…
இவர் மொழிதனைப் பயின்று
குணந்தனை உணர்ந்து
கொடுத்திடும் தொழிலைக்
கண்விழித்துச் செய்திட
உறுதிகொண்டு நுழைபவன்
சாதிப்பது நிச்சயம்…!

அன்பான அன்னையின்
அரவணைப்பும் இல்லை
ஆசை மனைவியின்
தலைகோதலும் இல்லை
பெற்றெடுத்த மக்களின்
ஸ்பரிசமும் இல்லை
ஓடிவந்து உதவும் உயிர்
நண்பனும் இல்லை..!

அன்னமில்லை ஆகாரமில்லை
அன்புக்கு யாருமில்லை
பண்டிகைக் கொண்டாட்டமில்லை
விடுமுறை நாட்களில்லை
உணர்வுகள் அத்தனையும்
வெறுமையாய் மாற்றிக்கொண்டு
வேதனை நிலை வெளிக்காட்டாது
இயற்கையோடு இயந்திரமாய்
வெளிநாட்டில்  நாம்…!

பணமிருக்கும் நாட்டிலே
நல்ல மனதிற்கிடமில்லை
குணமிருக்கும் தாய்நாட்டில்
பணத்திற்கு வழியில்லை
வாழ்க்கையெனும் ஓடத்திலே
வந்தொட்டும் தடைகளாய்
வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!
கலையெலாம் நன்கு கற்றுக்
காரியம் வெளிநாட்    டில்தான்
நிலைபெற வாழல்’ என்னும்
நினைப்பினைப்  பெற்றோர் பிள்ளை
தலையிலே பதிக்கின்  றாரே!
தமிழதற்(கு) உதவா தென்றும்
கலைமகள்  ஒதுக்கி வைத்துக்
காசினைப் பூசிப் பாரே!
=====================================================================================
உற்றது பிறரும் பார்க்க
உயர்ந்ததாய் வேண்டு மென்றே
கற்றதின் மேலே வைத்த
காதலா இந்தப் போக்கு?
மற்றைய நாடு சென்று
மங்காத செல்வம் சேர்க்கப்
பெற்றவர் தமக்குள் கொண்ட
பித்தமே இந்த நோக்கு!
‘இதந்தரும் தமிழைக் கற்றால்
என்வரும்? இங்குள் ளோர்போல்
பதர்களாய்  மடிவ  தற்கோ?
பணந்தரும் வெளிநா  டெ’ன்றே
விதந்துரை செய்து பிள்ளை
வெளிநாடு செல்ல வைத்து
நிதமவர் நினைப்பில் ஏங்கி
நிம்மதி இழக்கின்  றாரே!
மதங்களைப் போல இன்று
மற்றொரு நாடு சென்று
விதவித மான இன்பம்
விரும்பிடு கின்ற  ஆசைச்
சிதைவளர்க் கின்றார்! தங்கள்
சிறுவரைப் பலிகொ டுப்பார்!
புதைகுழிக் குள்ளே போகும்
புத்தியில் தெளிகி லாரே