வெள்ளி, 17 நவம்பர், 2023

சற்றே சிந்தித்துப் பார் தமிழா ! தமிழா !!

    



                                                   

                                



                  சற்றே  சிந்தித்துப் பார்  தமிழா ! தமிழா !!

                 எங்கே செல்கிறது நம் தமிழ் நாடு ? தமிழா !
                 சற்றே நினைத்துப்பாருங்கள் தமிழ் மக்களே !
                 இன்று காண்பது என்ன! கோடி கணக்கில் லஞ்சம் 
                 பொறுப்புள்ள மந்திரிகளே லஞ்சத்திற்குள் தஞ்சம் 

                 லஞ்சம் வாங்கினாலும் தண்டனையை தடுக்கலாம் 
                 நீதியை வளைத்தால் தண்டனையின்றி தப்பலாம் !
                 லஞ்சம் வாங்கியவன் சிறிதும் வெட்கப்படவில்லை 
                 மக்கள் வரிப் பணத்தை சுருட்டுவதாக நினைப்பதில்லை 

                 கண்டுபிடித்தாலும் அதனை திருப்பி கொடுக்க மனமில்லை !
                 எதையும் பணத்தால் சாதிக்கலாம் என்கிற நினைப்பு !
                 நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கு? தீர்வு ஒன்றும்மில்லை 
                 கொள்ளையடித்ததை பங்குபோடுவதற்கே நேரமில்லை !

                 கோடிக்கணக்கில்  நாட்டையே விற்றாலும் ஆச்சரியமில்லை !
                  அதனை வேறு நாட்டில் முதலீடு செய்ய தயங்குவதில்லை !
                  ஏமாறும் மக்கள் ஏமாந்துகொண்டே  இருக்கவேண்டும்  
                  என்றைக்கு திருந்துமோ ! என்று திறன் கொண்டு எதிர்க்குமோ!

                  மக்களே  சபதம் மேற்கொண்டு  ஓட்டுக்காக பணம் வேண்டாம் 
                  நடுநிலை தவறாத நீதியும், அரசியலும் ஆட்சி செய்ய வேண்டும்  
                  கோ டிக்கணக்கான பணத்தை அரசே திரும்ப எடுக்க வேண்டும் 
                  எடுத்த பணத்தை நல்வழிலயில் மக்களுக்கே செலவிட வேண்டும் 


                  ரா.பார்த்தசாரதி 
                       

                  
                                   
                                   
1
                                 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக