புதன், 12 நவம்பர், 2014

குழந்தைகள் தினம்

                                                             குழந்தைகள் தினம் 


குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு 
பெண் சிசுவை இரக்கமின்றி கொல்வதும் நம் நாடு 
பெண் குழந்தைகளை சுமையாக நினைப்பதும் நம் நாடு .
காலபோக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு.

ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில் 
அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர் ,
இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர் 
இந்நிலைமை கண்டும் தத்து எடுக்க சிலர் தயங்குவர் !

தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை 
நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை, 
அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள் , 
அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள் 

குழந்தையும் தெய்வமும்  ஒன்று என  கொண்டாடுகிறோம் 
பிரதமர் நேருவின்  பிறந்த நாளாக கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே 
குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா  
நம் நாட்டில் உள்ள  எல்லா குழந்தைகளும் அவரை போற்றிடுமே! 

 குழல் இனிது  யாழ் இனிது,  என்ப தம் மக்கள் 
மழலை சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு,
குழந்தை செல்வம்  வாழ்கையின் இன்றியமையாத செல்வமே  
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே  ! 

ரா.பார்த்தசாரதி 

செவ்வாய், 4 நவம்பர், 2014

புரியாத புதிர்



                                                               புரியாத புதிர் 

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டை  பின்பற்றுகிறேன் 
அன்று உன் நிலைமை கண்டு பிரம்மிப்பு அடைந்தேன்,
உன்னைப்போல்  உழைக்கின்றேன் இன்று நானே 
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன் 

இன்று திருமணம் ஆனதால் பிற நலமாக  சிந்திக்கின்றேன் 
என்  குழந்தை,என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்  
ஏன் இந்த மாற்றம்,  என்  நிலைமை  என்னை மாற்றியதா, 
பெண்  இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா !

நீயும் என்வயத்தில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய் ,

உன் அன்பும், தியாகமும், எங்களுக்காக அளித்தாய் 
நீ செய்த பாசத்தையும்,  அன்பையும் திருப்பி தரமுடியுமா 
உன்னிடம் கற்றதனால் இன்று என் வாழ்க்கை எளிதாகிறது !

தாயின் பாசமும், அன்பும்,  அவள் மடியிலிருந்து தொடக்கம், 
பெண் தாய்க்கு  தாயாக  இருந்தாலும் மீண்டும் பிறக்கும் ,
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி,
 பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே   வெற்றிக்கு மாலை !

பல உருவினில் இருந்தாலும், இன்றும்  ஒரு புரியாத புதிர் !


ரா.பார்த்தசாரதி