ஞாயிறு, 10 டிசம்பர், 2023

மழை பேசுகிறது

 




                                              மழை பேசுகிறது 

         விசும்பின் கீழே வீழ்வதெல்லாம்  மழைதானே !
           பருவத்திற்கு ஏற்ப காலத்தில் பொழிவதும் மழைதானே !
          கீழே வீழ்ந்தாலும் தடுத்து நிறுத்துவதும்  மனிதன்தானே !
          மனிதர்கள் வீடு கட்ட  என் தடங்களை பலி கொடுத்தேனே !

          என் உடன் பிறப்புக்களையும் நானே பொழிந்து அழித்தேனே 
          என் பாதையில் செல்ல பல வழியில் தடைபட்டு நின்றேனே 
          அணை கட்டாமல் பல வழிகளில் வீணாய் கடலடைந்தேனே 
         அந்நியமாய் கேட்பாரின்றி பல வருடங்கள் அழித்தானே !

         இந்திரனிடம் அனுமதி பெற்று புயலுடன் பொழிந்தேனே !
         கடுங்கோபத்துடன் மிக்ஜெம் எனும் பெயருடன்சூறையாடினேனே  
         முடிவில் வழியின்றி எல்லா இடங்களிலும் கொட்டித்தீர்த்தேனே
         சக்ர வியூகத்தில் அபிமன்யூ போல் நடுவில் மாட்டிக்கொண்டேனே!

        நான் யாரிடம் முறையிடுவது என நினைத்தேனே 
        நாட்டையே விற்பவன் இந்திரனையே பொம்மையாக்கினானே 
        பணத்தால் எல்லாம் முடியும் என பல வருடமாய் தீர்மானித்தானே 
        நான் யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சாடினானே !

        வெளிவரத்தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றேனே 
       நாட்டுத் தலைவன் என்னையே தந்திரமாய் பழித்துரைத்தானே !
       நான் கோபப்பட்டுதான், வீட்டையும்.மக்களையும்சுற்றிவளைத்தேனே 
        என் வழித்தடங்களை சரிசெய்ய மும்மூர்த்திகளை வேண்டினேனே!   

       ரா.பார்த்தசாரதி 
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக