சனி, 25 நவம்பர், 2023

தமிழும், தமிழ் மக்களும்

 


                                                 

                                                  தமிழும், தமிழ் மக்களும் 

        தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
        வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
       சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
       நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?

      கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
      எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
      மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
      சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
      
     கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
     ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம் 
     முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
     மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை  

   பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே 
  அப்துல்கலாம், சர்  சி.வி  ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே 
   ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை 
   அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
   
   எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
   தங்கள்  ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
   நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
   நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !

  சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
 இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
  அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே  !
  இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !

தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள் 
மக்களே,  குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
ஜனநாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள் 
மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
தன்னலமற்ற தலைவனையே  பதவி ஏற்க உதவிடுங்கள் !
வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !







      

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக