வியாழன், 12 ஜூன், 2014

praveen thiruman vazthu madal

                பிரவீன் நாட், ஐஸ்வரிய   திருமண வாழ்த்து மடல்

மணமகன்:பிரவீன் நாட்                           இடம்: திருச்சி கலைவாணர் அரங்கம் 
மணமகள்:  ஐஸ்வரியா                             தேதி :07 - 07-2014

1. இன்று திருச்சி கலைவாணர்  அரங்கில் ஓர் கல்யாண  மேடை ,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. காதலை முடித்து, திருமணம் புரியும் பிரவீன் நாட் எனும் ஆடவனே !    
                                                                                                                                           
   என்றும் நீ  அமெரிக்காவில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே
 
4.  காதல் அழகாய் பூத்துதே,  சுகமாய்  தாக்குதே,
     இரு உள்ளங்கள் சொல்லாமல், கொள்ளாமல் பந்தாதுடுதே !

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? கழுத்தினில்  தாலி விழும் வரை !   

6. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
  * வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

7  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !                                                                                                      
8. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம்
     திருமதியின்  பெயரோ  ஐ ஸ்வரியா என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
 
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  பிரவீன் நாட், ஐஸ்வரியா திருமணம்.

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு)

       ரா.பார்த்தசாரதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக