திங்கள், 23 அக்டோபர், 2023

 


                                 காதல்  நெஞ்சம் 

* அன்பே !  ஆருயிரே1..அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள்
   மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று அழியாதவைகள் !

* காட்சி அளிக்கும்படி கரும்பலகையில் எழுதி வைச்ச காதல் அல்ல !
 துடைப்பான் கொண்டு துடைப்பதற்கு முயல்வது நல்லது  அல்ல !

* ஒப்பந்தம் போட்டு உண்டானது இல்லை  உன் நினைவுகள்
   உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல !

*என்னை நீ மறந்து விடு' என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது உன் நினைவுகள் இல்லா உலகில் !

உன்னுடன் மயங்கி நின்றேன்  உள்ளதால் நெருங்கி வந்தேன் 
என்னுயிர் காதலி  !  என்னுயிர் தேவதையே  என்பேன் !!  

* அந்தி மழையின் மண் வாசனை அதனின் பங்கிற்கு உருட்டிச் செல்கிறது
  உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !

* என் எழுத்தாணிக்கும் இயலுவதில்லை உன் நினைவின்றி எழுதத் தொட்ங்குமா !
    நான் எழுதுவது கடிதம் அல்ல ! என் நெஞ்சிம் உன் பெயரை சொல்லுமா !

  தொட்டாசிணுங்கி போல்  உன் மனம் சட்டென்று மூடி கொள்ளுமே 
   உன் மனம் மூடினாலும்,  உன் இதயம் பட படக்குமே !

* மதுரம் இல்லாத தேனீர் பருகும் போதெல்லாம் உன் நினைவுகளை கொள்கிறேன்!
   என்  நினைவுகள் சிந்திப்பதே இல்லை என்னை தந்து விட்ட பிறகு !
 
* மறந்து விடுவதற்கோ மறைப்பதற்கோ...மரணம் ஒன்றே மார்க்கம்!
* அதுவே உனக்கு சொர்க்கம் எனில்,மகிழ்ச்சியாய் ஏற்பேன் உன்நினைவோடு !

  ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக