வெள்ளி, 1 டிசம்பர், 2023

பாரதியே ! மறுபடியும் எழுந்து வா

 


                                      


                             பாரதியே ! மறுபடியும் எழுந்து வா 

            பாரதிபோல்  ஒருவன் தமிழகத்திற்கு  வருவாரா !
            நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுப்பாரா !
            நாட்டில் கல்வியும் அறிவையும்தானே வளர்க்கச்சொன்னேன் 
           ஆண் பெண் வித்தியாசமின்றி ஆடையை குறைக்க சொன்னேனா !

           நாட்டிலுள்ள மக்களுக்கு நன்மை செய்ய சொன்னேனே !
           நாட்டையே கூறு போட்டு விற்று லாபமடைய சொன்னேனா !
           வாணிபம்,பெருக விளைப்பொருளை விற்க சொன்னேனே !
           கனிமங்களை சூறையாடி,ஆறுகளை கெடுக்க சொன்னேனா !

          சுயநலம் மிகுந்து பத்து தலைமுறைக்கு பணம் சேர்க்க சொன்னேனா
          மக்களை குடிகாரனாக்கி வாழ்க்கையை கெடுக்கசொன்னேனா !
         நாட்டின் தலைவர்கள் நீதி தவறி நடப்பதும் முறையா !
          கண்டிக்காத அரசும் இன்று மக்களுக்குத் தேவையா !

          அன்று விடுதலைக்கும், பாமரனுக்கும் துணிந்துகவிதை எழுதினேன் !
          வெள்ளையர்களே மேல்இக்கொள்ளையர்களை விட என எழுதுவேன்
         பாரதி போல் ஒருவர் தமிழகத்திற்கு வருவார் ! எதிர்த்து கேட்பார் !
         மக்களை திருத்துவார் ! நல்லாட்சிக்கு  வழி  வகுப்பார் !

         எழுத்துரிமை  பேச்சுரிமை  என்பது எங்கே போயிற்று !
        ஜனநாயகம் என்பதே கேள்விக்குறியாக  போயிற்று !
        நானே  தமிழகத்தை கண்டு பதறி கடற்கரையில் சிலையானே !
        பராசக்தியை வேண்டி தர்மத்தை நிலைநாட்ட வேண்டினேன் !

                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக