வெள்ளி, 3 நவம்பர், 2023

 




                                                   எங்கே சமூக  நீதி

              இதுதான்  நல்லாட்சியா ? இதுதான் சமூக நீதியா 
              நிர்வாணமாக்கி  இருவரிடம் கொள்ளை அடிப்பதும்,
              கடையில் தேநீர் கேட்டவனிடம் இனத்தினால் ஒதுக்கியதும் 
              குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும்
              மனிதனின்  தலை மீது சிறுநீர் கழித்துஅவமானப்படுத்துவதும்,
              மாநிலம், நாடு என்றாலும் எல்லோர்க்கும் ஒரே நீதிதான் 
              தவறு எங்கு நடந்தாலும் அரசு தலையிடவேண்டுமே 
              இச்சமூக  அநீதிக்கு அரசு தண்டனை கொடுக்கலாமே ,

              திராவிடம்  பேசுபவன்,  சமூக  நீதியை பற்றி பேசுவானா !
             சந்தானத்தை பற்றி பேசுபவன், சாராயக்கடையை மூடுவானா !
             கோர்ட்டில் முறையிடாமல், முட்டையை காட்டி ஏமாற்றுவானா 
              

              பெண் உரிமை பணத்தை  சிலருக்கே கொடுப்பானா !
              பெண்கள்  இலவசமாக செல்ல ஓட்டை பேரூந்து அனுப்புவானா 
              காவல் துறையை கைபொம்மையாக்கி நீதி தவறுவானா 
              எல்லாம் சரியாக நடக்கின்றது என பொய்  உரைப்பானா !
              மக்கள் ஒரு நாள் தட்டி கேட்பார்கள் என  நினைபானா !
              கேட்டால்  அடக்கு முறை ஒன்றே  என தீர்மானிப்பானா !

              எழுந்திடுங்கள்! எதிர்த்திடுங்கள் ! சமூக நீதியைகாப்பாற்ற !
              பொருளாதாரத்தையும், சமூகநீதியையும் காப்பாற்றுங்கள் 
              காந்தியின் வழியை பின்பற்றி இவற்றை நிலைநாட்டுங்கள் 



       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக